Can caste be removed from Christianity ? | Balasekar | Albert Solomon | Immanuel | Leo Nelson | Eden

  Рет қаралды 3,850

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

Can caste be removed from Christianity ? | Balasekar | Albert Solomon | Immanuel | Leo Nelson | Eden
#balasekar #immanuel #albertsolomon #leonelson #agathiyan #siripomsindhipom #caste #edentvbiblereview
Eden Tv Bible Review
-----------------------------------
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
Seed to Our Channel : Bank Details :
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
-------------------------------------------------------------

Пікірлер: 75
@HolyGospelOfChrist
@HolyGospelOfChrist Жыл бұрын
பாஸ்டர் பாலசேகர் அவர்களுக்கு: *எங்கள் சபையில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; சமமாக அமர்ந்து சாப்பிடுகிறோம்; நாங்கள் தாழ்த்தப்பட்டவரின் வீடுகளுக்கு போகிறோம். அவர்கள் தரும் தண்ணீரை குடிக்கிறோம். இங்கே சாதி பேதமே இல்லையே!* பதில்: உங்கள் சபையில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; சமமாக அமர்ந்து சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் தாழ்த்தப்பட்டவரின் வீடுகளுக்கு போகிறீர்கள். அவர்கள் தரும் தண்ணீரை குடிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால், திருமணத்தில் சாதி பார்ப்பது தவறு என்று சபையாருக்கு போதிப்பீர்களா? நீங்களும் உங்கள் சபையாரும் சாதி பார்க்காமல் திருமணம் செய்வீர்களா? இந்த விஷயத்தில் உங்களுக்கும் இந்துக்களுக்கும் என்ன வேறுபாடு வந்துவிட்டது? அப்படியே ஒரு சாதி மறுப்பு திருமணம் நடந்தாலும் மணமகனும், மணமகளும் தீர்மானித்து நடக்கும் காதல் கல்யாணம்தானே தவிர பெற்றோரின் பூரண சம்மதத்தோடு, அவர்களுடைய ஆசீர்வாதத்தோடு நடக்கும் சாதி மறுப்பு திருமணங்களா? ஒரு வணிக வளாகத்தில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள்; பொருட்களை வாங்குகிறார்கள் என்பதற்காக அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் சாதி உணர்வற்றவர் என்றோ, அங்குள்ள வாடிக்கையாளர்கள் சாதி உணர்வற்றவர்கள் என்றோ கூறமுடியுமா? ஓர் ஆகாய விமானத்தில் பல சாதி மக்களும் அமர்ந்து பயணிக்கிறார்கள் என்பதற்காக அந்த பயணிகள் அனைவரும் சாதி உணர்வற்றவர்கள் என்று கூறமுடியுமா? அப்படியே *நீங்கள்* பூரண சாதி மறுப்பாளராக இருந்தாலும் சாதி உணர்வுடைய மற்ற பாஸ்டர்களைப் பற்றி நீங்கள் யோசிக்கவேண்டுமல்லவா! சாதியத்தின் கோரமுகத்தை பாஸ்டர்களுக்கு விளக்கிக் காட்டாவிட்டால், அவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள்? அவர்களுக்கு சாதி மறுப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுக்கவேண்டுமே! அதற்காக நீங்களும் எங்களோடு இணைந்து சாதி மறுப்பு விழிப்புணர்வூட்டும் பணி செய்யவேண்டும் என்று உங்களை வலியுறுத்துகிறோம். இது நம் கையிலிருக்கும் 99 ஆடுகளைப் பார்த்து களிகூர்ந்துகொண்டிருக்கும் நேரமில்லையே! தொலைந்தது ஒரே ஆடாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கண்டுபிடித்து மந்தையோடு சேர்க்கும் கடமையுணர்வு நமக்கு தேவையல்லவா! காணாமல் போன ஒரு ஆட்டின் உவமையில் 99 ஆடுகளை விட்டுவிட்டு, ஆயன் தொலைந்த ஒரே ஆட்டைப் பற்றி அக்கரைப்பட்டு தேடுவதை பார்க்கிறோம். அதேபோல நாமும் வழி தவறிய நம் சகோதரர்களுக்கு நல்வழிகாட்டும் கரிசனமுடையவர்களாக இருக்கவேண்டுமே! அதுதானே நாம் அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக இருக்கிறது!
