ஸ்ரீமத் தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் - சந்தேகம் தெளிதல் படலம் - 21 - 30

  Рет қаралды 117

PARAMAHAMSA

PARAMAHAMSA

Күн бұрын

பாடல் : 21
சுத்தமாம் சத்துவமே உண்மை யாகும்
துகளிருள்போ னால்மனமென் சொல்லும் போம்போம்,
வர்த்தமா னத்தில்வந்த உணவை உண்பார்
வருவதும்போ வதும்நினைந்து மகிழார் வாடார்,
கர்த்தரா மகந்தையைவிட் டகர்த்த ராகிக்
கரணவிருத் திகளவத்தை காண்பா ராகி
முத்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும்
முட்டிலைஎன் றறிந்துசங்கை மோசிப் பாயே.
பாடல் : 22
விவகார வேளையெலாம் சமாதி என்றால்
விகற்பமன்றோ மனமலைந்து விடாதோ விட்டால்,
அவதானம் நழுவுமன்றோ என்றா யாகில்
அதற்கொருதிட் டாந்தம்கேள் ஆசை கொண்டு,
நவமாகப் பரபுருடன் தன்னைக் கூடி
நயந்தசுகம் அனுபவித்த நாரி நெஞ்சம்,
தவமான மனைத்தொழில்கள் செய்யும் போதும்
தழுவியநு பவித்தசுகம் தனைவி டாதே.
பாடல் : 23
தேகத்தன் அலனாகி அகர்த்தன் ஆகிச்
சீவனின்றிப் பிரமமாய்த் தெளிந்த முத்தன்,
போகத்தை உண்பன் என்றால் கருத்தா ஆமே
பூரணமாம் அகர்த்தனுக்குப் போகம் உண்டோ,
சோகத்தை அறுத்தருளும் குருவே இந்தத்
துகளறுக்க வேண்டுமென்று சொன்னா யாகில்,
மாகர்த்தன் மாபோகி மாத்தி யாகி
வகைமூன்றாய் அவரிருக்கும் மகிமை கேளாய்.
பாடல் : 24
செய்கையும்செய் விக்கையுமற் றிருக்கும் காந்தச்
சிலைமலைமுன் இரும்புகள்சேட் டிக்கு மாபோல்,
செய்கையும்செய் விக்கையுமற் றிருக்கும் என்முன்
செடமான உலகமெலாம் சேட்டை செய்யும்,
மெய்கலந்த இந்திரிய விகார ரூப
விவகார விருத்திக்கும் விருத்தி தானா,
மெய்கலந்த சமாதிக்கும் சாட்சி யேநான்
வெயில்போலென்று உறைத்தவனே விபுமா கர்த்தன்.
பாடல் : 25
அறுசுவையில் குணம்குற்றம் அசுத்தும் சுத்தம்
அபத்தியம்பத் தியமெனவூ ணாய்ந்தி டாமல்,
பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத் தீப்போல்
போகங்கள் புசிப்பவன்மா போகி ஆகும்,
சிறிதுபெரி துகள்தனதந் நியங்கள் நன்மை
தீமைகள்சே ரினும்படிகச் செயல்போல் சித்தம்,
வெறிதிருக்கும் அவனேமாத் தியாகி ஆவன்
விரதமிம்மூன் றுடையவரே வீடு ளோரே.
பாடல் : 26
மெய்யும் கொண்டு பிராரத் தம்தரு விதிவழி நின்றிடவும்,
உய்யும் கர்மிக ளுக்கநு குணமா வுறுதொழில் செய்திடவும்,
செய்யும் செய்கை முடிந்தவன் என்றுரை செப்புவது எப்படியோ,
நையும் துன்பம் அகற்றிய குருவே நலமா அருள்வீரே.
பாடல் : 27
ஆடவர் செய்தொழில் மூவகை ஆகும் அவித்தைவசத் துறுநாள்,
ஏடணை மமதைய கந்தையு ளார்க்கே இகபர விவகாரம்,
வீடணு குவமெனும் இச்சையு ளார்க்கே வித்தைப டிப்பதெலாம்,
பாடன்மி கும்தொழி லாற்பல னுண்டோ பரிபூ ரணமானால்.
பாடல் : 28
குரவர்சி காமணி யேகே ளீர்நீர் கூறின வழியொக்கும்,
பரமுடன் இகமும்இ ழந்தவர் அன்றோ பழகுவர் மெய்ஞ்ஞானம்,
விரவு முயற்சியின் மீண்டவர் அதைஇனி வேண்டுவரோ வேண்டார்,
சிரவண மனனா திகள்வேண் டாவோ சித்தம்உ றைத்திடவே.
பாடல் : 29
கிளர்மக னேகேள் தத்துவ மறியார் கேட்டல்செ யக்கடனே,
தளர்வறு சிந்தித் தலின்முயல் வார்சிலர் சந்தே கங்களுளார், தெளிதலின் நிற்பார் விபரீ தப்பேய் தீரா வாதனையோர்,
வெளிஉரு வாயறி வாய்நிறை வாயினர் வேண்டுவ தொன்றுண்டோ.
பாடல்: 30
ஐயா கேளீர் தத்துவ ஞானியும் அஞ்ஞா னிகள்போலச்,
செய்யா நின்றேன் கண்டேன் உண்டேன் சென்றேன் எனலாமோ,
பொய்யாம் விபரீ தங்கள வர்க்குப் போயின வென்றீரே,
மெய்யாம் பிரமவி சாரம்இ தன்றே வெளியா வுரையீரே.

Пікірлер: 2
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
திருமந்திரம் - பிராணாயாமம்
19:37
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 79 МЛН