@@savedchristian4754 தகுதி இல்லாத ஒருவருக்கு, தேவன் காட்டுகிற அளவற்ற இரக்கமே கிருபை. அதாவது நியாமாக நான் நரகத்திற்க்கு பாத்திரவானாகிய பாவி. ஆனால் என்மேல் அன்பு வைத்து எனக்காக தன் சொந்த குமாரனை பாவமறியாத இயேசு கிறிஸ்துவை சிலுவையில் பாவ பரிகார பலியாக கொடுத்தாரே!!! அங்கே தானே நான் ஆழமாக புரிந்து கொண்டேன் தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் அவருடைய தயுவுள்ள கிருபை யும். நாம் யாரும் நம்முடைய சுயநீதியினால் இரட்சிக்கபடவில்லை , இயேசு கிறிஸ்து சிலுவையில் நம் சார்பாக நிறைவேற்றிய நீதியினால் தான் இரட்சிப்பை அடைந்தோம். இதுவே எப்படிபட்ட ஈவு?? பாத்திங்களா சார். அதான் சார் அவரோட அன்பு. நாம் அல்ல , அவரே நம்மில் முந்தி அன்புகூர்ந்தார். நாம் பாவிகளாய் இருக்கும் போது தான் நமக்காக நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி கொடூரமாக இப்படி ஒரு மரணத்தை அனுபவித்தார். நாம் நல்லவர்களாக இருக்கும்போது அல்லவே. நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாது இருப்பதும் அவர் கிருபையே..... இன்றைக்கு காலை சூரியனை பார்த்துவிட்டேன் அவரது கிருபை முழுக்க முழுக்க. ஏதோ நான் இரவு ஜெபித்த ஜெபம் அல்ல, வேதவாசிப்பு அல்ல. அவருடைய தயவுள்ள இரக்கித்தினாலே கிருபையினாலே. நாம் ஒன்றை தேவனுக்காக செய்து அதற்கு பிரதிபலனாக தேவன் ஒன்றைக்கொடுத்தால் அது கடன். அது கிருபை அல்ல. 4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். ரோமர் 4:4 4 தேவனோ இரக்கத்தில் ஜசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, எபேசியர் 2:4 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் எபேசியர் 2:5 6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, எபேசியர் 2:6 7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். எபேசியர் 2:7 8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. எபேசியர் 2:8 9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. எபேசியர் 2:9 நாம் இரட்சிக்கப்பட்டு நித்தியஜுவனிலே பிரவேசிக்கும் வரை இந்த கிருபை தான் நம்மை தாங்கும். இது கிருபை யை பற்றி என்னுடைய புரிதல் வேதத்தின் அடிப்படையில். இதையும் தேவனுடைய கிருபையினாலே புரிந்து கொண்டது என்று தான் விசுவாசிக்கிறேன். அதுமட்டுமல்ல, நான் குமரிமுத்து ஐயாவுக்கு அடிப்படையில் பிராதான சத்தியம் எந்த அளவுக்கு புரியாமல் போய்விட்டதே என்று வருத்தத்தில் தான் சொன்னேன். அதற்கு காரணம் அவரும் இல்லை. எப்படியோ மரணத்திற்கு முன்பு இயேசு வை அறிந்து கொண்டார். அதற்க்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
@savedchristian47544 жыл бұрын
@@rajeshisack230 நல்லது. அப்ப நீங்க நன்மை தீமை குறித்த அறிவை உடையவரா? அந்த அறிவை விட்டுவிட்டீர்களா?
@rajeshisack2304 жыл бұрын
@@savedchristian4754 நன்மை தீமை அறிகிற அறிவு வந்ததால்தான் நமக்கு குற்ற உணர்வே வருகிறது. அதனால் தான் நமக்கு இரட்சிப்பு மீட்பு தேவைபடுகிறது சகோதரரே. நன்மை தீமை அறிகின்ற வயது வந்தபிறகு, நன்மை எது? தீமை எது? என்பது நன்றாக தெரியும் நம்முடைய மனசாட்சிக்கு. ஆனால் மனிதனை பொறுத்தவரையில் எல்லா நேரங்களிலும் எல்லாத்தருணத்திலும் தேவன் எதிர்பார்கின்ற அளவுக்கு நன்மை யை அதாவது நீதியை மட்டுமே செய்து நம்மால் வாழமுடியாது. ஏனெனில் ஆத்துமாவாய், இருக்கின்ற நாம் தாயின் கருவுலிருந்து முதல் முதலாக பிறக்கும் போதே ஜென்ம சரீரத்தை மாம்சத்திலே உடையவராக பிறந்தோம். நாம் குழந்தைகளாக இருக்கும் போது நன்மை தீமைகளை அறிகிற பக்குவம் பகுத்தறிவு முதிர்ச்சி வராத வயதுவரை தேவனுக்கு கணக்கு ஒப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வயதில் நன்கு தெளிந்த நன்மை தீமைகளை அறியும் வயது வந்து விடுகிறதே. அப்போது நாம் நூற்றுக்கு நூறு முழுமையாக நீதியுள்ள மனிதனாக வாழ இயலாது இதை ஒரு மனிதன் உணரவேண்டும். அதனால் தான் இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவை பார்த்து யோவான் 3ஆம் அதிகாரத்தில் 3ஆம் வசனத்தில் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோகம் போக முடியாது என்று சொல்லுகிறார். உடனே நிக்கோதேமு என்கிற அந்த பரிசேயன், அது எப்படி திரும்பவும் தாயின் வயிற்றில் போய் பிறந்து வர முடியும் என்று கேட்கிறான். அதற்கு பின் இயேசுகிறிஸ்து மறுபடியும் பிறக்கின்ற தன்மையை விளக்குகிறார். அடுத்தடுத்த வசனங்களை வாசித்தால் புரியும். நிக்கோதேமுவை பொறுத்தவரை, நிக்கோதேமு மட்டும் அல்ல பொதுவாகவே யூதர்களை பொறுத்தவரை நியாப்பிரமாணத்தை கடைபிடித்தால் நாம் நீதிமான் ஆகி இரட்சிப்பு அடைந்து பரலோகம் போக முடியும் என்று நம்பிக்கொண்டு இருந்தன. ஆனால் இயேசு கிறிஸ்து அந்த நம்பிக்கையை உடைக்கிறார். மறுபடியும் பிறத்தல் என்று இயேசு கிறிஸ்து சொல்லுவது ஒன்றுமில்லை நம் ஆத்துமா ஆவியிலே பிறப்பதை குறித்து பேசுகிறார். மனிதர்களாகிய நாம் ஆத்துமா க்களாக இருக்கிறோம். இந்த ஆத்துமா இந்த உலகத்தில் வாழ உலகத்தில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள மாம்சத்திலே சரீரபிரகாரமாக பிறந்து இருக்கிறோம். சரீர மரணம் அடைந்த பின்னர் ஆத்துமாவால் இந்த உலகத்தில் வாழ முடியாது. ஆனால் அதே ஆத்துமா பரலோகத்தில் வாழ கடவுளோடு தொடர்பு கொள்ள நமக்கு ஆவி தேவை அதாவது தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவி தேவை. ஆவியிலே பிறக்கின்ற பிறப்பு தான் உண்மையிலேயே இரட்சிப்பு. 6 மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். யோவான் 3:6 இப்படி மறுபடியும் பிறப்பதற்கு நம்மால் ஒன்னும் பண்ணமுடியாது. எப்படி யென்றால் ஏற்கனவே மாம்சத்திலே பிறந்தோமே அதற்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிக்கவேண்டும். நம் முதல் பிறப்பாகிய மாம்ச பிறப்பில் எப்படி நமக்கு ஒரு பங்கும் இல்லையோ. அதே போல இரட்சிக்கப்பட்டு பரலோகம் போகும் தகுதி யை பெற அதாவது மறுபடியும் பிறக்கின்ற பிறப்பை அடைய அதாவது ஆவியிலே பிறக்கின்ற அந்த பிறப்பை அடைய நாம் ஒன்றுமே செய்ய முடியாது. இரட்சிப்பு என்றால் மறுபடியும் பிறக்கின்ற பிறப்பு, பாவியாகிய நம்மை தேவன் நீதிமான் ஆக்குகின்ற ஒரு செயல், புதுமனிதனாகவே ஆவியிலே நம்மை பிறக்க வைக்கிறார் உள்ளான மனிதனிலே. ஆவியிலே பிறந்த அந்த உள்ளான மனிதனுக்கு பாவம் செய்கின்ற செயலை வெறுத்து நீதி செய்கின்ற விருப்பம் இருக்கும் ஏனெனில் தேவன் தன்னுடைய