Рет қаралды 229
www.pallikaranaisakthi.org
அழுகண்ணர் போற்றிகள்
அன்பு நிறை சிந்தையரே அங்கமெல்லாம் மருந்தாம் அழுகண்ண சித்தரே போற்றி ||1||
துன்பு நிறை மாந்தரின் பிணி போக்கி அருளும் அழுகண்ண சித்தரே போற்றி ||2||
முன்பு நீர்தாம் எளிய உயிர்களின் வதை தடுத்து நின்ற அழுகண்ண சித்தரே போற்றி ||3||
இன்புற்று வாழ எளிய தேக வகை யோக முறை வகுத்த அழுகண்ண சித்தரே போற்றி ||4||
அழுகண்ணர் போற்றியின் பொருள்
தமது உடல் முழுதும் மருந்தின் தன்மை கொண்ட அன்பு உள்ளம் நிறைந்தவர். நோயால் துன்பம் படுகின்ற மக்களின் துன்பங்களை போக்கி அருளக்கூடியவர். உயிர் பலிகளை தடுத்து சன்மார்க்கம் தழைவிக்க செய்தவர். மனிதர்கள் இன்பமுடன் வாழ எளிமையான உடல் யோக முறைகளை வகுத்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
அழுகண்ணர் சித்தரை பற்றி
இந்த யோக சித்தர் சர்வ காலமும் தியானத்தில் அமர்ந்து மனோன்மணியாளை தரிசித்து பேரானந்தத்தில் திளைத்து இருப்பவர். மிக எளிமையாக மற்றவர்களின் துன்பங்களுக்காக உருகும் மனம் கொண்டவர். தம்முடைய சீடர்கள் தம்மைவிட ஞானத்தில் மேலோங்க வேண்டும் என்று விருப்பம் உடையவர். இவரை அடிபணிந்து தொழுவதன் மூலம் தேவையான பொருள்வளம் பெறலாம், எதிரிகளை பணிய வைக்கும் ஆற்றல் பெற்றிடலாம். மேலும், நினைத்த்தை எளிதில் அடையும் சக்தி பெறவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
#sithargal #siddha #azhukannar #அழுகண்ணர்