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
பிரதர் இம்மானுவேல் மிகவும் தெளிவாக பேசுகிறார் ஊழியருக்கு இது தேவை இல்லை என்பது அவருடைய கருத்து அருமை
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
ஆயிரக்கணக்கான நாடார்கள் சாதி மறுப்பாளர்களாக மாறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
@HolyGospelOfChrist
@HolyGospelOfChrist Жыл бұрын
திரு பாலசேகர் ஐயாவுக்கு: *"உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பாயாக"* என்ற வசனத்தை (கலா. 5:14) மட்டும் போதித்தால் போதுமே; சாதியம் தவறு என்று பேசவேண்டிய தேவை இல்லையே! பதில்: _"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" (லூக். __10:27__)_ என்று இயேசு கிறிஸ்து கூறினார். அதை இணை. 6:5 மற்றும் லேவி. 19:18 என்ற பழைய ஏற்பாட்டு வசனங்களை சேர்த்து அப்படி கூறினார். _"அன்பாயிரு"_ என்று மட்டும் சொன்னால் போதுமென்றால் கடவுள் மோசேயிடம் *10 கற்பனைகளைக்* கொடுக்கவேண்டிய தேவையே இல்லையே! _"உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது (கலா. __5:14__)_ என்றும், _"விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே" என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், "உன் மீது அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன (உரோ. 13:9)_ என்றும் திருத்தூதர் பவுல் கூறுகிறார். அப்படியானால், அன்புக்குள் எல்லா கட்டளைகளும் அடங்கியிருக்கிறது என்று அறிந்த திருத்தூதர் பவுல், _கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது (எபே. __4:29__), யாவரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் __12:18__), கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே (உரோ. 15:7), ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். பழி வாங்காதீர்கள்; எதிரி பசியாயிருந்தால் அவர்களுக்கு உணவு கொடுங்கள் (ரோம. __12:19__,20), ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும் (கொலோ. __3:13__)_ என்றெல்லாம் போதித்திருக்கவேண்டிய தேவை இல்லையே! "அன்பாயிருங்கள்" என்று மட்டுமே போதித்திருக்கலாமே! இயேசு கிறிஸ்து, _"உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் *பிடுங்கி எறிந்து விடுங்கள்.* உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் *உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள்.* உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது (மத். 5:29,30) _ என்று தன் சீடருக்கு ஏன் போதிக்கவேண்டும்? _தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள் (மத். __5:39__-42)_ என்று ஏன் போதிக்கவேண்டும்? _யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார் (தி.ப. __10:28__)_ என்று திருத்தூதர் பேதுரு கொர்நேலியுவின் வீட்டில் கூறவேண்டிய தேவை இல்லையே! பேதுரு புறவினத்தாரையும் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்த அவருக்கு துப்பட்டி தரிசனம் காட்டவேண்டிய தேவை இல்லையே! _"அன்பு செய்யுங்கள்"_ என்ற கொள்கையை மட்டும் சொன்னாலே போதுமே! *தசம பாகம், காணிக்கை* என்ற பெயரில் விசுவாசிகளின் பணத்தை வாங்குவதற்காக பாஸ்டர்கள் பல மணிநேர வேதபாட வகுப்புகள் நடத்தவேண்டிய தேவை இல்லையே! _"அன்பாயிரு"_ என்று மட்டும் போதித்தால் போதுமே! அன்புள்ளவன் தானாகவே கொடுப்பானே! _கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக். __6:38__)_ என்று இயேசு கிறிஸ்து போதிக்கவேண்டிய தேவை இல்லையே!
