Рет қаралды 10,573
This video gives details of panchamuga anjaneyar temple in gowrivakkam chennai. This temple has more intersting informations, unblievable messages, some miracles , incredible things.
Panchamukha Hanuman
Hanuman(East),Hayagriva(Top),Narasimha(South),Garuda(West),Varaha(North)
இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார். இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார். வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில், ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம். இராம - இராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான். ஹனுமார், இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார். ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.
பஞ்சமுகங்களின் முக்கியத்துவம்
கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.
தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.
மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன், கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.
வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன், அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.
மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது
நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்
கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்
வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.
ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்
அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்
Twitter page: / vijayjayagopal -
Instagram page: www.instagram.... -
facebook page: www.facebook.c... -
G+ plus.google.co...
/ welcome
/ urn:li:activity:648297...