Рет қаралды 22,061
#Partnership வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமானது. அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
பார்லிமென்ட் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கட்டத்தில் பங்கேற்க முகமது யூனுஸ் சென்றார். அவரை கண்டித்து நியூயார்க்கில் உள்ள வங்க தேசத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை கண்டித்தனர். முகமது யூனுஸ் திருப்பி செல்ல வேண்டும்; பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
breath
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகத்தை விரும்புகிறோம். சிறுபான்மையினரான இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
அவர்களின் வீடுகள், மசூதி, சர்ச்சுகளுக்கு தீவைத்து எரிக்கிறார்கள். எங்கள் மக்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை.
வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் சதி செய்கிறது. மதசார்பற்ற ஜனநாயகத்தை அவர்கள் விரும்பவில்லை. 1971ல் நடந்த போரில் வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றது. அவர்களுக்கு எதிராக இன்னொரு போர் வேண்டுமானால் அதற்கும் தயார்.
அரசியல் அமைப்புக்கு எதிராக முகமது யூனுஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார். பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை. அதை அவர்களால் நிரூபிக்க முடியாவில்லை. முகமது யூனுஸ் வங்கதேச மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஐநா அவரை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.#bangladesh #chief #moammed #yunus