Рет қаралды 4,495
கண்ணகி காட்டைக் கண்ட காதை - காடு காண் காதை - சோழ நாட்டின் உறையூருக்கும் மதுரை நகருக்கும் இடைப்பட்ட பகுதி காடாக அமைந்துள்ளது. அக்காட்டினை கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் ஆகிய மூவரும் கண்டு மதுரையை அடைகின்றனர் .சோழநாடு கண்ணகிக்கு நாடாக அமைந்தது அதனால் அதனை நாடு காண் காதை என முந்தைய காதையாக இளங்கோவடிகள் கூறினார் .மதுரைக் காண்டத்தில் முதல் காதையே காடுதான் கண்ணகிக்கு அது சுடுகாடாக அமையப்போகின்றது என்பதை குறிப்பால் உணர்த்துகின்றார் இளங்கோவடிகள். சேர நாட்டைச் சார்ந்த மாங்காடு என்ற ஊரினைச் சார்ந்த அந்தணன் திருவரங்கத்தில் திருமால் கிடந்த திருக்கோலத்தையும் வேங்கட மலையில் நின்ற திருக்கலத்தையும் காண வருகிறான் .வருகின்றவன் பாண்டியனின் பெருமையைப் பேசிக் கொண்டு வருகிறான் .அவனிடம் மதுரைக்கு வழி கேட்கின்றனர் அவன் வலப்பக்க வழி, இடப்பக்க வழி , நடுவழி என மூன்று வழிகளை கூறுகின்றான் இடையில் வன தேவதை வசந்த மாலை வடிவில் வந்து கோவலனை மயக்க முயல்கின்றது. சக்தி மந்திரத்தால் அதாவது கொற்றவை மந்திரத்தால் தேவதையின் உண்மை நிலையை உணர்கிறான் கோவலன். பின்னர் காட்டுப்பகுதியில் உள்ள கொற்றவை கோயில் என்று சொல்லப்படுகின்ற ஐயை கோயிலை மூவரும் அடைகின்றனர் .