Рет қаралды 982
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிந்தது.
மேற்கொண்டு பணியில் தொடர ஆர்வம் காட்டாத அவர், கோப்பையை வென்றதுடன் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியது.
கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் பிசிசிஐ பேசி வந்ததாக சொல்லப்பட்டது.
இருப்பினும் அதில் கவுதம் கம்பீருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
பயிற்சியாளர் பதவிக்கு அவர் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் பயிற்சியாளர் பதவிக்கு நடந்த நேர்காணலில் கம்பீருக்கு போட்டியாக யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முன்னாள் வீரர் டபிள்யூ.வி. ராமனும் பங்கேற்றார்.#$Gautamgambhir | #Coachofindianteam | #Appointed |