Рет қаралды 24,563
பொன்னூஞ்சல் விழா வரலாறு:
சோழ நாட்டை ஆண்ட கரிகால சோழனின் தாய்மாமனே இரும்பிடர்த் தலையார். இவரின் வழித்தோன்றலே பெரியகுல வேணாடர். கரிகாலச் சோழனுடைய மகளான ஆதிமந்தையை சேர நாட்டு அரசனான ஆட்டன் அத்திக்கு மணமுடித்து கொடுத்தார். சேரநாட்டு அரசனுக்கு எதிராக நடந்த போரில் இரும்பிடர்த் தலையார் தலைமையில் நாட்டை சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றி கொடுத்தனர்.
இதனால் சேர அரசன் அத்தி, வேளிர் நாட்டை ஆளும் உரிமையை இரும்பிடர்த் தலையாருக்கு அளித்து அவர் பரம்பரையில் முதல் வீட்டிற்க்கு வேணாடர் என்ற பட்டப்பெயர் அளித்து அவனது வம்சத்தில் வரும் முதல் பெண் குழந்தைகளுக்கு, ஆதி மந்தை ஆடிய ஊஞ்சலை கரிகால சோழன் அளித்தார். அது முதல் இந்த பொன்னூஞ்சல் விழா பெரியகுல முதல் வீடான சங்கரண்டாம்பாளையம் வேணாடர் அரண்மனையில் மார்கழி மாதம் திருவாதிரை அன்று நடைபெறுகிறது.
Follow us on Instagram
kronosztudios?i...