Рет қаралды 7,530
Song : Paathagan En Vinai Theer Ayya
Lyric : John Palmer
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Album : Sthothari
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : The Matins
open.spotify.com/track/6FtCJv...
www.amazon.com/Paathagan-En-V...
wynk.in/music/album/sthothari...
/ sthothari
www.deezer.com/en/track/50978...
ar.napster.com/artist/sastria...
www.iheart.com/artist/sastria...
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
அனுபல்லவி
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. - பாதகன்
சரணங்கள்
1. வந்துறும் எப்பாவிகளையும் - அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? - பாதகன்
2. சிந்தின உன் உதிரம் அதே - தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே - பாதகன்
3. அற்பவிசுவாசமுளன் ஆம் - அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. - பாதகன்
பாடலின் பொருள்
பல்லவி
கிருபை நிறைந்த ஆண்டவரே, உம்முடைய பாடுகள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து, பாவியாகிய என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து உம்மிடம் சேர்த்துக் கொள்வீராக ஐயா.
அனுபல்லவி
பாவங்கள் எல்லாவற்றையும் அகற்றுவதற்காக இனிமையான பரலோகத்தை விட்டு இந்த உலகத்துக்கு வந்த நற்செயல்களின் இருப்பிடமே! இறைவன் இயேசுவே.
சரணங்கள்
1. உம்மிடத்தில் வருகின்ற எத்தகைய பாவியையும் ஏற்றுக் கொள்ளுகின்ற குற்றமற்ற தலைவர் இயேசுவே. உம்மிடம் வந்து நின்று மனம் உருகி அழுதபோது, அந்தப்பெண், முன்பு செய்த பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிட்டாய் அல்லவா?
2. நீர் சிலுவையில் சிந்தின உம் இரத்தம் பொல்லாதவர்களின் வீரத்தை ஒன்றுமில்லை என்று ஆக்குவதற்குரிய வல்லமையைக் கொண்டது. உம் வலது பக்கத்தில் அறையப்பட்ட அந்தக் கள்வனை நட்போடு ஏற்றுக் கொண்டு கிருபைகூர்ந்து மீட்டுப்கொண்ட வேதநாயகனே அவ்வாறே என்னையும் ஏற்றுக்கொள்வீராக.
3. மிகவும் குறைவான நம்பிக்கை கொண்டவன்தான் நான். எனினும், அடியவனான என்னை யார்தான் மீட்க முடியும்? நீரே என் அடைக்கலம், உம்மைப்பார்த்தால்தான் நம்புவேன் என்று சொன்ன தோமாவுக்கு நீர் உம்மைக் காண்பித்தது போல எனக்கும் காட்சி தந்து இறைவா என்னை ஏற்றுக் கொள்வீராக.