முருகா சரணம்! வள்ளற்பெருமான் தமது 9வது வயதில் கந்தர் கோட்ட கோயிலில் முருகப்பெருமானைப் போற்றி மகிழ்ந்து பாடிய தெய்வமணிமாலை பாடல்கள் இன்று புதிய விறுவிறுப்பான மெட்டில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. அருட்பாடகர் வடலூர் கார்த்திக் அவர்களின் குரலின் அருளும் உணர்ச்சியும் நிறைந்த பாடலோடு வரிகளை நேர்த்தியாக இணைத்து முருகனின் திருவடிக்கே நம்மை ஆளாக்கி சமர்ப்பனமாக்கிய சன்மார்க்க அன்பரும் தொழில்நுட்ப வல்லுனருமாகிய தயவுதிரு அருட்ஜோதி அவர்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் நிலைத்து ஓங்க திருமுருகனின் சேவகனாய் வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!