தடையுறாப் பிரமன் விண்டு (விஷ்ணு) ருத்திரன் மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசக்தி நவில் பரசிவம் என்னும் இவர்கள் இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே. திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார். குறிப்பு: வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage ) இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும் இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் , கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.மேலும் வள்ளல் பெருமான் நினைத்தாலும் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் ஏனென்றால் இவரும் அருட்ஜோதி தான். இருந்தபோதிலும் வள்ளல் பெருமான் நமக்கு குருவே.