@manidk3107
@manidk3107 Жыл бұрын
சரியான பதிலை கொடுத்தீங்க bro. Sunday school இல யிருந்து பைபிள் கதை கள் சொல்வது மட்டுமில்ல at least 5th 6th Std வயசு முதல், நம் இந்திய நாட்டின் special nsuper special caste arrangment சாதீய த்தை பற்றி இந்த சாதி எனும் கொடுமை கிறிஸ்து மார்க்கத்து எதிரான கொள்கை என்று சொல்லி கொடுக்க பட வேண்டும் . மேலும், இன்று இவ்வளவு காலம் கிறிஸ்தவ போதனை நம் நாட்டில் வந்துமே கூட , நம் மனங்களில் சாதீய முடை நாற்றம் போகாமலும் , in fact silent and open ஆக சாதீயம் ஊடுருவி சபையை கெடுத்து விட்டது என்றும் , கற்றுக் கொடுக்க பட வேண்டும் . இன்று தமிழில் பல காலங்களாக வேதம் 300 வருஷங்களாக மொழி பெயர்ப்பு உண்டாகியுமே ( தென் இந்தியா வில் முதலில், பின்னர் 150 வருஷங்களாக வட இந்தியாவில் இந்தியில் ) சாதி கொடுமைக்கு சரியான எதிர் போதனை இல்லை இல்லை இல்லவே இல்லை , இது வேண்டுமென்றே கண்ணை மூடிக்கொண்ட ஒரு குருட்டு தனம் . சபை மக்களுக்கு மத்தியில் உள்ளே சாதி ஆதிக்க உணர்வு , வெளிப்பாடுகள் தோன்றினால் கண்டன தெரிவிப்பு மற்றும் தண்டன னை நடவடிககைகள் தலைமை குரு உதலிய முன்னெடுக்க படவில்லை . For example சாதிய கேடு கண்ணோட்டம். உள்ளவர்கள் சபையில் இரா போஜனத்தில் சேரமால் குரு மார் பிஷப் மார் ஒதுக்கி வைக்க conversion ஆகும் போது , conversion ஆரம்பம் ஆன ? 200 வருஷங்கள் முன்னரே நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். இப்போதும் அது போல கண்டித்து உணர்த்தி திருத்தும் போதனை நடவ டி க்கை மிக அவசியம். குறிப்பாக சாதீய த்தின் ஆரம்பப் புள்ளி எங்கே ? ஆரிய வரவு க்கு பின் உள் நுழைந்த இந்த சாத்தானின் தந்திரம் எப்படி தனி மனித , குடும்ப , சமுதாய த்தில் விஷ மரமாக வளர்ந்து இருக்கிறது ? எப்படி இதை நமக்குள் வெட்டி வீழ்த்த வேண்டும் என்பது பற்றி கருத்து பரி மாற்றம் விவாதம் Sunday School senior level இல். வேண்டும்.n
@user-wi2hg7mt1r
@user-wi2hg7mt1r Жыл бұрын
உலகத்தின் ஒத்த விஷயங்களை தரிக்காமல்....ஒற்றை தேவனின் அன்பின் வழியே வாழ்வோமானால்....நமக்கு சாதி என்பது தீண்டத்தக்கது, குப்பை, சாதியால் கடவுளை நெருங்குதல் என்பது இயலாத காரியம் என்பதை உணர்வோம். ஆகவே அன்பைப் பற்றி பேசும் மக்கள் எத்தகைய பிறிவினையோ, அடுக்குகளையோ,படிநிலைகளையோ தங்கள் வாழ்வில் அனுமதிக்கமாட்டார்கள். நாம் வாழும் 60-70 ஆண்டுகளில் எவ்வளவு அடையாளத்தை சுமந்தாலும் நாம் மரித்த பின்பு கடவுளின் முன்னிலையில் நாம் அனைவரும் சமமாகவே பார்க்கப்படுவோம் பின்பு எதற்காக இந்த அடையாளங்களை தூக்கி சுமக்கவேன்டும்.
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
சாதி என்பது தீண்டத்தக்கதா சகோ?
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். வெளிப்படுத்தினத விசேஷம் 7:9
@user-wi2hg7mt1r
@user-wi2hg7mt1r Жыл бұрын
@@DivineGuidance-qu7yw ஆம் சாதி....இல்லாத ஒன்றை இருப்பதாக என்னி நாம் ஏன் சக மனிதனை தின்டத்தக்கவன் என்று வேறுபடுத்தவேண்டும்...
@jamichael1718
@jamichael1718 Жыл бұрын
என்றோ ஆரம்பித்திற்க்க வேண்டிய சாதி மறுப்பு இயக்கம் இன்று அன்பு சகோதரர் அகத்தியன் அவர்களால் முயற்சியால் உருவானது பாராட்டப்படவேண்டும்
@John-hz1xd
@John-hz1xd Жыл бұрын
பாஸ்டர் பாலசேகர் அவர்கள் சாதியத்துக்கு எதிராக பேசிய வீடியோ இருந்தால் லிங்க் போடுங்க சார். சும்மா அட்ஜஸ்ட் பண்ணி எதையாவது சப்பைக் கட்டக்கூடாது. திருநெல்வேலி பாஸ்டர் சாதியத்துக்கு எதிராக பேசுவதை கற்பனை பண்ணி பார்க்கமுடியுமா?
