Рет қаралды 32
#தமிழர்பாமன் #தமிழ்த்தேசியப்_பேரியக்கம் #தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சாதித்தவை! | தமிழ்த்தேசியத்தின் முன்னோடி அமைப்பு!!
1.சென்னையில் 1990 பிப்ரவரி 25-இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தியது
முதல் பல்வேறு அடக்கு முறைகளுக்கிடையே தமிழ்த் தேசியத்தை தனித்தன்மையும் தற்சார்பும் உள்ள கோட்பாடாக வளர்த்தோம்
2. காவிரி டெல்டா மாவட்டங்களின் உழவர்களைக் காவிரி உரிமை மீட்புக்குழுவில் இணைத்து, கட்சி சார்பின்றி போராட்டங்கள் நடத்தி இன்றுள்ள அளவுக்காவது காவிரி உரிமையைக் காத்தோம்!
3. தெய்வத் தமிழ்ப் பேரவை அமைத்துத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் தொடங்கி பல கோயில் குடமுழுக்குகளில் கோபுரக் கலசத்தில் தமிழ் மந்திரம் ஒலிக்கச் செய்தோம்.
4. தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை ஆகியவற்றில் வடநாட்டார் உள்ளிட்ட வெளிமாநிலத்தார் ஆக்கிரமிப்பைத் தடுக்கப் போராடிவருகிறோம். தொடர் வண்டித் துறை பயிலுநர் பணிக்கு (Act Apprentice) தமிழர்களுக்கு முன்னுரிமை கேட்டுப் போராடி, அதில் வெற்றி பெற்றோம். தென்னகத் தொடர்வண்டி மண்டலத்தில் தேவையான பயிலுநர் பணிகளுக்கு அம் மண்டலத்திலிருந்து மட்டுமே தேர்வு செய்வது என்ற முறை வந்துள்ளது.
5. ஒசூர் அருகே உள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் முழுக்க இந்திக்காரர்களை வேலையில் சேர்ப்பதை எதிர்த்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு தமிழ்நாட்டு இளையோரை மாவட்ட வாரியாக வேலையில் சேர்த்தனர்.
வெளியாரை வெளியேற்ற வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறோம். நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிற்கும் வெளிமாநிலத்தார் நுழைய தமிழ்நாடு அரசின் அனுமதி பெறும் (Inner-line Permit) முறை கோரி வருகிறோம்.
அமைபில் இணைய அழையுங்கள்:
9841949462
9840848594
பதவி பணம் விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளையோரைக் கொண்ட தமிழ்த்தேசியப் பாசறையாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வளர்ந்து வருகிறது.
உங்கள் பொறுப்பு என்ன?
எல்லோரும் மோசம் என்று ஒதுங்காதீர்! ஒதுங்கினால் வரலாற்றில் ஒதுக்குப்படுவீர்கள். என் கடமையைச் செய்வேன் என்று வாருங்கள்! இணைந்து செயல்படுவோம்!