சர்வ நோய்களையும் ஒடுங்கச் செய்யும் ஞானகுருவின் ஒரு அற்புதமான உபதேசம்

  Рет қаралды 261

உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்

உயிரைக் காப்போம் உலகைக் காப்போம்

Күн бұрын

கொடிய நஞ்சினையும் கொடிய நோயையும் ஒடுங்கச் செய்யும் துருவனின் அருள் ஆற்றல்கள் - ஒரு பயிற்சி
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று
1.சர்வ நோய்களும் நீக்கிடும் அருள் ஒளி எங்களுக்குள் பெருகி இருளை அகற்றி
2.எங்கள் பேச்சு மூச்சும் சர்வ நோய்களை நீக்கிடும் அருள் சக்தி பெற்று
3.அனைவரையும் ஆனந்தப்படச் செய்யும் அருள் ஒளி எங்களுக்குள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
வேதனையான உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்தால் கண்களில் படும் போது கண் ஒளி மங்கும். உற்றுப் பார்த்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து வரப்படும் போது கிட்னி அந்த விஷத்தின் தன்மையால் பாதிக்கப்படுகின்றது.
விஷம் கலந்த அந்த இரத்தம் இருதய வாயில் செல்லும் பொழுது அங்கே அடைப்புகள் போன்ற துன்பங்களை ஏற்படுத்தும். அந்த விஷம் கலந்த இரத்தம் நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் படரப்படும் போது இந்த விஷத்தின் தன்மையால் அதனை இயக்கும் நல்ல உணர்வுகள் நல்ல அணுக்கள் மடிகின்றது. பின் அதிலே கடும் நோயாக உருவாகும்.
இதைப் போன்ற ஏற்படும் தீமைகளிலிருந்து மீள…
1.நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உடலில் எங்கே நோவு காணுகின்றதோ
2.“அந்தப் பகுதிக்கு”
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று உணர்ச்சிகளை
4.”அங்கே” உந்தச் செய்யுங்கள்… அருள் உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.
5.நஞ்சு கொண்ட அந்த உணர்வின் தன்மையை ஒடுங்கச் செய்யுங்கள்.
அருள் மகரிஷிகளின் உணர்வை உங்கள் உடலில் பரவச் செய்து… தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யுங்கள்.
துருவன் காட்டிற்குள் செல்லும் பொழுது “அவனைக் கண்டு” மற்ற கொடூர உணர்வுகளும் மிருகங்களும் விஷம் கொண்ட விஷ ஜெந்துக்களும்
1.அதனுடைய விஷத்தை முறித்து எப்படிப் பதும்பி இருந்ததோ இதைப்போல
2.அந்தத் துருவனின் உணர்வுகளை துருவ மகரிஷியான உணர்வுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.”அகஸ்தியன்… துருவன்… துருவ நட்சத்திரம்…” என்ற இந்த மூன்றையும் உங்கள் உணர்வுக்குள் கலக்கச் செய்து
4.உங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்யுங்கள்.
அப்போது…
1.ஒடுங்கும் தன்மை கொண்டு “உங்களிடம் அடங்கி”
2.உங்களில் மன மகிழ்ச்சியை ஓங்கச் செய்யும்
3.அருள் ஒளியின் உணர்வின் தன்மை பெறச் செய்யும்… அருளானந்தம் பெறச் செய்யும்.
ஆகவே… அருள் ஞானத்தை வளர்த்திடும் அந்த அருள் ஞானத்தைப் பெற அகஸ்தியனுடைய உணர்வுகளையும் துருவனின் உணர்வுகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தில்
1.எங்கே வலி என்ற உணர்ச்சிகளை உந்துகின்றதோ
2.”அவ்விடத்தில்” அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
அந்த வலியைத் தணியச் செய்யுங்கள் இருளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
சந்தர்ப்பத்தால் உங்களை அறியாது எண்ணத்தால் நுகர்ந்த உணர்வுகள்… நஞ்சின் உணர்வு கொண்டு… உடலுக்குள் தேங்கியிருக்கும் இடத்தில் வேதனையக் கொடுக்கும்.
அதே எண்ணத்தால்… உங்கள் உடலில் எங்கே நோவு வருகின்றதோ அந்த இடத்திலே அகஸ்தியன் துருவன் துருவ நட்சத்திரம் என்ற இந்த மூன்று உணர்வுகளையும் உங்கள் நினவாற்றல் கொண்டு பாய்ச்சுங்கள்.
அதனுடைய வீரியத்தைத் தணித்துப் பழகுங்கள்…! அருள் ஒளியைப் பெருக்குங்கள். இப்போது உங்கள் உடலில் அருள் ஒளி படர்ந்து
1.உடலில் எத்தகைய பிணி இருக்கின்றதோ அது ஒடுங்கும்…
2.ஒடுங்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்… அதை ஒடுக்கச் செய்யுங்கள்
அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்து அதை ஒடுங்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்…!

Пікірлер
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Onbathu Maiya Thavam Vethathiri maharishi
25:23
Vedhakani Yoga Vidhyalaya
Рет қаралды 84 М.