Рет қаралды 253
காதலை சொன்ன நாக்கு
VERSE :1
[MUSIC]
அவனது நாக்கு
காதலை சொன்னது.
சோர்வின்றி மீனாய்
நீந்தியது.
அவளின் செல்வாக்கு
சுரங்களில் சுரங்கம் தோண்டியது.
கற்பனை மின்னல்களில்
கன்னலின் திருக்கரங்கள் நீண்டன.
[MUSIC]
VERSE 2 :
காதலியே கரும்பின் சாறை
மழையெனப் பொழிந்தாள்.
இடிஇடித்த போது அவனது
மனதில் கொடியாகப் படர்ந்தாள்.
அங்கே நித்தம் பலப் பல வண்ண
மலர்கள் பூத்தாள்.
ஏமாற்று வித்தைகள் அவனை
முதலில் ஏய்த்தன.
உரமாக உள்ளத்தை மாற்றினான்.
தனது கண்ணீரில் காதல் விதைகளை
வளர்த்தான்.
கனிவான அவளின் உள்ளம்
கனிந்தது
[MUSIC]
VERSE 3 :
மலராத அவனது காதல் தோட்டத்து
செடிகள் பூத்துக்குலுங்கின
அங்கே அவனது காதலியே மலர்ந்து
நின்றாள் பச்சைக் கொடி எனவே.
மாறிய காதலி காதலனுக்கு பச்சை
கொடி காட்டிவிட்டாள்.
[MUSIC]