ஆவியினாலே நம்மை பிறக்க வைத்திருக்கிறார். ஆனாலும் கூட, குறுகிய காலத்திற்கு நாம் மாம்ச சரீரத்தோடு இந்த உலகத்தில் வாழ்வதால் சில நேரங்களில் நாம் பாவத்தில் இடறி விழ வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த நேரத்தில் ஆவியானவர்தான் நம்மை போதித்து உணர்த்தி அனுதினம் நடத்துவார். இரட்சிப்பு என்றால் மறுபடியும் பிறக்கின்ற பிறப்பு (நீதிமான் ஆக்கப்படுதல்) முதல் பரிமாணம் . இரண்டாவது பரிமாணம் , பரிசுத்த மாக்கப்படுதல் . இப்போது இந்த பரிமாணத்தில் தான் இருக்கிறோம் . ஏனெனில் தேவன் நம்மை நீதிமானாக்கியது நாம் நீதி மான்களாய் வாழவே தவிர, ஏற்கனவே நாம் நீதிமான்களாய் வாழ்ந்ததால் அல்ல. மூன்றாவது மகிமை அடைதல். இறுதியாக மகிமையின் சரீரத்தோடு நாம் உயிர்தெழுவோம் அவரோடு கூட மகிமைக்குள் நாமும் பிரவேசிப்போம். இதில் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவரே செயல் படுகிறார் என்பது தான் ஆச்சரியமான உண்மை.. சகோ.....
@rajeshisack2304 жыл бұрын
@@savedchristian4754 சில வசனத்தை ஆதாரமாக வைக்கிறேன் சகோதரரே. உங்களுக்கு வாசித்தால் புரியும். 3 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 3:3 4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். யோவான் 3:4 5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோவான் 3:5 6 மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். யோவான் 3:6 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 4 அவர் இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 1 பேதுரு 1:4 24 நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகலதேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். எசேக்கியேல் 36:24 25 அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன், நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். எசேக்கியேல் 36:25 26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். எசேக்கியேல் 36:26 27 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். எசேக்கியேல் 36:27
ஹஹஅஹா ஏசு உன்னையும் நேசித்து அன்பாய் அழைக்கிறார். பரலோக வாசல் ஏசுதான். சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் எனக்கு பேசதெரியும் என்ற காரணத்தினால் உளற கூடாது. பல பல கொடிய நோய்கள் மனுஷனை ஆட்கொண்டு..வாய் நாவு களில் கேன்சர் வியாதியாகி மக்கள் தவிப்பது உங்களுக்கு தெரியாதுபோலும். அவர்களையும் ஏசு சுகம் கொடுத்திருக்கிறாரே, மருந்து மாத்திரை கொடுக்கமுடியாத சுகத்தை ஏசு செய்தாரே. உங்க வாயின் வார்த்தையினால் சாபத்தை தேடிக்கொள்ள வேண்டாமே. நன்றி பைபிளை படிக்கவும், உங்கள் நாவு எதைபேசவேண்டும் என்பதை கற்று தந்து வாழ்க்கையே பரிசுத்தமாக்கும். பரலோகத்திற்கும் உங்களை தகுதிப்படுத்தும் நன்றி வணக்கம்.
@YesuRani-vr5gu Жыл бұрын
டேய் அறிவு கெட்டவனே உனக்கு பிடிக்கலைன்னா நீ விலகிப் போ யாரு சாமியையும் யாரும் குறை சொல்ல வேண்டம்
@MrMajorvictor3 жыл бұрын
I am glad I am attending to this Major victor
@RameshBabu-jx7bh3 жыл бұрын
Amen
@PGCS-SHALINIK4 жыл бұрын
Inspiring Words✌
@martinjohn45754 жыл бұрын
Great inspiration
@savedchristian47544 жыл бұрын
உழைப்பு திறமையை காட்ட, உழைப்பு சோறு போடுவதில்லை. பேட்டி கேக்கிறவருக்கும் புத்தியில்லை.
@chandrup16896 жыл бұрын
Neeyummma
@MuhammadOruAli4 жыл бұрын
Ozhachi sapdradhu dan enanu teryadhe ungalku..echaingala