Рет қаралды 175
Verse 1 :
அன்று காதலியே உன்னைக் கண்டேன்
அழகான பாவாடைத் தாவணியில்.
காலங்கள் தனது பாதச்சுவடுகளை
கணக்கில்லாது வைத்துவிட்டன.
Verse 2 :
அன்று பார்த்தேன் உனது கன்னி வடிவத்தை.
இன்று அது எனக்கு கண்ணி வைத்தது.
பூமணக்கும் உந்தன் கூந்தலில்
தேனீக்கள் கூடுகட்டின.
கொம்புத்தேனை வம்பு செய்யாது
அங்கே சேமித்தன.
உன் கூந்தலில் என் முகம் கூடியது.
அதனால் தேனீக்கள் ஆழமாய் கொட்டின.
பாலாடை போன்ற உனது முகம்
அந்த வலிக்கு ஒத்தடம் கொடுத்தது.
Verse 3 :
பனிமூட்டமாய் மாறிய உந்தன் நாணம்
காதலின் வர்ணத்தை காவியமாக்கியது.
காதல் நன்கொடையை உந்தன்
விழிகள் குடையாக விரித்தன.
தேன்சொற்களை உந்தன் பற்கள்
வானைத் தொடும் கானமுத்துக்கள் எனவே உதிர்த்தன.
பூக்கள் தொடுத்த மாலை போன்று
அதை நான் தொடுத்தேன் காதலின் பாமாலையாக.
Verse 4 :
முக்கனிகள் உந்தன் முகத்தின்
தோட்டத்தில் கனிந்தன.
முப்பொழுதிலும் எந்தன் உள்ளம்
வற்றாத காதல் ஊற்று ஆனது.
எந்தன் காதல் கடிகாரத்தை
உந்தன் விழிகள் காட்டியது.
ஒவ்வொரு மணித்துளியையும்
உந்தன் கண்மணியில் அமுதாய் அருந்தினேன்.
எந்தன் இளமையை தேய்ந்திடாத
ஈடில்லா முழுநிலா எனவே காதல் வானில் உலவவிட்ட மோகினியே.