@JanaJana-zv1hg
@JanaJana-zv1hg Ай бұрын
KZbinrs la இருக்கிறது
@ravindrakennedy8586
@ravindrakennedy8586 Жыл бұрын
Good discussions
@mercycecil2180
@mercycecil2180 Жыл бұрын
அருமை சகோ இயேசு கிறிஸ்துவின் நாமம் ஒன்றே மகிமைபடுவதாக இயேசு கிறிஸ்துவின் அன்பு மனதிற்குள் வந்தாலே சாதி வேறுபாடு ஒழியும் என்பது உண்மை
@israveldavid723
@israveldavid723 Жыл бұрын
சதி என்பது ஒரு பாவமே, யார் விடுதலை பெற்றார்களோ, அவர்களே கண்டிப்பர்கள், வாழ்துக்கள்
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Appadi ellam periya changes varathu Caste pathi msg eduthal yarum Sabai ku. Varamatanga
@Joseph-ll7ir
@Joseph-ll7ir Жыл бұрын
Nice video anna🎉🎉🎉
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ Жыл бұрын
தாங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைந்து விட்டீர்களா சகோ?
@rk7566
@rk7566 Жыл бұрын
எனது பெயர் ராஜ்குமார் நான் கொளத்தூரில் உள்ள ஒரு சபைக்கு போய்க்கொண்டிருக்கிறேன் அங்கே என் போதகர் ஒரு திருநெல்வேலி நாடாராக இருந்தாலும் சாதியத்துக்கு எதிராக மிகவும் அதிகமாக குரல் கொடுக்கிறார். திருமணத்தில் சாதி பார்க்கக் கூடாது என்று பகிரங்கமாக அறிவித்தார். எங்கள் சபையில் ஒரு விசுவாசி சாதி வெறியில் இருந்தேன் கர்த்தர் விடுதலை கொடுத்தார் என்று சாட்சி சொன்னார். ஆனால் ஒரு சிலருக்கு அந்த சாதிய உணர்வு இருக்கின்றது.
@thewordofgod331
@thewordofgod331 Жыл бұрын
சகோதர அவங்க பேசுற நல்லா தான் பேசுறாங்க வெளிய அவங்க எப்படின்னு வெளியே எப்படி இருக்காங்கன்னு தெரியல
@reginthvethanayagam422
@reginthvethanayagam422 Жыл бұрын
Are you belong to the body of Christ of Body of Brahma.?கிறிஸ்தவர்கள் மதம் மாறினாலும் அவர்கள் சாதியை கடைப்பிடிப்பதால் நம்மவர்களாக இருக்கிறார்கள்-காஞ்சி சங்கராச்சாரியார்.
@thewordofgod331
@thewordofgod331 Жыл бұрын
அன்பு சகோதரரே பேட்டியில் பேசுவீங்க ஆனா உங்க இங்கு எப்படி இருக்கீங்க ஆண்டவருக்கு தான் அது அவருக்கு தான் தெரியும்
@geraltgeralt5209
@geraltgeralt5209 Жыл бұрын
Bro Balasaker Super Preacher.
