Рет қаралды 66
ஸ்ரீசீனிவாச கல்யாண மகோத்சவம்
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஓசூர் தாலுகா ஒன்னல்வாடி அருகே ஜோதிபுரத்தில் உள்ள சீதாராம லட்சுமண சமேத அவதாரத்ரய ஹனுமந்தராயர் கோவில் உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி ஜெகத்குரு ஸ்ரீமன் மத்வாச்சார்யர மூல மகா சமஸ்தான ஸ்ரீ பத்மநாப தீர்த்தர பரம்பரையில் வந்துள்ள முளுபாகல் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடாதிபதி 1008 ஸ்ரீ ஸ்ரீசுஜயநிதி தீர்த்த சுவாமிகளின் 4 ம் ஆண்டு சாதுர் மாத விரத விழா துவங்கியது.
அடுத்த மாதம் 19 ம் தேதி வரை 50 நாட்கள் இந்த விழா நடக்கிறது. கோவிலில் தினமும் ஹோமம் மற்றும் ஹயதவன, ரங்கவிட்டல், கோபிநாத தெய்வங்களின் சமஸ்தான பூஜை மற்றும் பாகவதம், மகாபாரதம், பகவத்கீதை ஆகிய ஆன்மீக சொன்பொழிவுகள், சாகித்ய இன்னிசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கடந்த, 10 ம் தேதி 1008 ஸ்ரீ ஸ்ரீசுஜயநிதி தீர்த்த மடாபதி சுவாமிகளின் முன்னிலையில், திருமலை தாச சாகித்ய திட்ட முன்னாள் அதிகாரி அப்பன்னாச்சார்யா தலைமையில் ஓசூர் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி மலைக்கோவிலுக்கு பஜனா மண்டலிகளின் பஜனையுடன் படிபூஜை செய்து படியேறி சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு அப்பன்னாச்சார்யா தலைமையில், சீனிவாச கல்யாண மகோத்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. வரும், 24, 25 ம் தேதிகளில் பிருகதி சகஸ்ர ஹோமம் நடக்கிறது.