Рет қаралды 860
தொகுப்பாளர் சாய் ஸ்மிதா ஆனந்த்,
ஓம் சாய் ராம்
இந்தப் பதிவில் பாபாவின் பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான அவரின் துவாரகாமாய் போஸ் படத்தின் விவரங்களை விளக்கத்துடன் தெரிந்து கொள்வோம்.
இந்த விளக்கம் சாய் சமஸ்தானத்தின் இணையதளத்தில் இருந்தும், ஸ்ரீ சத்குரு சாய்நாத் சகுணோபாசனா மற்றும் டாக்டர் வினிச் சிட்லூரி அம்மா எழுதிய புத்தகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை யாகும்.
பாபா அவர் உட்கார்ந்திருக்கும் அந்த வடிவத்தின் மூலமாக பக்தர்களான நமக்கு எதை சொல்கிறார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை நாம் வழங்குகின்றோம்.
பாபாவுடைய இந்த துவாரகாமாய் போஸ் படம் என்பது மிகவும் விசேஷமானது.
இது பாபா முக்கோண வடிவில் உட்கார்ந்திருக்கிறார் ..
அவருடைய தலையில் வில்வ பத்திரம் உள்ளது .
அது அன்னை பார்வதி தேவி வசிக்கும் மேருமலையின் சின்னமாக உள்ளது.
காகட் ஆரத்தியில் முக்கியமான வரிகளில் , “து சாந்தி க்ஷமேச்ச மேரு ஹோ. தூ பவர்ணவிச்சே தாரு குருவரா" அப்படின்னு கொடுக்கப்பட்டிருக்கு .
அதாவது நீங்களே நிம்மதி நிலவும் மேரு மலை!! நீங்களே பிறவி கடலின் தோணி குருவரா !!
அதாவது ஸ்ரீ சாய் பாபா நாம் அனைவருக்கும் ஒரு தாயைப் போன்றவர் என்பதை உணர்த்துகிறது.
அவர் தாயாக இருந்து தன்னுடைய குழந்தைகளை அடைக்கலம் அடையுமாறு அழைக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது.
இந்த படத்தின் மூலமாக பாபா நம்மை அவருடைய தாமரை பாதத்தில் பூரணமாக சரணடையும்படி உணர்த்துகிறார்.
அவருடைய இடது கையில் இருக்கும் ஐந்து விரல்களும் பஞ்ச பிராணாவையும் , அதாவது பிராணா, அப்பானா, சமானா, உதானா மற்றும் வியானாவையும், கர்மாவையும் , அரிஷாத்வர்கா அதாவது நம்மை கட்டுப்படுத்தும் ஆறு எதிரிகளான காமம், குரோதம் , லோபம் , மோகம், மதம் மற்றும் மாச்சரியம் , திருகுணா என்று சொல்லக்கூடிய சத்வ , ராஜச, தாமஸ குணங்களையும், ஞானேந்திரியா என்று சொல்லப்படுகின்ற நம்முடைய ஐந்து புலன்களும் அதாவது கண் ,காது ,தோல், நாக்கு மற்றும் மூக்கு இவை எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உணர்த்துகிறது
பாபாவுடைய வலது கையில் இருக்கும் மூன்று விரல்கள் மனம், புத்தி மற்றும் நம்முடைய புலன்களை குறிக்கிறது. இந்த மூன்று விரல்களும் இந்த படத்தில் தெரிவதில்லை..
பாபாவுடைய வலது கையில் இருக்கும் ஆள்காட்டி விரல் கீழே சுட்டிக்காட்டுகிறது..
நம்முடைய அகங்காரம் மற்றும் ஆணவத்தன்மையை அது குறிக்கிறது..
அதாவது அது என்றைக்குமே கீழே தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு புரிய வைக்கும் விதத்தில் உள்ளது.
கட்டைவிரல் சத்குரு அல்லது பரப்பிரம்மத்தை குறிக்கிறது.. அவரே நம்முடைய சத்குரு என்று அது பாபாவையே சுட்டிக்காட்டுகிறது.
சத்குரு மட்டுமே ஜீவாத்மா உடைய அனைத்து அசுத்தங்களை , தேவையற்ற பண்புகளை பரிசுத்தம் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது..
இதுவே பாபாவின் தாமரை பாதத்தில் பூரணமாக சரணடைதல் ஆகும்..
இதுவே பாபா உறுதியாக வைத்திருக்கும் அவரின் வலது கால் நமக்கு உறுதி அளிப்பது மட்டுமல்லாமல் அவரின் சத்தியத்தையும் உணர்த்துகிறது
அதேபோல நாம் பாபாவிடம் சரணடைந்தோம் என்றால் அவர் மடித்து வைத்திருக்கும் இடது காலில் ஒரு தாயைப் போல நம்மை ஏற்றி செல்ல அவர் தயாராக இருக்கிறார் என்பதை பாபாவின் உட்கார்ந்து இருக்கும் இந்த துவாரகாமாய் போஸ் படம் நமக்கு உணர்த்துகிறது.
பக்தர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்
பாபாவினுடைய ஒவ்வொரு பொருளை பற்றியும் இனிமேல் நம்முடைய சேனலில் பதிவுகள் வழங்கப்படும் என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி
ஜெய் சாய்ராம்
#saibabaaarathi #stavanamanjari #அற்புதங்கள் #சாய்பாபா #சாய்பாபாவின்அற்புதங்கள் #சாய்மந்திரம் #ஸ்தவனமஞ்சரி #saibabasongs #மந்திரம்