Рет қаралды 101
#மனவளக்கலை #கிருஷ்ணகிரிமாவட்டம் # சேலம் #hosur #hosurjobs #hosurnews
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை! ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்டாட்டத்தை அறிமுகம் செய்தவர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி.
உலக சமுதாய சேவா சங்கம் ஓசூர் மண்டலம்
கிருஷ்ணகிரி மலைவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் இணைந்து இன்று(24.08.2024 சனிக்கிழமை) மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சேலம் ரோடு எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை இறைவணக்கம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராஜம் பாடினார் இதேபோன்று குரு வணக்கம் துணை பேராசிரியர் விஜயலட்சுமி பாடினார்
நிகழ்ச்சியின் துவக்கமாக அக்னி தவம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் டி மகாலிங்கம் நடத்தினார் வரவேற்புரை மற்றும் தலைமை தாங்கினார் சண்முகம்
விழாவில் ஓசூர் மண்டல தலைவர் முன்னிலையாக ராஜு அவர்கள் முன்னிலை வகித்தார்.
மன்றங்களின் செயல்பாடு குற்றம் அறிமுக உரையை கே பாலதண்டாயுதம் பொருளாளர் வழங்கினார்
மாண்புமிக்க மனைவி என்ற தலைப்பில் சேலம் மனவளக்கலை மூத்த பேராசிரியர் விவேகானந்தர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவர் பேசும்போது
உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், நண்பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம், என தனித்தனியே கொண்டாடி மகிழ்கின்றனர். சுமங்கலி பூஜையை கணவன் நலனுக்காக மனைவியரும் வேண்டுகிறார்கள். குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டாமா? ஓவ்வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உலகெங்குமுள்ள மனவளக்கலை அன்பர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் நாளை 'மனைவி நல வேட்பு விழா வாக ' அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கி உள்ளார்கள் .
பெண்மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்போதும் கெட்டதில்லை. பெண்ணினத்தை மதிக்காத தனி மனிதனோ,சமுதாயமோ உயர்வடைந்ததாக சரித்திரம் இல்லை. எந்தச் சமுதாயம் பெண்மையை போற்றி அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறதோ அந்த சமுதாயம்தான் அறிவிலும்,ஆன்மீகத்திலும் சிறப்புற்று விளங்கும்.
மனைவியர் தினமான இந்நன்னாளில்* பெற்றோரை, பிறந்த ஊரை,உறவுகளை பிரிந்து, உங்களுக்கு தொண்டாற்றி, இனிமையாக, இன்பமாக உங்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் அன்புக்கும், பாசத்துக்கும் உரித்துடைய மனைவியை ஒவ்வொரு கணவரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்பினால் அவர்களை நனைத்திடுங்கள்.
இவ்வாறாக அவர் பேசினார் நிகழ்ச்சியின் இறுதியாக தவம் மையத்தின் சுதர்சனம் நன்றியுரை கூறினார் இறுதியாக உலக நல வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி நிறைவே நிறைபெற்றது நிகழ்ச்சிகளை எஸ் விஸ்வ பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை