ஆறுபடை வீடும் | முருகன் பாடல் | Aaru Padai | Murugan Song | Kovai Kamala | Vijay Musicals

  Рет қаралды 9,472,290

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Song : Aaru Padai Veedum
Album : Theertham
Singer : Kovai Kamala
Lyrics : Kaviya
Music : V Kishorkumar
Video Powered : Kathiravan Krishnan
Recorded @ Iyya Studio Chennai
Mixed & Mastered By Dinesh
Production : Vijay Musicals
#murugansongs#vijaymusicals
#tamildevotionalsongs
பாடல் : ஆறுபடை வீடும்
ஆல்பம் : தீர்த்தம்
பாடியவர் : கோவை கமலா
கவியாக்கம் : காவியா
இசை : V கிஷோர்குமார்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
நாவல் பழம் தந்து ஞானத் தமிழ் கேட்ட
கந்தா வடிவேலா என்னப்பனே முருகா
உனக்காக தமிழ் பாடல் பல பாடினேன்
இருந்தாலும் இதமாக நீ கேட்க
ஒரு பாடல் இப்போது நான் பாடுவேன்
பாடுவேன் முருகா . . .
ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா
அருகே நீ ஓடோடி வா
மூவிரண்டு முகம் ஜொலிக்க
ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா
ஈசன் மகனே எனைக்காக்க இங்கே
உனையின்றி வேறாரய்யா
நெஞ்சார நான் நினைக்க பஞ்சாமிர்தம் கொடுக்கும்
ஒரு தெய்வம் நீதானய்யா
தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு
திருப்பரங்குன்றம் வாழ்கின்றவன்
நீ தேவர்களைக் காத்திடவே வீரமுடன் வேலெடுத்து
செந்தூரில் ஆள்கின்றவன்
மாங்கனிக்கு கோபங்கொண்டு பார்புகழும் பழனியிலே
ஆண்டியென கோலம் கொண்டவன்
நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே
தகப்பனுக்கு பாடம் சொன்னவன்
காவலென நின்று பெரும் சினந்தணிந்து தணிகையிலே
கண்குளிரக் காட்சி தந்தவன்
நீ பாங்குடனே அருள் தரவே பழம் முதிரும் சோலையிலே
பரஞ்சோதியாய் நின்றவன் . . பரஞ்சோதியாய் நின்றவன்
கருணை மணம் கமழுமந்த அருணகிரி தமிழில் மனம்
மகிழ்ந்தாடி நின்ற முருகன்
கிழவியிவள் புலமை கண்டு அழகுமிகும் குழந்தையென
மயிலேறி வந்த குமரன்
ஆதிசிவன் பிள்ளையென ஆனைமுகன் தம்பியென
ஞானப்பழமான முதல்வன்
நீ பாடும் குரல் வளம் கொடுக்கும்
பனிமலையில் வாழுமந்த பார்வதியின் இளைய புதல்வன்
தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள்
சிந்தையிலே நின்ற மன்னவா
நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தணித்தருளும்
ஞானகுரு நாதனல்லவா . . நாதனல்லவா
நினைக்கின்ற பொழுதெல்லாம்
நிகரில்லா பக்திரசம் தருகின்ற சக்தி வேலன்
நீ துதிக்கின்ற கணமெல்லாம் இனிக்கின்ற
இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்
அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
அன்புக்கு ஒரு தெய்வம் நீ
சிறுகுறையேதும் இல்லாமல் குலம்காத்து
எந்நாளும் அருள்செய்யும் பெரும்வள்ளல் நீ
மலைதோறும் படைவீடு இருந்தாலும்
முருகா என் மனவீடு வந்து அமர்வாய்
நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல்
கனிவோடு தந்து அருள்வாய் . . கனிவோடு தந்து அருள்வாய்
தேவைகளை பூர்த்தி செய்யும் தேன்சொரியும்
மூன்றுதமிழ் குமரா உன் கோவிலாகும்
தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான
முதிர்ந்த மனம் முருகா உன் மயிலுமாகும்
வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற
வெண்ணீறு அணிந்த முருகன்
நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாது அருள்சேர்க்கும்
வானோர்கள் போற்றும் தலைவன்
நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து
நினைவெல்லாம் இனிக்கின்றவன்
நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஓளிர்கின்ற வேலெடுத்து
உறுதுணையாய் வருகிறவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன்
குளிர்ச்சித் தரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே
பறக்கும் உந்தன் சேவற்கொடியே
மனதழற்சியின்றி தனைமறந்து மலர்ச்சியுடன்
தணிகையிலே நடம்புரியும் தோகை மயிலே
பன்னீரில் அபிஷேகம் வெண்நீறில் அலங்காரம்
அதிரூபம் கொண்ட முருகன்
நீ புரியாமல் அடியேனும் பிழைநூறு செய்தாலும்
பொருத்தருளும் செல்வக்குமரன்
ஒய்யார மயிலேறும் உன்காட்சி எழில்யாவும்
ஒளிவீசும் தெய்வாம்சமே
பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக
அருள் செய்ய வரவேணுமே . . நீ அருள் செய்ய வரவேணுமே
இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி
செவி உரைத்த முத்துக்குமரன்
நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய்
உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமரன்
தடைநூறு வந்தாலும் செயல்வெற்றியாக்கித் தரும்
தாராள குணம் கொண்டவன்
நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வானாகி
மாறாது அருள் செய்பவன்
தீராத காதலொடு திருவடியை தொழுபவர்க்கு
திரவியமே தருகின்றவன்
நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டுவரும்
தார்மீக பொருள் தந்தவன் . . தார்மீக பொருள் தந்தவன்
சினம் கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து
வளமாக வைத்த முருகன்
நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்தஎனை
பரிவோடு காத்த குமரன்
படியேறி கால்நடக்க காவடிகள் தோள்சுமக்க
துணையெனவே வந்த முருகன்
படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎனை உலகிலின்று
புலமைப் பெறச்செய்த குமரன்
தோல்விகண்டுத் துவளாத வெற்றுக்கண்டும் மகிழாத
மனம் கொடுத்த அன்பு முருகன்
நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி போகச்செய்து
எனையாளும் செந்தில்குமரன் . . எனையாளும் செந்தில்குமரன்
கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம்
கந்தா உன் கருணையன்றோ
நான் எல்லாம் இழந்த பின்னும்
ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ
கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற
மானிடர்கள் கூட்டம் நடுவே
மனம் தேடி உனைத்திரிந்தபடி திருப்புகழை பாடுமெனை
நாடி வந்து காத்த குருவே
ஆசையெனும் தூண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை
இதமாக மீட்ட முருகா
மோகமெனும் தீச்சுழலில் முங்கிவிட இருந்தஎனை
முழுதாக காத்த இறைவா . . முழுதாக காத்த இறைவா
விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும்
முருகா உன் செயலாலன்றோ
இங்கு அழுதவர்கள் சிரிப்பதுவும் சிரிப்பவர்கள் அழுவதுவும்
குமரா உன் தயவாலன்றோ
அந்திபகல் எப்பொழுதும் தங்குதடையில்லாமல்
உந்தன் முகம் கண்ணிலாடும்
தினம் எந்த நிலை கொண்டாலும்
கந்தன் துணையென்றாலே வந்த வினை மெல்ல ஓடும்
பணம் பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை
முருகா உன் அருள் போதுமே
உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை
குமரா உன் நிழல் போதுமே . . குமரா உன் நிழல் போதுமே

Пікірлер: 4 300
@RathikaKumar-ur6ev
@RathikaKumar-ur6ev 2 ай бұрын
முருகனை முழுமையாக நம்புபவர்கள் ❤ ஒரு லைக் பண்ணுங்க 🎉
@kumaresans4096
@kumaresans4096 Ай бұрын
Kumaresan.musiri😢
@cricketfans-dw8io
@cricketfans-dw8io Ай бұрын
Vetti..vel.murugankku.arokara 8:51
@anbarasann7998
@anbarasann7998 25 күн бұрын
❤❤❤❤❤
@dr.a.ismailabdhulkathar6997
@dr.a.ismailabdhulkathar6997 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் ஆனால் இப்பாடலை கேட்கும் போது மன ஆறுதல் கிடைக்கிறது ஓம் முருகா வேல் வேல் வெற்றி வேல்
@ishwarimaruthuvar3822
@ishwarimaruthuvar3822 Жыл бұрын
00000
@ishwarimaruthuvar3822
@ishwarimaruthuvar3822 Жыл бұрын
P0pp0
@gurusahana3674
@gurusahana3674 Жыл бұрын
சுப்பர்🙏🏼🙏🏼🙏🏼
@malikudayaprince4102
@malikudayaprince4102 Жыл бұрын
🤗🥰☺️
@ganeshvinayaga236
@ganeshvinayaga236 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சலாமாலிக்கும்
@onemanarmy7808
@onemanarmy7808 Жыл бұрын
பணம் பதவி தேவையில்லை பொன்பொருள்ம் நாடவில்லை முருகா உன் அருள் போதும்மே உயிர் வாழ்கின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டம் இல்லலை குமரா உன் நிழல் போதுமே 🙏🙏🙏🙏💫 my favorite line putichavanga like போடுங்க 🙏
@arulperumal306
@arulperumal306 Жыл бұрын
Nice line
@swamykandavel6886
@swamykandavel6886 Жыл бұрын
அவன் அருளுக்கு மேல் ஒன்று வேண்டுமோ நண்பா.
@ranganyadav5868
@ranganyadav5868 Жыл бұрын
My favorite
@onemanarmy7808
@onemanarmy7808 Жыл бұрын
@@ranganyadav5868 tq
@ranganyadav5868
@ranganyadav5868 Жыл бұрын
@@onemanarmy7808 welcome brother kalai vanakam
@dhanalakshmigeetha1038
@dhanalakshmigeetha1038 4 ай бұрын
🙏🏿 முருகா கொடுத்த குழந்தையை எடுத்து கொண்டாய், நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோட என் மகளுக்கு ஒரு பிள்ளை குடுப்பா கமெண்ட் பார்க்கும் எல்லோரும் என் மகளுக்காக வேண்டி கொள்ளுங்கள் 🙏🏿🙏🏿🙏🏿
@selvarani5665
@selvarani5665 3 ай бұрын
கண்டிப்பாஉங்களுக்குபேரன் பேத்திசீக்கிரம்கிடைக்கும்முருகன்சீக்கிரம்அருள் புரிந்து விடுவார்நானும் வேண்டிக்கொண்டேஇருக்கேன்
@JSJO676
@JSJO676 3 ай бұрын
முருகன் அருளால் தங்களுக்கு அழகான பேத்தி கிடைக்கும்.
@dhanalakshmigeetha1038
@dhanalakshmigeetha1038 3 ай бұрын
@@JSJO676 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@maheshwari3485
@maheshwari3485 3 ай бұрын
இன்னும் நான்கு மாதங்களில் குழந்தை பேறு உண்டாகும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பன் முருகனையும் உண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhanalakshmigeetha1038
@dhanalakshmigeetha1038 3 ай бұрын
@@selvarani5665 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kmaheswari1246
@kmaheswari1246 2 ай бұрын
இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து என் உயிர் பிரிய வேண்டும்
@keerthanamoorthy4885
@keerthanamoorthy4885 Ай бұрын
ஆம் இறைவா என் ஆத்மா உன் காலடியில் சேர் வேண்டும் 🙏🪔
@arulkumaranjayaraman7991
@arulkumaranjayaraman7991 Ай бұрын
Vera level words
@MUTHUKUMAR-gx5se
@MUTHUKUMAR-gx5se 22 күн бұрын
🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
இந்த முருகன் பாடலை நான் கேப்பேன் இந்த வருஷம் 2024 இந்த பாடலை யார் கேப்பிங்கா சொல்லுங்கா எனக்கு பிடிக்கும் 🙏🙏🙏🙏
@muthuselvimuthuselvi8826
@muthuselvimuthuselvi8826 6 ай бұрын
நா ketten
@r.mr.m7702
@r.mr.m7702 6 ай бұрын
நான் கேட்கிறேன்
@ponkarunakaran3353
@ponkarunakaran3353 6 ай бұрын
Q ​@@muthuselvimuthuselvi8826
@priyuu_art
@priyuu_art 6 ай бұрын
Nan 2024 la than intha song ah 1st time kekuren ithuku munnala kettathu illa 😂😢 Kettathula irunthu thirumba thirumba ketkanum pola iruku🥹😌🫠😍
@aruljustin5853
@aruljustin5853 6 ай бұрын
அருமையான பாடல்
@haridheja7262
@haridheja7262 2 ай бұрын
உங்கள் அனைவருக்கும் அந்த முருகன் ஆசிகள் உள்ளது
@sramamoorthimoorthi4373
@sramamoorthimoorthi4373 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் வாய்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் ஓம்முருகா .....