@sridharan9317
@sridharan9317 6 күн бұрын
0:44 0:44 0:44 ஏத்தியனாகிய உரியாவின் மனைவி பட்சேபால் என்று இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு எழுதும்போது மத்தேயு அவர்கள் குறிப்பிடுகிறார் பட்சேபால் யூத பெண் அதனால் தான் ஏத்தியனா கிய உரியாவின் மனைவி என்று கூறுகிறார் யார் இந்த ஏத்தியர்கள் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் அவருக்கு உதவி செய்த வேறு ஒரு இனத்துக் கூட்டம் பிற்காலத்தில் யோசுவா மூலம் கானான் தேசத்திற்குள் யூதர்கள் வந்த போது அந்த மக்களை தங்கள் இனமாகவே சேர்த்துக் கொண்டார்கள். ஆங்கிலத்தில் prosolite என்றால் இனம் மாறுவது என்று அர்த்தம் லூக்கா அவர்களும் அவருடைய நண்பர் தியாபிளஸ் அவர்களும் கிரேக்க இனத்தை சார்ந்தவர்கள் அவர்கள் யூதராகவே மாறிப்போனார் இப்படி எண்ணற்ற மக்கள் யூத இனத்தை தழுவியிருக்கிறார்கள் கடவுள் எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ரூத் என்ன யூத பெண்ணா, ஆண்டவராகிய இயேசு அவள் சந்ததியில் பிறக்கவில்லையா. ஆபிரகாம் தன் ஜாதியில் தான் மகனுக்கு பெண் பார்த்தார் என்பது அறியாமையால் சொல்லப்படும் வார்த்தை காரணம் ஆபிரகாமின் குடும்பத்தார் அவருடைய தகப்பன் மற்றும் சகோதரர்கள் சிலை வழிபாட்டை உடையவர்கள் ஆகவே ஆபிரகாம் தன் சகோதரர் குடும்பத்தில் பெண் எடுத்தால் தான் வணங்கும் தெய்வம் தான் உண்மையானவர் என்று வீட்டுக்கு வரும் மருமகள் புரிந்து கொள்வாள் எந்த விதமான பிரச்சனையும் வராது என்று தான் தன் இனத்தில் பெண் எடுத்தார் மேலும் சாரால் அவர்கள் ஆபிரகாம் அவர்களோடு கோபித்துக் கொண்டு ஏத்தியர்கள் மத்தியில் வாழ்கிறார்கள் அதனால் தான் தன் மனைவி மரித்தால் என்று கேள்விப்பட்டு ஆபிரகாம் அவர்கள் நிலத்தை விலைக்கு வாங்கி சாராள் அவர்களை அடக்கம் செய்வதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம் இல்லையா மற்றபடி ஜாதியை பார்த்தார் என்று அர்த்தம் இல்லை, ஜாதி என்பது இந்துக்களுடைய கலாச்சாரம் அதை பார்க்கிறவர்கள் கீதையையும் அதை எழுதிய கிருஷ்ணனின் பிள்ளைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம், யூதர்கள் மத்தியில் ஜாதி இருந்ததாக ஒரு தவறான தகவலை aft பாஸ்டர் அவர்கள் சொல்கிறார் யூதேயா கலிலேயா சமாரியா என்ற மூன்று பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் சமாரியாவிலே வாழ்ந்த மக்கள் யூதர்கள் அல்லாத பிரஜாதிகளோடு திருமண உறவு கொண்டபடியால் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள் அதற்கு பாஸ்டர் அவர்கள் ஜாதி பார்த்தார்கள் என்று தவறான தகவலை தருகிறார். கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்து உண்மையும் சத்தியமும் உள்ள தெய்வம் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கு சென்ற கிறிஸ்தவம் அங்கு எத்தனையோ கிறிஸ்தவ நாடுகள உருவாகிவிட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவம் பாழாய் போன ஜாதியால் இன்றும் மூன்று விழுக்காடுகளுக்கு மேலாக வளரவில்லை 400 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த இஸ்லாம் 30 விழுக்காடுகள் வளர்ந்து விட்டது பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளோடு சேர்த்து சொல்கிறேன் இந்தியாவில் கிறிஸ்தவத்தை வளர விடாமல் செய்த மக்கள் வேறு யாரும் அல்ல ஜாதியை பிடித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் தான், அவர்களில் ஒரு பகுதியினர் சிஎஸ்ஐ திருச்சபையில் இருந்து கொண்டு தாங்கள் தெற்கே இருந்து வந்தவர்கள் எங்களுக்கு தனி சபை வேண்டும் என்று கூறி ஜாதி சபையை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிஎஸ்ஐ திருச்சபையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பிரதான வேதநூல் ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கீதை, பைபிள் எல்லாம் பிற்பாடு தான்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
Correction பண்ணும்போது Hurt பண்ணக்கூடாது. அப்படி பண்ணினால் Collection-ல் பிரச்சனை வந்துவிடும் என்பதில் ஆல்பர்ட் சாலமோன் அண்ணன் ஞானமாக இருக்கிறார்.😂😆
@tubercats22
@tubercats22 Жыл бұрын
உண்மையில்! கடவுளின் அன்பின் மூலம் மக்கள் சாதி வெறியிலிருந்து வெளியே வர முடியுமா? பிறகு ஏன் ரெவ. டி. மோகன், ஸ்வர்ணராஜ் (கல்வாரி சர்ச்) ஸ்டீவ் ஜெயராய் (தென்காசி) இன்னும் பலர் சாதியத்தை பின்பற்றுகிறார்கள்?
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
அவர்கள் கடவுளின் அன்பை முதன்மைப் படுத்துவதில்லை. காணிக்கையை வயிற்றுப் பிழைப்பை முதன்மைப்படுத்துகிறார்கள். அவர்களிடம் சகோதரத்துவத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
தாங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைந்து விட்டீர்களா சகோ?
@gabrielfrancis8894
@gabrielfrancis8894 Жыл бұрын
Bro Immanuel .. speaking very wrong...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM Жыл бұрын
என்ன ஆனாலும் இம்மானுவேல் திருநெல்வேலியாச்சே! நாடார்களின் உயர் மறைவில் இருப்பவர்கள் சாதியத்துக்கு எதிராகப் பேசமுடியாதே சார். வயிற்றுப்பிழைப்புண்ணு ஒண்ணு இருக்கே சார்.
@alexsander1132
@alexsander1132 9 ай бұрын
பிரதர் சாதி பார்த்தால் அவன் கிறிஸ்தவன் அல்ல.... காரணம் சாதி இந்து கடவுள் உடல் உறுப்புகளில் இருந்து வந்தது என சொல்லப்படுகின்றது...... சாதியை விசுவாசித்தால் நீங்கள் மறைவாக இந்து கடவுளை விசுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.... சாதியை விசுவாசிக்கிறவன் கிறிஸ்தவன் அல்ல.... தேவன் அவர் சாயலில் படைத்தார் என்று சொல்லுகிறது... அங்கே சாதி இல்லை.... இதை விசுவாசிக்கிறவனே கிறிஸ்தவன்
@chandrasehar7479
@chandrasehar7479 Жыл бұрын
Which cast were Adam and Eva? Those who follow cast are not fit to enter into the Kingdom of God. HELL is already opened with red carpet for them and VIP treatment will be given for the so-called evangelists especially from Tamilnadu.
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ Жыл бұрын
தாங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணைந்து விட்டீர்களா சகோ?
@back2basics352
@back2basics352 Жыл бұрын
Unwanted discussion, will it be useful for spiritual growth. People who are talking on specific community, .. They will not talk about this silly topic
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
This is a verily needed discussion sir. This is a silly topic for CASTE FANATICS.
@rvijayanand1979
@rvijayanand1979 Жыл бұрын
@@DivineGuidance-qu7yw well Said brother.
@reginthvethanayagam422
@reginthvethanayagam422 Жыл бұрын
நீங்கள் பிரம்மாவின் சரீரத்திலிருந்து வந்தவர்களா?அல்லது கிறிஸ்து வின் சரீரத்துக்குறியவர்களா?
@REVIVALTVWORLD
@REVIVALTVWORLD Жыл бұрын
Unwanted topic
@TenkasiDoctor
@TenkasiDoctor Жыл бұрын
ஆபிரகாம் சாதி பார்த்தாரே!
