Рет қаралды 282
www.pallikaranaisakthi.org
புலிப்பாணி சித்தர் போற்றிகள்
புலிபோன்ற தோற்றம் கொண்டவரே நடராஜர்
தரிசனம் காண்பவரே புலிப்பாணி சித்தரே போற்றி ||1||
ஒலிக்கும் உடுக்கை நாதத்தில் ஆன்ம லயம் சுகித்திருக்கும் பெரும் புலிப்பாணி சித்தரே போற்றி ||2||
சிலிர்த்து மோகித்து சிவனடி அமரும் பெரும் பேரு பெற்ற
புலிப்பாணி சித்தரே போற்றி ||3||
நலிந்து வாடும் எங்களின் துயரங்களும் அச்சங்களும்
அறவே அகற்றி அருள வேண்டும் புலிப்பாணி சித்தரே போற்றி ||4||
போற்றிகளின் பொருள்:
நடராஜப்பெருமானின் அருகில் இருந்து தரிசனம் காண்பவர். சிவனின் உடுக்கை நாதத்தில் ஆன்மாவை ஈடுபடுத்தி சுகித்து இருப்பவர். நலிந்து கஷ்டப்படும் மக்களின் துயரங்களையும், அச்சங்களையும் போக்கி அருள்புரிபவர் என்பது இப்போற்றிகளின் பொருள்.
புலிப்பாணி சித்தரை பற்றி:
சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தவர். அணுக்கூறுகளின் தத்துவங்களை முற்றும் உணர்ந்தவர். அதன் ஐந்து வகை ஆற்றல்களையும், செயல்படும் முறைகளையும் தெளிவாக உணர்ந்தவர். இறை ஒளி இரகசியங்களை ஞானத்தால் கண்டுத்தெளிந்தவர். இவரை அடிபணிந்து வணங்குவதன் மூலம் மனம் சம்பந்தப்பட்ட அனைத்து உபாதைகளும், மன நோய்கள் நீங்கவும், தன்னம்பிக்கைக் கூடி ஆற்றலுடன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறவும் இவரின் ஆசியால் எளிதில் கைகூடும்.
#sithargal #siddha #pulippani #புலிப்பாணி