Рет қаралды 856
Starring: M. G. Ramachandran, Jayalalithaa, Rajasree
Director: K. Shankar
Music: M. S. Viswanathan
Language: Tamil
Year: 1968
Lyrics
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
பெண் : { கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் : நாமறிவோமே
பெண் : நானேதான்
உனக்கு மணவாட்டி
பெண் : உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி
பெண் : என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி
ஆண் : { கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)
ஆண் : உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ
பெண் : உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே
பெண் : இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே
பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி
ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி
ஆண் : அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு
பெண் : வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு
ஆண் & பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ
ஆண் & பெண் : நாமறிவோமே
ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி
ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி
பெண் : நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டி