இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே தொலையாமல் தொலைந்தேனே உன் கைகள் என்னை தொட்டதும் கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்று பட்டதும் அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டு சென்றதே கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ .. கூட வந்து நீ நிற்பதும் கூடுவிட்டு நான் செல்வதும் தொடருதே தொடருதே நாடகம் பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும் புரியுதே புரியுதே காரணம் நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும் கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஓ என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன் அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஓ நீ என்னை காண்பதே வானவில் போன்றதே துாரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே ஓ ஓ ஓ கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும் வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும் ஓ ஓ ஓ