Рет қаралды 11,306
மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, அழகர்கோயில் ஊராட்சி எனப்பெயரிடப்பட்டுள்ளது, இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழேக்கேயுள்ள ஆனைமலை, அழகர்கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன என்பர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், அழகர்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், கீழீரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை எனக் குறிப்பதால், இந்நிலப்பகுதி அக்காலத்தே, கீழீரணியமுட்டநாடு என வழங்கப்பட்ட செய்தியை அறியலாம் #vmsramkumar #vmsrtamiltrip #india #madurai #alagarkovil #thirumalirunjolai #perumal #alagar #kallalagar #thangakuthirai #chithiraithiruvizhalive #chithirai