@rathikarathika3860
@rathikarathika3860 9 ай бұрын
❤❤❤
@jithraavan8729
@jithraavan8729 8 ай бұрын
Same feeling…❤️
@sekarraj4542
@sekarraj4542 4 ай бұрын
@Kavithageetha-d5z
@Kavithageetha-d5z 3 ай бұрын
இந்த பாடலை முழுவதுமாக இன்றைக்கு இப்பதான் கேட்கிறேன். நன்றி முருகா.பணம் பதவி தேவையில்லை உன் அருள் போதுமே
@BangraP-he2ji
@BangraP-he2ji 2 ай бұрын
Muruga yean Valkaigu Ollie kodu eriva
@sathamusen.
@sathamusen. 4 ай бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆக இருந்தாலும் பக்தி பாடல் கேட்பதற்கு மதம் ஒரு தடை அல்ல ... என்ன ஒரு அர்ப்புதமான வரிகள் ... இந்த ஒரு voice இருக்கே ... paaaaaa❤
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 3 ай бұрын
நன்றி சகோ
@viswavenkat6683
@viswavenkat6683 2 ай бұрын
Valka
@sundaresundare5789
@sundaresundare5789 2 ай бұрын
சூப்பர் ப்ரோ 🙏
@niyathivithyananthan8564
@niyathivithyananthan8564 2 ай бұрын
வாழ்க சோதரனே முருகன் நிச்சயமாக கிடைக்கும்
@shreerajaganapathisilksrea9146
@shreerajaganapathisilksrea9146 2 ай бұрын
❤❤❤❤
@sonaimuthu4736
@sonaimuthu4736 5 ай бұрын
கோவை கமலாம்மாக்கு முருகனின் ஆசீர்வாதம் கிடைக்க பெறட்டும்
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
ஆசீர்வாதம் கிடைத்து விட்டது. அதனால் தான் இந்த கம்பீர குரலும் இசை ஞானமும் ❤❤
@rkntextile8263
@rkntextile8263 2 ай бұрын
மனசு கஷ்டம் இருக்கும் போது இந்த பாடல் கேட்கும் போது ஒரு தெளிவு வரும்
@trichynaveen740
@trichynaveen740 Жыл бұрын
நீங்க முருகன் பக்தன் இருந்தால் like போடுங்க 🙇🙏
@Vinoponraj
@Vinoponraj 6 ай бұрын
👍👍👍👍
@Vannan4738
@Vannan4738 5 ай бұрын
முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
@Vannan4738
@Vannan4738 5 ай бұрын
முருகன் எங்கள் குல தெய்வம்....!🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💯
@mala7745
@mala7745 5 ай бұрын
🎉
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc 5 ай бұрын
yessssss me too,,❤❤❤❤
@murugamatrimony3996
@murugamatrimony3996 2 жыл бұрын
பாடியவருக்கும், பாடலாசிரியருக்கும் முருகன் அருள் உண்டு. இசையமைத்தவருக்கும், கேட்கும் அனைவருக்கும் அவனருள் நிச்சயம் உண்டு
@umakamaraju7753
@umakamaraju7753 Жыл бұрын
Murugan arul irunthal mattum ithu pondra paadalgal paadamudiyum, eluthamudiyu
@rameshvramesh6801
@rameshvramesh6801 Жыл бұрын
TV cf
@akshairaja7359
@akshairaja7359 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@s123r123i123
@s123r123i123 10 ай бұрын
Started with kanada ragam
@kamalanathant6090
@kamalanathant6090 9 ай бұрын
மெய்சிலிர்கும் பாடல் அரோகரா💐💐💐
@narayanankrishnamoorthi2594
@narayanankrishnamoorthi2594 2 жыл бұрын
அம்மா அனுதினமும் 100 முறை கேட்டால் கூட சலிக்கவில்லை அருமையான பாடல் என் அப்பன் முருகப்பெருமான்
@thenmozhip9112
@thenmozhip9112 2 жыл бұрын
மனம் உருகி , உள்ளம் கசிந்து , என் ஆன்மாவை தொட்டு என் இறைவனை என்னிடம் கொண்டு வந்த பாடல் வரிகள் குரலின் இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை இதயமே சாட்சி.
@lakshmivalliammal111
@lakshmivalliammal111 Жыл бұрын
உண்மை.
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
Sathiyam
@vetrikayal9968
@vetrikayal9968 Жыл бұрын
அருமையான பாடல் ❤️
@studywithlove
@studywithlove Жыл бұрын
தேடியது கிடைத்தது
@NeelaNeela-is1fr
@NeelaNeela-is1fr 18 күн бұрын
இந்த பாடலைக் கேட்கும் பொழுது மனது மனதுக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது
@thavasimouni6195
@thavasimouni6195 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏... நன்றி கூற வார்த்தை இல்லை...
@Dineshdevaraj1996
@Dineshdevaraj1996 2 жыл бұрын
🙏
@Krishna-l1k6g
@Krishna-l1k6g 5 ай бұрын
🙏🙏🙏om saravana bhava
@nageswari7638
@nageswari7638 Жыл бұрын
நீண்ட நாள் கழித்து முருகன் எனக்காக அனுப்பி வைத்த பாடல்
@karthikeyankarthikeyan5972
@karthikeyankarthikeyan5972 Жыл бұрын
Vel vel murugaa vetri vel murugaaa...
@lovelyanimals5777
@lovelyanimals5777 Жыл бұрын
Om saravanabhava
@lovelyanimals5777
@lovelyanimals5777 Жыл бұрын
OM MURUGA🙏
@gnanambigais.ambiga2029
@gnanambigais.ambiga2029 9 ай бұрын
விளம்பரம் எதுவும் இல்லாமல் இப்பாடலை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... முருகா சரணம்...❤❤❤
@RIS_vlogs957
@RIS_vlogs957 4 ай бұрын
பணம் பதவி தேவையில்லை பொன் பொருளை நாடவில்லை முருகா உன் அருள் போதுமே............🛐 உயிர் வாழும் காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை குமரா உன் நிழல் போதுமே............🙏
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
இன்று இரவு 12 மணி அளவில் தற்செயலாக இந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன். பிறந்ததின் பயனை உணர்ந்த நேரம். குரல் வைரம். பாடல் மாணிக்கம்.இசை மரகதம் .கண் கசிகிறது ஆனந்தத்தில்
@sureshsankaran3404
@sureshsankaran3404 Жыл бұрын
நான் சாகும் வரை இந்த பாடல் தினமும் ஒலிக்கும்... மண அமைதி கிடைக்குது அம்மா..... நன்றி
@vigneshviki6555
@vigneshviki6555 Жыл бұрын
Super
@chockkalingamchidambaram3342
@chockkalingamchidambaram3342 2 жыл бұрын
என் வாழ்கையில் என் அப்பன் முருகன் இல்லையேல் நான் இல்லை...இனி எத்தனை ஜென்மம் இருப்பினும் அய்யா முருகா நானும் எனது குடும்பமும் உனக்கு அடிமை 🙏🙏🙏
@kannadasan5962
@kannadasan5962 Жыл бұрын
🙏🙏🙏🙏🙋🙋🙏
@thirumurugan8885
@thirumurugan8885 Жыл бұрын
இந்த பாடல் கேட்டு என் வாழ
@pesukirarkalpeopletalkrani7525
@pesukirarkalpeopletalkrani7525 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dhamakumar4194
@dhamakumar4194 Жыл бұрын
அம்மா,கண்மூடி கேட்கையிலே கந்தனவன் முன்வந்து என் கண்ணீரை துடைப்பது வாய் உணர்கிறேனே!😂🙏
@KIDS-5A
@KIDS-5A 11 ай бұрын
🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesanmathi5290
@venkatesanmathi5290 7 күн бұрын
இந்தப் பாடலை கேட்பதற்கும் முருகனுடைய அருள் வேண்டும்
@sivakalaia384
@sivakalaia384 Жыл бұрын
இந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்...கோவை கமலா... அவர்களுக்கு கோடி..நமஹ்காரம்🙏🙏🙏🙏🙏
@VanniyarDeva
@VanniyarDeva Ай бұрын
இந்த பாடலை. கேட்கும் போது அழுகை தான் வருது ❤❤❤❤❤❤❤❤❤ ஓம் முருகா ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤ super song❤❤❤❤ ஓம் முருகா
@g.vendagovindhan3887
@g.vendagovindhan3887 2 жыл бұрын
அம்மா உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க்கும்போது என் உடல் சிலிர்த்து விடுகிறது... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.... நீங்கள் இன்று போல் என்றும் இதே குரல் வளத்துடன் அருமையான பாடல்கள் தர வேண்டும் என்று உங்களை நான் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் நலமாக இருக்க நான் வணங்கும் திருப்போரூர் கந்தசுவாமியை வேண்டி கொள்கிறேன் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjunathr1308
@manjunathr1308 Жыл бұрын
உண்மை
@kalaikannan8917
@kalaikannan8917 Жыл бұрын
Om Muruga.....
@shanthiganesan4283
@shanthiganesan4283 Ай бұрын
விரும்பி திரும்பத்திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கும் பாடல்🙏🙏🙏🙏
@user-ki2rm5hh3y
@user-ki2rm5hh3y 2 жыл бұрын
தாயே தங்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள வலிகள் அனைத்தும் கண்ணீராய் கண்கள் வழியாக வெளியேறி மனதிற்கு இதமாக இருக்கிறது நன்றி
@kohilavanivani5247
@kohilavanivani5247 Жыл бұрын
Amma muruganukakave unka kural entha patal kekumpothu manathukul enampureyatha anantha.sukamaka ullathu kannel neer otukerathu murukanukum enakum ulla antha pakthei unkal patalin valiyaka velipatathu
@ramakrishnan7646
@ramakrishnan7646 Жыл бұрын
Om muruga namasthe by.s.visnu
@anurajini3538
@anurajini3538 Жыл бұрын
Na solla nenaachaathum athuthan
@anurajini3538
@anurajini3538 Жыл бұрын
Enoda Vali poguthumuruga entha kekum pothu
@seramesh1977
@seramesh1977 Жыл бұрын
So meaningful lyrics ,wonderful pronunciation in singing voice so devotional and the music is very very nice with devotional music, one amoung the best song in my favorite [mukkani suvai ma pala vazhai ]
@hatricboy703
@hatricboy703 2 жыл бұрын
பாடல் வரிகள் கேட்க கேட்க முருகனையே நேரில் பார்த்தது போல இருந்தது என் கண்களை கலங்க வைத்தன 🦚🦚🦚🦚 🙏 வெற்றி வேல் முருகனுக்கு🙏 🙏 அரோகரா 🙏
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 Жыл бұрын
பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக அருள்செய்ய வரவேண்டுமே..நீ அருள் செய்ய வரவேண்டுமே..மண்மீது நான் விழுந்து விண்மீது உனைக்காண பண்மீது பயணம் செய்தேன்.உன்மீது நான் கொண்ட பொன்னான எண்ணங்கள்‌ பண்ணாக வருகின்றதே...முருகா உன் செயலாலன்றோ..முத்துக்குமரா உன் கண்ணான அருளாலன்றோ.. 🙏
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 2 жыл бұрын
ஆஹா என்ன அருமையான மெட்டமைப்பு..சிவரஞ்சனி ராகத்தில் சிவகுடும்பத்தையே கட்டி இழுத்துவிட்டாய் தாயே...பெங்களூர் ரமணியம்மாவையும்‌கந்தரவக்குரலினி அம்மையார் கே.பி.சுந்தராம்பள் எனும் இருபதாம் நூற்றாண்டு ஔவையையும் ஒருசேர மீண்டும் நினைக்கவைத்த கோவை கமலா அம்மாவிற்கு கோடான கோடி.நன்றி.முருகனருள் முழுமையாய் உமக்கு கிட்டட்டும் தாயே...உன் குரல் இனிமைக்கு சிவகுடும்பமே அடிமை...கல்மனதையும் கரைய வைக்கும் சிவரஞ்சனி ராகம் உங்கள்குரலில் அனைத்து தெய்வங்களையும் தேவர்களையும்‌ஒரு சேர கட்டியிழுத்து வரும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை வாழ்க நின் தமிழ்கடவுள் முருகனின் பக்திப் பாடலுக்கு முருகனே அடிமை.....
