Рет қаралды 164
புனித குவாடலூப்பே அன்னைக்கு நவநாள் ஜெபம்
குவாடலூப் அன்னையே , விண்ணக ரோஜா மலரே , இயேசுவின் திருச்சபைக்காகப் பரிந்து பேசும் அம்மா .திருத்தந்தையையும் உம்மைத் தேடி வரும் திருச்சபையையும் பாதுகாத்தருளும். இறைவனின் அன்னையே , நித்திய கன்னிகையே , விசுவாசத்தையும் , நம்பிக்கையையும் , துன்பத்தில் தளரா மனத்தையும் உமது திருமகனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தாரும். எங்கள் இரட்சகரும் மீட்பருமான உமது திருமகனின் திருமுக தரிசனத்தை உமது பரிந்துரையால் நாங்கள் காணும் வரை எங்கள் இருதயங்களை அன்பினால் பற்றி எரியச் செய்தருளும் ஆமென்