Рет қаралды 32,174
#cookingvlog
#vlog
#vlogvideo
#tamilvlogs
#amma
#ammasamayal
#varietyrice
கனு வாழ்த்து
முதல் நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கொத்திலிருந்து ஒரு மஞ்சளை எடுத்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தந்து நெற்றியில் மஞ்சள் தீற்றச் சொல்லுவது மிகவும் இனிமையான ஒரு அனுபவம். அப்பொழுது பெரியவர்கள் நெற்றியில் மஞ்சளோடு குங்குமமும் இட்டு ஆசீர்வாதம் பண்ணி சொல்லும் வாழ்த்து நெஞ்சமெல்லாம் குளிர்விக்கும்.
" பூவோடும் பொட்டோடும் , பொன்னோடும் பொருளோடும்,
தாயோடும் தந்தையோடும், சீரோடும் சிறப்போடும், பேரோடும் புகழோடும், பெருமையோடும் கீர்த்தியோடும்,
மனம் கொண்ட மாப்பிள்ளை மகிழத் தொங்கத் தொங்கத் தாலி கட்டி
தொட்டிலும் பிள்ளையுமாக மாமனார் மாமியார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்க
பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப்புது சந்தோஷம் பெருகி
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
செல்ல பெண்ணாய் எப்போதும் இருக்கணும்.