Рет қаралды 144
ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே தனியார் உணவகத்தில் மட்டன் எலும்பில் புழு இருந்ததால் பரபரப்பு
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடை, வாடிக்கையாளர் கடையில் வாங்கிய மட்டன் பிரியாணி எலும்பில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, முகப்பேர் பகுதியில் வசித்து வரும் குணா என்பவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில் மட்டன் பிரியாணி எலும்பிற்குள் புழு இருப்பது தெரிய வந்தது பின்னர் இது குறித்து அதிர்ச்சி அடைந்த குணா பிரியாணி கடை உரிமையாளர்களிடம் முறையிட்ட நிலையில் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது இரு மகள்கள் மற்றும் மனைவியை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.மட்டன் பிரியாணி எலும்பில் புழு இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற தனியார் உயர் உணவகங்களில் தொடர்ந்து திடிர் சோதனையில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...