Good words super sweet love words ❤️ 💕 💖 ♥️ 💗 👏 ❤️ 💕 💖 ♥️ 💗 👏 super well done 👌 👏 ✔️
@devaanbu1548Ай бұрын
Amen 🤴 Amen 🤴 Amen 🤴 🙏 sister thanks pastor you will never forget you so much thanks 😊 🙏 Amen 🤴 🙏 😊 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 😮😮😮😮😮😮😮 oha oha oha wow wow wow that's awesome 👌 👏 👍 super well done 👌 👏 ✔️
@gnanamani483Ай бұрын
ஒலி அமைப்பு மிகவும் அருமை.மிகவும் தெளிவாக நன்றாக புரியும்படி இருந்தது. தங்களது ஊழியம் இன்னும் பல ஆன்மாக்களை இறைவன் பாதம் சேர்த்திட வேண்டுகிறேன்.கடவுளுக்கே மகிமை உண்டாவதாக. கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன்.
@Catholic_bible_audio_tamilАй бұрын
தங்களின் கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பயணிப்போம்🙏
Please pray..... Asir james Kandankuzhi Antharapuram. Poothappaandi Nagercoil. இவர் 11 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார்.மகனின் உயிருக்கு ஆபத்தும் உள்ளது. மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மதுரை கோட்டில் குடும்பமே சென்று stay order வாங்கி வைத்து உள்ளார்கள். ஆள் பிடி அரசியல் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை நான் பார்க்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட படுக்க உனக்கு தகுதி உண்டா தாலியை கழற்றி விட்டு பேயிட்டே இரு என கூறுகிறார். அடுத்த திருமணம் சொந்ததுல பண்ண உள்ளார்.மனம் திருந்தி வர ஜெபியுங்கள் ஜயா
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
ஜெபத்தில் இணைவோம் 🙏
@dineshrajeshdinesh287 Жыл бұрын
Amen🙏❤️🙏
@BibleStudy_CoupleVerses Жыл бұрын
Praise the Lord🎉🎉🎉
@carolinrathinum2311 Жыл бұрын
Palaniyandi magan and i and i andi
@MinMin-lk3ew Жыл бұрын
Amen
@vimalvikramvikram3454 Жыл бұрын
Tank you sister
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
kzbin.info/www/bejne/n37CnadnfdiDd9k
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீது மக்கள் தொகையை கணக்கிடல் அதன் தண்டனையாக ஆண்டவர் கொள்ளை நோயை அனுப்புதல்❕ kzbin.info/www/bejne/n37CnadnfdiDd9k
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
kzbin.info/www/bejne/qYnFmmqtmtabsNU
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
அம்னோன் தன் சகோதரி தாமார் மீது ஆசைப்படல் ❕2 சாமுவேல் அதிகாரம் 13 kzbin.info/www/bejne/nISoYqBriZp0l8k
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் 2சாமுவேல் அதிகாரம் 22 kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் 2சாமுவேல் அதிகாரம் 22 kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் 2சாமுவேல் அதிகாரம் 22 kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் 2சாமுவேல் அதிகாரம் 22 kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் 2சாமுவேல் அதிகாரம் 22 kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
@Catholic_bible_audio_tamil Жыл бұрын
தாவீதின் வெற்றிப் பாடல் kzbin.info/www/bejne/Y5PVmXSBqtxric0
God bless you !! waiting for your next upload mam you are doing a great work
@Catholic_bible_audio_tamil2 жыл бұрын
Thank you!
@asmithajames.a22693 жыл бұрын
Good bless you akka
@Catholic_bible_audio_tamil2 жыл бұрын
Thank you!
@Anime_gamer1083 жыл бұрын
Praise the Lord,Amen,Hallelujah,Ave Mareia, St.Joseph pray for us...
@seleldjdfmn2214 жыл бұрын
Please remember me at 40 subscribers. More content please. Also, I Really Want to be youtube friends :O
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
31 மேலும் ஆண்டவரிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டுச் சென்றது; அது கடலிலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்தது; பாளையத்தின் அருகில் ஒருபுறம் ஒருநாள் பயணத்தொலையிலும் மறுபுறம் ஒருநாள் பயணத் தொலையிலும் பாளையத்தைச் சுற்றித் தரைக்கு மேல் இரண்டு முழ அளவு உயரத்தில் விழும்படி செய்தது. 32 மக்கள் எழுந்து அந்தப் பகல்முழுதும் இரவு முழுதும், மறுநாள் பகல் முழுதும் காடைகளைச் சேர்த்தார்கள். மிகக் குறைவாகச் சேர்த்தவன் பத்து கலம் அளவு சேர்த்திருந்தான்; அதை அவர்கள் பாளையத்தைச் சுற்றி வெளியே முழுதும் தங்களுக்காகப் பரப்பி வைத்தார்கள். 33 அவர்கள் விழுங்கு முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார். 34 ஆகவே அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா என்ற பெயர் வழங்கியது. ஏனெனில் பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர். 35 கிப்ரோத்து அத்தாவிலிருந்து மக்கள் பயணமாகி அசரோத்துக்கு வந்து, அங்கே தங்கினர்
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை; 46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 47 ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை. 48 ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது; 49 லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்; இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்; 50 லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து; அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்; அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள். 51 புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்; கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான். 52 இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர். 53 லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்; உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே. 54 இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
39 நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள். 40 முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள். 41 ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும். 42 ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்; இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும். 43 இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 44 இவ்வாறு மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
36 குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்; இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர் நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார். 37 அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால், 38 குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார். 39 ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால், 40 அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார். 41 வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு, 42 பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார். 43 கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால், 44 குரு வந்து பார்ப்பார். நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு. 45 எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். 46 வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன். 47 வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும். 48 குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில் நோய் குணமாகிவிட்டது. 49 வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்; 50 ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்; 51 கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார். 52 குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார். 53 உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும். 54 இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும் 55 உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும் 56 வீக்கம், சிரங்கு, வெள்ளைமறு ஆகியவற்றிற்கான சட்டம். 57 எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.”
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
50 குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து, 51 ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும். உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய். அது தீட்டானது. 52 அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில் அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும். 53 உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால் 54 குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார். 55 அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார். நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது. அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 56 கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும். 57 ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும். எனவே நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும். 58 ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும். இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும். 59 ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.”
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
37 சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று; அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். 38 ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால், 39 குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்; அவர் தூய்மையானவர். 40 தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர். 41 முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர். 42 மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம். 43 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால், 44 அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. 45 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, “தீட்டு, தீட்டு “, என குரலெழுப்ப வேண்டும். 46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். 47 ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில், 48 அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி, 49 உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.
@Catholic_bible_audio_tamil4 жыл бұрын
34 உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு; அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு. 35 அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு; அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில் அவை தீட்டுப்பட்டிருக்கும். 36 நீரூயஅp;ற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்; ஆனால் அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது. 37 விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று. 38 தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும். 39 உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். 40 அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். 41 தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது. 42 நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு. 43 நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது. அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள். ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். 44 நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர். நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது. 45 உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்! 46 விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே. 47 இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க!