Рет қаралды 35,084
#karadaiyannombu2020#Nombu#adai recipe
Hi Viewers,
இனிய காரடையான் நோன்பு தின வாழ்த்துக்கள்!!!
மாசி மாதம் முடியும் நாளும் பங்குனி மாதம் பிறக்கும் நேரமும் கூடுகிற நன்னாள்... காரடையான் நோன்பு எனும் விரதம் மேற்கொள்ளப்படுகிறது
இந்த வருடம் 14.03.2020 சனிக்கிழமை, நேரம் - 10.45AM - 11.10AM காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு ஸ்லோகம்:
மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா
காரடையான் நோன்பு நைவேத்திய ஸ்லோகம்:
"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்து நோன்பு நோற்றேன் . ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்"
காரடையான் நோன்பு சரடு கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம்
தராம்யஹம், பர்த்துஹு ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ சர்வதா!
அதாவது எமலோகத்தை அடையாதவன். அப்படி, எமனால் அழைத்துச் செல்லமுடியாதபடி, தங்கள் கணவன்மார்களை காரடையானாக எமலோகத்தை அடையாதவனாக வைத்திருக்கவேண்டி, அம்பாளை, சக்தியைப் பிரார்த்தனை செய்வதுதான், விரதம் மேற்கொள்வதுதான் ‘காரடையான் நோன்பு’
கணவனை எமனிடமிருந்து மீட்டெடுத்த சத்தியவான் சாவித்திரி கதை தெரியும்தானே. அவள், பக்தியுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்து, கணவனை மீட்டாள். கணவனின் உயிர் காத்தாள். தீர்க்கசுமங்கலி வரம் பெற்றாள். கணவனுக்கு நீண்ட ஆயுள் வரக்காரணமானாள். தாலி நிலைக்கப் பெற்றாள். அவளின் அடியொற்றி காலகாலமாக பெண்கள் இருக்கும் விரதம்தான் ‘காரடையான் நோன்பு’
மேலும் இவ்விரதமிருந்து புது மஞ்சள் சரடு அணிந்து, வேண்டிக்கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும்; ஆரோக்கியம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு, நல்ல கணவர் அமைவது உறுதி🙏
Best Regards,
Pavila
J Entertainment
jiestaentertainment@gmail.com