விளக்கம: பனைக்கை ... பனை மரம் போன்று நீண்டு தொங்கும் துதிக்கையும், முக படம் ... முகத்தில் அணிந்த சித்திர வேலைப்பாடு அணிந்த சீலையும், கரட மதம் ... இரண்டு கபால மத நீரையும், தவள ... வெண்ணிறத்தையும் உடைய, கசம் ... (கஜம்) ஐராவதம் என்னும் யானையை, கடவுள் ... வாகனமாகக் கொண்ட இந்திரன், பதத்து இடு ... கால்களில் சூரபத்மனால் இடப்பட்ட, நிகளத்து ... விலங்கின், முளை ... ஆணியானது, தெரிக்க அரம் ஆகும் ... உடை பட்டு விழ அரம் போல் செயல்படும் (குகன் வேலே).