@HolyGospelOfChrist
@HolyGospelOfChrist Жыл бұрын
பாகம்-1 *ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும்போது தன் சொந்த இனத்தாரிடத்தில் பெண் பார்க்க சொன்னாரே!* பதில்: *ஆபிரகாம்* தன் வேலைக்காரன் எலியேசரை அனுப்பி தன் மகன் ஈசாக்குக்கு பெண் தேடிய சம்பவத்துக்கு வருவோம். _ஆபிரகாம் தன் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தனக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை (எலியேசர்) நோக்கி, "விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இந்த _*_கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய்_*_ என்றும், சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்" என்றார் (தொ.நூ. 24:3,4)._ அதுபோலவே, *ஈசாக்கு* தன் மகன் யாக்கோபு யாரைத் திருமணம் செய்யச் சொல்கிறார் என்று பார்ப்போம். _ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கி கட்டளையிட்டுக் கூறியது: "நீ _*_கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே._*_ புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்" (தொ.நூ. 28:1,2)._ இதேபோல, இஸ்ரவேலர் அல்லாத வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது என தீர்க்கதரிசி *எஸ்ராவும், நெகேமியாவும்* அறிவுறுத்துகிறார்கள். _குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: "நீங்கள் _*_வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்._*_ எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், _*_வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்_*_ (எஸ். __10:10__,11)._ *_வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக_*_ இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்யவேண்டுமா? (நெகே. __13:27__)_ என்று இறைவாக்கினர் நெகேமியா கூறுகிறார். நீதித்தலைவர் *சிம்சோன்* ஒரு பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்தபோது, அவரது பெற்றோர் பேசிய வார்த்தைகளைக் கவனியுங்கள். _அவர் தந்தையும் தாயும் அவரிடம், "உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் _*_விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம்_*_ சென்று பெண் எடுக்கவேண்டும்? என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், "அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது" என்றார் (நீ.த.14:3)_ மேற்கண்ட எல்லா வசனங்களிலும், *இஸ்ரயேலர் வேற்றினப் பெண்களை திருமணம் செய்யக்கூடாது* என்று அக்கால ஆன்மீக வழிகாட்டிகள் போதித்திருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வோம். ஆண்டவர் மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றுப் புறப்படச்செய்து, கானான் நாட்டைநோக்கி அவர்கள் பயணிக்கும்போது, திருமணம் செய்வது தொடர்பான அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கினார். அப்போது, கடவுள் மோசேயிடம் பேசிய கீழ்க்காணும் வசனங்களைக் கவனமாக நீங்கள் வாசித்தால் அந்த காரணம் தெளிவாக விளங்கும். அது எதற்காக என்று தெளிவாக கடவுளே சொல்கிறார். _நீ அவர்களோடு (வேற்றினத்தாரோடு) திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே. ஏனெனில், என்னை பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, _*_வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள்._*_ அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும் (இணை. 7:3,4)_ என்று கடவுள் சொல்கிறார். இந்த இறைச்சட்டத்தை மனதில் வைத்தே பேதுரு கொர்நெலியுவின் வீட்டாரிடம், _"ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள்" (தி.தூ. __10:28__)_ என்கிறார்.
@HolyGospelOfChrist
@HolyGospelOfChrist Жыл бұрын
பாகம்-2 மேற்கண்ட வசனங்களின்படி, கடவுள் தன்னை பின்பற்றும் மக்கள் தன்னை மட்டும்தான் கடவுளாக வழிபடவேண்டும் என்று விரும்புகிறார். எனவே, தன்னை கடவுளாக வழிபடும் மக்கள் பிறரைத் திருமணம் செய்யக்கூடாது என்றும் விரும்பினார். இஸ்ரயேல் மக்கள் உண்மையான தெய்வமாகிய ஆண்டவரை வழிபடாத வேற்றினத்தாரை திருமணம் செய்தால், இஸ்ரயேலர்களை வேற்றினத்தார் *உண்மையான கடவுள் வணக்கத்திலிருந்து விலக்கி, பொய்யான கடவுள்களை (சிலைகளை) வணங்கும்படி மாற்றிவிடுவார்கள்* என்ற காரணத்தால்தான் அவர்களைத் திருமணம் செய்ய வேண்டாம் என கட்டளையிட்டார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இதையே திருத்தூதர் பவுல், _"கணவர் உயிரோடு இருக்கும் காலம்வரை மனைவி அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார். கணவர் இறந்துவிட்டால் தாம் விரும்புபவரைத் திருமணம் செய்துகொள்ள அவருக்கு உரிமையுண்டு. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்பவர் _*_ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராய்_*_ இருக்க வேண்டும்"(1கொரி. __7:39__)_ என்று உறுதி செய்கிறார். _நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் _*_பிணைத்துக் கொள்ள வேண்டாம்._*_ இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. "என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!" என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ! (2கொரி. __6:16__)_ என்று திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார். கடவுளிடம் இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை தெரிந்திருந்த இறையடியார்கள், கடவுளின் வழிகாட்டுதலின்படி தங்கள் பிள்ளைகளுக்கு *தங்கள் இறைநம்பிக்கையை தழுவிய மணமக்களையே* திருமணம் செய்தனர். அந்த வகையில்தான் ஆபிரகாம் தன் மகனுக்கு ஆண்டவரைக் கடவுளாக கொண்ட ஒரு பெண்ணை தன் மகனுக்கு பார்க்கவேண்டும் என்று தன் மூத்த வேலைக்காரன் எலியேசரிடம் கூறினார். ஆக, இஸ்ரயேலர் புறவினத்தாரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்ன காரணம், புறவினத்தார், இஸ்ரயேலரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார்கள் என்பது மட்டுமே. வருணாசிரமம் சொல்வதுபோல *உயர்சாதி கீழ்சாதி* என கடவுள் பாகுபடுத்துவதற்காக அல்ல. இந்த உயர்தர ஆன்மீக கொள்கைக்கும் இந்துத்துவ சாதியத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நுட்பமாக அறிகிறோம். ஏனெனில், பறையர் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவர், நாடார் சாதியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவரை வேற்றுக் கடவுளை வணங்கச் செய்துவிடுவார் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் *"நான் நாடார் கிறிஸ்தவர், நீ முதலியார் கிறிஸ்தவர், அவர் பறையர் கிறிஸ்தவர்"* என்று கூறுவதில் அணுவளவும் அர்த்தமில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள், *"நான் மரக்காயர் கிறிஸ்தவர், நீ ராவுத்தர் கிறிஸ்தவர், அவர் பட்டாணி கிறிஸ்தவர்"* என்று பிரிந்து நிற்பதில் அர்த்தமில்லை.
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
@@HolyGospelOfChrist அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும். அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். ஆதியாகமம் 25:23
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
😂😂😂😂😂😂 யோனாவை கடலில் தூக்கி போட கப்பலுக்கு பிரச்சினை வர காரணம் யோனா என்று ஒரு ஜாதி பார்க்கும் மனிதனாலாம் கிறிஸ்தவ போதனை எங்கே போகிறது கிறிஸ்தவ ஊழியரின் எவ்வளவு வேத வசன அறிவு பெற்றிருக்கிறார்கள். 😂😂😂😂😂😂😂😂😂😂
@DivineGuidance-qu7yw
@DivineGuidance-qu7yw Жыл бұрын
சக மனிதனை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது பாவமல்லவா!
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
ஜாதி இல்லை என்று சொல்லும் ஊழியர்கள் யாராவது எனது இரண்டு கேள்விக்கு வசன அடிப்படையில் பதில் சொல்லுங்கள் பார்ப்போம் 1. தேவன் நான் உண்டு பண்ணிய ஜாதி என்று வசனம் உள்ளது நீங்கள் ஜாதி நான் உண்டு பண்ணியதில்லை என்று தேவன் சொல்லும் வசனம் காட்டுங்கள். அல்லது மனிதன் அல்லது பிசாசு ஜாதியை உண்டாக்கினான் என்று வசனம் காட்டுங்கள். 2. மறு ஜாதி பெண்களை மனைவி ஆக்கியதால் பாவம் செய்தீர்கள் என்று வசனம் நான் காட்டுகிறேன் நீங்கள் ஜாதி பார்த்து மனைவி ஆக்கியதால் பாவம் செய்தீர்கள் என்று வசனம் காட்டுங்கள். சரியான ஊழியர். யாராக இருந்தாலும் இந்த உலகத்திற்கு உங்கள் ஜாதி இல்லை என்ற கருத்தை நிருபிக்க வாருங்கள் வாருங்கள் என்று அன்போடு ஆவலோடு அழைக்கிறேன் வாரீர் வாரீர் வாரீர்
@densingraja-xd2mt
@densingraja-xd2mt Жыл бұрын
ஐயா கேள்வி கேட்பவரே ஒருவர் யோனா பிரச்சினைக்கு காரணம் ஜாதி என்று சொல்லுகிறார் நீங்களும் கேட்கிறீர்கள் உங்கள் வேத ....... அவ்வளவு தானா இந்த ஆண்டின் சிறந்த காமெடி யோனா கடலில் தூக்கி போட யோனா வின் ஜாதி தான் என்று ஒரு உலக மகா ஊழியர் சொன்னதுதான் 😂😂😂😂😂
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 36 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
Как в моей семье едят КЛУБНИКУ 😂🍓 #shorts
0:43
Владислав Шудейко
Рет қаралды 1,7 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 8 МЛН
رورو ضد رقيه🔫😲🚀 #shorts
0:13
رورو فاميلي | Roro Family
Рет қаралды 25 МЛН