@lovelyanimals5777
@lovelyanimals5777 Жыл бұрын
Om saravanabhava
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 Жыл бұрын
அப்பனே முருகா நின் திருவடியே சரணம்
@kuttykutty4543
@kuttykutty4543 4 ай бұрын
Appa muruga .Amma Kamala Amma en kannerukku.....ungal padal pothum
@VPandarinathan
@VPandarinathan 2 ай бұрын
மன அமைதி கிடைக்கும் ஆழமான பக்தி நிறைந்த பாடல் நன்றி
@pathmini95soniya83
@pathmini95soniya83 Жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுது ஓடுகிறது 😭😭😭 ⚜️முருகா⚜️உன் அருள் நிறைந்த இந்த பாடல் வரிகளை கேட்டு மனம் உயிர் உள்ள வரை உன் காலடியில் மண்டியிட்டு கிடக ஆசைகொள்கிறது 🙏🙏🙏🙇🙇🙇என் ஆருபடை குமரா ⚜️⚜️⚜️🌸🌸🌸🌸🌸😓😓😓😓😓
@ramalakshmik7422
@ramalakshmik7422 Жыл бұрын
Yes...😭😭😭🙏🙏🙏🙏
@sakthivel-dt7dx
@sakthivel-dt7dx 11 ай бұрын
Sgbceudfvdethgçehh2gbçarthbcWthbgc
@savithirirasu5503
@savithirirasu5503 2 жыл бұрын
எனக்கு இப்பாடலை கேட்க்க இப்பொலுதுதான் முருகன் அருள்புரிந்தான் மிகவும் அருமை
@agiladevi4846
@agiladevi4846 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ ஓம் முருகா நான் இன்று ஒரு சின்ன கடை திறக்க இருக்கிறேன் உன் அருள் தருவாய் நான் ஒரு மற்றுத்திறனாளி 🙏🙏🙏🙏🙏ஆசிர்வாதம் செய் muruga🙏🙏🙏
@ramasamiramasami5954
@ramasamiramasami5954 3 ай бұрын
தோல்வி கண்டு துவளாத வெற்றிக்கண்டு மகிழாத மனம் கொடுத்தா அன்பு முருகா❤❤❤❤❤
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 Жыл бұрын
என் மன கஷ்டங்கள் கலைந்த தருணத்தை தந்த குரல் வளமும் எம் பெருமான் முருக பெருமானின் அருளும் கிடைத்த மகிழ்சி வெளிநாட்டிலிருந்து தனிமையில் கேட்கும் சுகமே தனித்துவமே முருகா எமையும் இவ்வுலகையும் காத்தருள்வாய் அப்பனே 🙏🙏🙏
@karuppasamymurugan5870
@karuppasamymurugan5870 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Harivarshasaro
@Harivarshasaro Жыл бұрын
❤❤❤🎉
@sathiyaraj9391
@sathiyaraj9391 2 жыл бұрын
சக்தி வாய்ந்த குரல் மற்றும் முருகனின் அருள் பெற்ற இந்த பாடலை அனைவரும் கேட்க வேண்டும் 🙏 ஓம் ஶ்ரீ முருகா போற்றி 👍🙏
@rk.murthymurthy1672
@rk.murthymurthy1672 9 ай бұрын
Very powerful song I like it very much
@kishore.i6443
@kishore.i6443 8 ай бұрын
முருகா என் தம்பி பழையபடி எழுந்து நடக்க வைங்க முருகா இன்னும் செயற்கை சுவாசத்தில் தான் உள்ளான் அவனை காப்பாற்றுங்கள் உங்கள் அடிமையாக்குங்கள் முருகா இனி அவன் திருந்தி நல் வாழ்கை வாழ அருள் புரிவாயாக நீண்ட ஆயுளை தாருங்கள் நோய் நோடியில்லாமல் வாழ வேண்டும் நீங்கள் தான் எப்போதும் என் தம்பிகளுடன் துணை நிற்க வேண்டும் கந்தா 🧠🫀🫁👁️👁️🤕🙏🙏🙏
@verrappangrups5335
@verrappangrups5335 6 ай бұрын
கருணை கடல் அவன் முருகன் இருக்க பயமேன் அண்ணா கவலைப்படாதே
@user-praba
@user-praba 6 ай бұрын
உங்கள் தம்பி நன்றாகி விட்டானா
@kishore.i6443
@kishore.i6443 6 ай бұрын
@@user-praba மிக்க நன்றி பிரபா ... செயற்கை சுவாசத்தில் இருந்து வந்து விட்டார்... தலையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டனர் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் பிரபா ஒரு பெண்ணாக இருந்து பார்த்து கொள்வது கடினமாக உள்ளது முருகன் அருளால் என் தம்பி எழுந்து வருவான் அடுத்த வருடம் என் தம்பி இந்த படத்தில் உள்ளவாறு போடுவேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா..🙏🛐 யாம் இருக்க பயமேன்...🙏🛐🐓🦚🛐🙏
@user-praba
@user-praba 6 ай бұрын
@@kishore.i6443 கண்டிப்பாக ஈசனின் அருளால் நல்லதே நடக்கட்டும்... ஓம் நமசிவாய
@kishore.i6443
@kishore.i6443 6 ай бұрын
@@verrappangrups5335 நன்றி சகோ நீங்களும் முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 🙏
@Saraswathi-y7x
@Saraswathi-y7x 3 ай бұрын
என் குல தெய்வம் அருளாலும் முருகா உங்கள் அருளாலும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்..
