Рет қаралды 15,602
தமிழகத்தின் குமரி முனை முதல் குஜராத் மாநிலம் வரை
1,600 கி.மீ., தூரத்திற்கு படர்ந்திருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா.,வின் யுனெஸ்கோ நிறுவனம்,
மேற்குத்தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக 2012ல் அறிவித்தது.
அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்று,
இந்த மலைத்தொடரில் மோதுவதன் மூலமாக
தமிழகம் மற்றும் கேரளாவிற்கு சரியான நேரத்தில்
பருவமழை கிடைத்து வந்தது.
ஆனால் இயற்கையான இந்த மலையின் தன்மை
மனித செயல்பாடுகளால் மாறி
தற்போது பருவமழை பொய்த்து,
நிலத்தடி நீர்மட்டமும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சமநிலையை காக்க
தற்போது முயற்சி எடுக்காவிடில்
பெரும் அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும் என
புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள
கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் கல்குவாரிகள், செங்கல் சூளைகள் அதிகரித்துள்ளன.
இதற்காக, டன் கணக்கில் மலைப்பாறைகள், செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால்
இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரோட்டமும் பாழ்படுகிறது.
குவாரி பயன்பாட்டை குறைத்து மலைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மலைத்தொடரில் மரங்களை வெட்டுதல்,
வனங்களை அழித்தல் போன்ற செயல்களால் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைத்தொடரை காக்க
கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை அளித்துள்ளது.
ஆனால் அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள்
மெத்தனம் காட்டி வருகின்றன.
இயற்கையை அழித்ததால் பருவமழை பொய்த்தல்,
நிலத்தடி நீர்மட்டம் குறைதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
இனியும் இயற்கையையும், பொக்கிஷமான மேற்கு தொடர்ச்சி மலையையும்
காக்க நடவடிக்கை எடுக்காவிடில், நாம் பேராபத்தை சந்திப்பது நிச்சயம்!#Western_Ghats #Hills For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa