Рет қаралды 517
www.pallikaranaisakthi.org
பாம்பாட்டி சித்தர் போற்றிகள்
பண்பு திகழ் பவித்ர குண்டலினி யோக சித்தி நாதரே
பாம்பாட்டி சித்தரே போற்றி ||1||
அண்டம் புகழ் குரு மருந்து முடிக்கும் வாத வித்தகரே
பாம்பாட்டி சித்தரே போற்றி ||2||
கண்கவர் எழிலோன் மருதமலை பெருமானை நிறுவித் தொழுத
பாம்பாட்டி சித்தரே போற்றி ||3||
மண்ணுலக மாந்தர் அறிய குண்டலினி யோகமுறை அருளிய
பாம்பாட்டி சித்தரே போற்றி ||4||
போற்றிகளின் பொருள்:
ஆதார குண்டலினி யோகம் புரிபவர். சித்த மருத்துவத்தில் குரு மருந்து எனப்படும் சகல நோய்களையும் நீக்க வல்ல மருந்தைத் தயாரிப்பதில் வல்லவர். மருத மலையானை நிறுவித் தொழுதவர். உலக மாந்தருக்கு குண்டலினி யோக முறைகளைப் பாடல்களாக எழுதி அளித்தவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
பாம்பாட்டி சித்தரை பற்றி:
இந்த யோக சித்தர் ஆதார யோகம் புரிவதில் வல்லவர். குண்டலினி ஆற்றாலினால் சகல சித்திகளும் புரிபவர். ஆறு ஆதாரத் தலைவனாம் முருகனை வழிபட்டு யோக சித்தி அடைந்தவர். இவரை தொடர்ந்து வணங்கி வருவதன் மூலம், குறிப்பிட்ட காலங்களின் அடிக்கடி தோன்றி தொல்லை தரும் பருவக்கால நோய்களானவை நீங்கும். உதாரணமாக: 1) தலைவலி, 2) ஒவ்வாமை என்கின்ற (allergy), 3) உள்நாக்கு வீங்குதல் (tonsils) போன்றவை நீங்கும். மேலும், இரத்ததில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். இரத்த குறைப்பாடுகள், இதயம், சர்க்கரை சம்பந்தமான நோய்கள் (sugar, BP, heart problems) நல்லபடியாக குணமடையவும், இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
#sithargal #siddha #Pambatti #பாம்பாட்டி சித்தர்