@perfectengineerings2238
@perfectengineerings2238 6 ай бұрын
என்ன எழுத்து... என்ன அர்த்தங்கள்... என்ன இசை... என்ன ஒரு குரல் நயம் இன்று அவ்வையார் இருந்தால் இப்படித்தான் இருக்கும். ஓம் ஶ்ரீ சரவணபவ❤
@jrbaanmeegam
@jrbaanmeegam 17 күн бұрын
அருமையான குரல் அருமையான வைர வரிகள் என் குலதெய்வம் முருகன் அனைத்து தமிழர்களின் இதயங்கள் கவர்ந்த இந்த முருகன்
@mk-realtors1741
@mk-realtors1741 4 ай бұрын
அம்மா எங்கள் தெய்வத்தின் பரம்பரையில் வந்த கோமேதகமே, மாணிக்கமே, முத்தே, எங்கள் தங்கத்தின், தமிழக சொத்தின் எங்க அவ்வை பிராட்டியார் பட்டம்மாள் பேத்தியே, அருட்பெரும் தெய்வத்தை பாடவே உங்கள் பரம்பரையே படைத்தானோ முருக கடவுள். நீ பாடும் பாடலை கேட்டாலே பட்ட மரத்திற்கும், பாரங்கல்லுக்கும், பக்தி வருமே. உன் குரலை கேட்டால் அந்த முருகன் ஓடி வருவான். வாழ்க, வாழ்க, வாழ்க.......
@Karnankarnan5604
@Karnankarnan5604 3 ай бұрын
கோவை கமலாம்மா இந்த. பாடலை பாட என்னதவம் செஞ்சிங்கலோ என்அப்பன் பழனிஆண்டவரை நேரில்பார்த்த நிம்மதி சொல்ல வார்த்தையில் லை ஆப்படி ஒருமகிழ்ச்சி முருகப்பொருமாலே
@sivasubramaniamk1112
@sivasubramaniamk1112 Жыл бұрын
தாயே உன் குரலுக்கு தமிழ் முருகனே அடிமை அருமையான வரிகள் அருமையான குரல் கேட்பதற்கு இதமான பாடல்
@ajithsaravanan183
@ajithsaravanan183 Жыл бұрын
Suuper padal amma 🙏🙏🙏🙏
@senthilnathan9439
@senthilnathan9439 Жыл бұрын
@KIDS-5A
@KIDS-5A Жыл бұрын
அந்தக் கந்தனே உந்தன் நாவில் வந்து வரி சொல்ல நீங்கள் பாடியது போல் இருக்கிறது அம்மா 🙏
@Saisridivya-u8f
@Saisridivya-u8f 17 күн бұрын
மலைதோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மனவீடு வந்து அமர்வாய்.....
@gobijayam904
@gobijayam904 Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றது. முருகா போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி கருணை கடலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
@muruganradios5148
@muruganradios5148 2 жыл бұрын
பாடல் வரிகள் மெய்சிலிா்கவைத்தது! தெய்வாம்ச பொருந்திய குரல்வளம்! வாழ்க வளமுடன்!
@GangaGanga-d3f
@GangaGanga-d3f 16 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@muruganjaya807
@muruganjaya807 7 ай бұрын
இறைவனுடைய அருள் இருந்தால்தான் இதுபோன்ற பாடலுக்கான வாய்ப்பாக கொடுப்பார் நல்ல தரமான குரல் வளம் வாழ்க வளர்க சிறப்பாக திருமதி கோவை கமலா
@Saisridivya-u8f
@Saisridivya-u8f 17 күн бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்கிடுமே... செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவோருக்கு மேவ வராதே வினை........
@mk-realtors1741
@mk-realtors1741 4 ай бұрын
இப்படி பாடுவது நீங்கள் இல்லை அந்த சண்முகநாதன் உங்க உடலில் இருந்து ஆட்டுவிக்கிறான் 🙏🙏🙏
@vijayasanjai5364
@vijayasanjai5364 Жыл бұрын
இப்போது தான் இந்த பாடலை முதன் முதலில் கேட்கிறேன்.அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்போது இந்த பாடல் தான் என் சுவாசமாய் உள்ளது.இப்பாடலை பாடியவரும் இதற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
@rathinakumar4418
@rathinakumar4418 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகனின் மனதையே கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள் 🙏🙏🙏
@KesavanEllumalai-fh7ss
@KesavanEllumalai-fh7ss Жыл бұрын
​@@rathinakumar4418🎉🎉🎉cmmmmmmmmmmmmxnnnm
@challa.pullasudhan122
@challa.pullasudhan122 9 ай бұрын
JioFry​@@rathinakumar4418
@r.annamalai4755
@r.annamalai4755 Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏 இந்தப் பாடலைப் பாடிய கமல அம்மாவுக்கு கோடண கோடி நன்றி இந்தபாடலை எத்தனமுறைகேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் உயிர் உள்ளவரை
@rajiraji9004
@rajiraji9004 2 ай бұрын
முருகா எனக்கு நிம்மதி கொடுங்க முருகையா என் கணவர் என்ன புரிஞ்சு அன்பா இருக்கணும் முருகா🦚🙏🦚😊
@ravichandran-bs8mc
@ravichandran-bs8mc 2 жыл бұрын
மெய் மறந்து முருகனிடம் முன் நின்று பாடுவதாய் உள்ளது இப் பாடல் 🙏 காவியா எழுதிய இப் பாடல் இனி முருக பக்தர்கள் முருகன் முன் நின்று தினம் வேண்டும் பாடலாய்க் அமையும் கோவை கமலா மனம் உருகி பாடி இருக்கிறார்🙏 முருகா சரணம்
@siyamalasubramanian2934
@siyamalasubramanian2934 6 ай бұрын
இந்த பாடல் முடியும் வரை என் கண்ணீரை அடக்க முடியவில்லை 😢😢🙏🏻
@pugazharasi3565
@pugazharasi3565 4 ай бұрын
Enakkum
@MohanRaj-r2y
@MohanRaj-r2y 14 күн бұрын
Kk...
@akannankanna3998
@akannankanna3998 10 ай бұрын
கே பி சுந்தராம்பாள் அம்மா ஞாபகம் வருகிறது ஓம் முருகா முருகா முருகா
@KathiravanKrish-officials
@KathiravanKrish-officials 5 ай бұрын
அந்த ஔவையின் பேத்திதான் இவர்
@SakthiSakthi-hq8wy
@SakthiSakthi-hq8wy 5 күн бұрын
அப்பா எனக்கு நல்ல புரிதல் திறன் குடுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@priyatharsininarmathan7722
@priyatharsininarmathan7722 Жыл бұрын
எனக்கு முருகன் என்றால் உயிர் இந்த பாடலை கேட்ட பிறகு என் கவலைகளை என் துன்பங்களை எல்லாம் கொட்டி அழுது விட்டன். நல்ல அருமையான பாடல் முருகன்ட்ட அருள் உள்ளவர்களால் தான் இந்த பாடலை எழுத முடியும் பாட முடியும்
@sajeevagosh3246
@sajeevagosh3246 Жыл бұрын
Very nice
@ganeshmuthu1503
@ganeshmuthu1503 Жыл бұрын
Vetrivel muruganukku aroharaa
@ganeshmuthu1503
@ganeshmuthu1503 Жыл бұрын
Harohara
@ganeshmuthu1503
@ganeshmuthu1503 Жыл бұрын
Vetrivel muruganukku aroharaa
@manjunathr1308
@manjunathr1308 Жыл бұрын
நன்றி தாயே
@subramanianramachandran8898
@subramanianramachandran8898 Жыл бұрын
நீண்ட நாட்களாக என் அய்யன் முருகனின் இந்தப் பாடலை தேடிக் கொண்டிருந்தேன் இப்பொழுதுதான் முருகன் அருளால் எனக்கு இந்த பாடல் முழுமையாக கேட்க ஒரு சந்தர்ப்பம் பிடித்தது ஏற்பட்ட பெரும் மகிழ்ச்சி இதுவே🙏🙏
@srk8360
@srk8360 2 жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💐💐..(BEYOND WORDS)...
@kanthikanthi3369
@kanthikanthi3369 2 жыл бұрын
Supper
@VijayV-ws8ih
@VijayV-ws8ih 2 ай бұрын
கேட்க கேட்க சலிக்காத பாடல் என்னப்பன் முருகன் ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் உருகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அம்மா உங்கள் குரலில் இப்பாடலை கேட்க உயிரும் உருகி மனம் முருகனின் காலடியில் மயங்கி கிடக்கிறது.
@Mrvanan084
@Mrvanan084 Жыл бұрын
அவனை என்றும் மறவாதே...
@anthonyrajanthony5400
@anthonyrajanthony5400 Жыл бұрын
பாடல் மற்றும் கோவை கமலா அம்மாவின் குரல் அருமை. முருகன் அருள் 100% உண்டு.
@chitrakandhasamy5778
@chitrakandhasamy5778 2 жыл бұрын
பாடல் வரிகள் உள்ளத்தை உருகவைக்கிறது அருமையான பாடல் kps குரல்
@kabilprakash3919
@kabilprakash3919 2 жыл бұрын
🚩🙏வெற்றிவேல் 🙏முருகனுக்கு 🙏 அரோகரா 🙏 அரோகரா 🙏🚩🚩🚩🚩🚩🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@tamilmoviesclip3652
@tamilmoviesclip3652 Ай бұрын
என் கண் கலங்குகிறது...... காரணம் என்ன என்று எனக்கே தெரியவில்லை..... ❤❤முருகா....
@maheshselvaraj664
@maheshselvaraj664 Жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை ....முருகா 🙏இந்த பாடலை கேட்டுத்தான் காலை வேலை தொடர்கிறது .....கந்தன் உண்டு கவலை இல்லை.முருகா🙏
@athishkarthi4912
@athishkarthi4912 Жыл бұрын
🙏🙏 இந்த பாடல் உங்களை விட வேறு எவரும் இவ்வாறு பாட இயலாது. 💐🙏🙏🙏🙏
@manigmaddy9296
@manigmaddy9296 9 ай бұрын
🙏🌷திருச்செந்தூர் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
@velupriyadharshini452
@velupriyadharshini452 2 ай бұрын
என் உள்ளமெல்லாம் நீயே அப்பா முருகா முருகா முருகா 🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthukaruppan7610
@muthukaruppan7610 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanramaraj585
@kannanramaraj585 Жыл бұрын
முருகனை வேண்டி மனதார நினைத்து இப்பாட லை கேட்டால் அழுகை வரும் வரிகள் 🙏கோவை கமலா அம்மாக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 சொல்லும் மதுரை கமலா 🙏🙏🙏
@SelvaKumar-dl4sj
@SelvaKumar-dl4sj 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 10 ай бұрын
yes
@gajtravelsmassbusesintamil3779
@gajtravelsmassbusesintamil3779 7 ай бұрын
தற்போது மருதமலை அடிவாரத்தில் மேலே சென்று வர பஸ்ஸிற்காக காத்துக்கொண்டுள்ளேன்... பஞ்சாமிர்த கடையில் பாடிக்கொண்டுள்ளது,,, பாட்டின் முதல் வரியை கேட்டு தேடி கண்டுபிடித்து தற்போது கேட்டுக்கொண்டுள்ளேன்.. ❤
@umamaheswari5850
@umamaheswari5850 4 ай бұрын
முருகா உன்னை அத்தனை உருவத்திலும் பார்த்த மாதிரியே உள்ளது.. கண்களில் கண்ணீர் வருகிறது. பாடல் வரிகள் அத்தனையும் உணர்ச்சி வார்த்தைகள்... யார் கேட்டாலும் முருகனை நேசிக்க தொடங்கி விடுவார்கள்... கோவை கமலா அம்மா முருகன் அருள் முழுமையாக கிடைக்கச் செய்கிறார்கள்... மனதிற்கு இதமாக இருக்கிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sethupathinagarajan3995
@sethupathinagarajan3995 2 жыл бұрын
இதை போல் தொடர்ந்து பல பதிவுகளை விரும்புகிறோம் அம்மா சரவணபவ ஓம்
@sivanmarimari9112
@sivanmarimari9112 4 ай бұрын
❤முருகா❤ இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் அப்பன் முருகப்பெருமான் என் மனதுக்குள் இருந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனந்த கண்ணீருக்கு அளவே இல்லை.
@smartupbusiness1184
@smartupbusiness1184 2 жыл бұрын
அருமையான பாடல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@SppalaniKumar-w3l
@SppalaniKumar-w3l Ай бұрын
அருமை அழகு ஆனந்தம் மன நிறைவு ஓம் சரவணபவ ஓம் முருகா அரோகரா
@prabhakaranr6583
@prabhakaranr6583 2 жыл бұрын
அம்மா உயிர் உருகும் பாடல் நன்றி ...😥😥😥 முருகா
@anandhimoorthi747
@anandhimoorthi747 9 ай бұрын
Ss❤
@backto90tamil
@backto90tamil 11 ай бұрын
இந்த பாடலை உருவாக்கிய அத்துணை அண்பு உல்லங்கலுக்கும் எண் கண்ணீறில் அபிஷேகம் செய்கிறேன் ஆறுபடை ஐயா முருகருக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏......
@VelMurugan-cc2uh
@VelMurugan-cc2uh Жыл бұрын
தாயே உங்கள் குரல் மிக அருமயாக உள்ளது... நான் மெய் மறந்து விட்டேன்..... முருகா சரணம் சரணம் சரணம்....🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
@shanmugamvel7028
@shanmugamvel7028 Жыл бұрын
முருகன் மீது மனம் உருகி பாடிய பாட்டு, மெய் மறக்க வைக்கிறது. அம்மா நீங்கள் முருகன் மீது வைத்துள்ள பக்தி அவர் அருளால் அணைத்து செல்வம்கள் தங்களுக்கு கிடைக்கும், என்னுடைய நம்பிக்கை நம்பிய வரை கை விடமாட்டார் 🙏
@NVLalitha
@NVLalitha 7 ай бұрын
OOM SARABANABAVA.YA NAMAHA
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
ஆடும்மயிலேறும் ஆறுமுகா! ஆறுபடைவீடும்சண்முகா! வள்ளித்தெய்வானை வேல்முருகா! வைய்யகம்போற்றும் விநாயகா!!
@jananipjd6055
@jananipjd6055 2 жыл бұрын
கேட்க கேட்க கரைந்து போகிறேன் முருகன் அருள் கடலில்..... மிக அருமையான வரிகள்... நேரே முருகனிடம் இட்டு செல்லுகிறது அம்மா உங்கள் குரல் வளம் 🙏
@SaravanakumarM-j9l
@SaravanakumarM-j9l 4 ай бұрын
இந்த காலத்திற்கு கிடைத்த கே பி சுந்தராம்பாள் அவர்கள் ஓம் முருகா 🙏🙏🙏
@shanmugamsamy1774
@shanmugamsamy1774 3 ай бұрын
கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற மானிடர்கள் கூட்டம் நடுவே முருகன் பாடலை கேட்பதற்கு முருகனின் ஆசீர்வாதம் கிடைக்க பெறட்டும்.
@kalaiarasi2510
@kalaiarasi2510 Жыл бұрын
ஒரு நாள் கேட்க வில்லை என்றால் மனசு கஷ்டமாக இருக்கும் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@kumarimanikkam2275
@kumarimanikkam2275 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் நான் என்னையே மறந்து விட்டேன் ஓம் சரவண பவாய நமக
@rameshsanmargam8927
@rameshsanmargam8927 8 ай бұрын
நான் எல்லாம் இழந்த பின்னும்...வரிகள் அ௫மை
@jotheeswaranjotheeswaran2377
@jotheeswaranjotheeswaran2377 2 ай бұрын
சுப்பரமணி சுவாமிக்கு அரோகர அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@Nandhumedia
@Nandhumedia 2 жыл бұрын
Ena oru powerful voice... Amma vera level... Murugan arul ungaluku muzhuvathum iruku.
@jayanthie2690
@jayanthie2690 3 ай бұрын
அப்பனே முருகா நாங்கள் கட்டிய வீட்டிலும் பிரச்சினை,எங்களுடைய குடும்பத்திலும் பணப்பிரச்சனை, கடன் பிரச்சினை,மனக்கஷ்டம் அனைத்தையும் சரி செய்து கொடு முருகா
@umasm1696
@umasm1696 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா🙏 .
@PriyaSivashanker
@PriyaSivashanker 9 күн бұрын
முருகா இலங்கையில் இருந்து நான் கூறுகின்றேன். என் வேதனைகளை நீக்கி காப்பாற்று முருகா சரணம்
@rekhamurugesan9677
@rekhamurugesan9677 Жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த சம்பாவங்கள் போல இருக்கின்றது . இந்த பாடல் வரிகள் அத்தனையும் அருமையாக இருக்கின்றது.முதல்முறையா கேட்டா போது என்னை மறந்து நான் அழுதுவிட்டேன்.இறைவா முருகா எல்லாம் உன் செயல்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridevisingaravelan9522
@sridevisingaravelan9522 Жыл бұрын
அருமையான குரல் வளம் இறைவனை பாட முருகனின் ஆசி என்றும் உங்களுக்கு கிடக்கட்டும் அம்மா பேச வாரத்தை இல்லை இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வருகிறது அம்மா . முருக கடவுள் மயங்கும் பாடல் வரிகள் குரல் வளம் அருமை ❤️❤️🙏🙏
@user-kv1ee5yl7e
@user-kv1ee5yl7e Жыл бұрын
அப்பனே ஷண்முகா போற்றி போற்றி இப்பாடலை கேட்கும் போது நான் மெய் மறந்து போகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@Deva_18_i
@Deva_18_i Ай бұрын
கோவை கமலா அம்மா அவர்களின் மிகக் குறளில் முருகா எனும் நாமத்தைக் கேட்கும் பொழுது முருகன் அனைவருக்கும் இறங்கி வந்து அருள் பாலிக்கிறார் என்பதை உணர முடிகிறது இந்தப் பாடலை எப்பொழுது எல்லாம் கேட்கிறேனோ பொழுதெல்லாம் என் கண்களில் இருந்து நீர் வழிகிறது .... மன நிம்மதி என்னும் திரவியத்தை தேடித் தருகிறது...... ஹனுமன் சாலிசா உட்பட ஒவ்வொரு தெய்வத்திற்கும்..... சிறந்த தெய்வீக குரல் வளம் மிக்க பாடல்களை வழங்கும் விஜய் மியூசிக் களின் ஆன்மீ சேவை தொடர கோடான கோடி வாழ்த்துக்கள்
@VelMurugan-dj6zo
@VelMurugan-dj6zo 5 ай бұрын
கருணைக்கடலே கந்தா போற்றி போற்றி போற்றி