Рет қаралды 2,056,543
பாடல் வரிகள் :
Lyrics : Amalan Jerome
Singer : Hemambiga
தந்தையே சுதனே தூய ஆவியே உம்மையே வேண்டுகிறோம்
இறைவனின் தாயே அன்னை மரியே உம்மை வேண்டுகிறோம்
புதுவைப் புனிதரே அந்தோணியாரே உம்மை வேண்டுகிறோம்
வேண்டுதல் தீர்த்தருள்வீர்
என் தேவைகள் தீர்த்தருள்வீர்( 2)
1). அன்னைக் கன்னிகையில் அடைக்கலமான
புனித அந்தோணியாரே
சிலுவை ஏந்தியே அலகை சூழ்ச்சியைச் சிதறவே
அடித்தவரே
அன்னை மரியிடம் பக்தி கொண்ட பக்தர்கள் ஆக்கிடுவாய்
அலகை சூழ்ச்சியை வெல்லும் சக்தியை
மனமே தந்திடுவாய்
2)பதுவை நகரினிலே மறையுரை செய்த அதே நேரத்திலும்
லிஸ்பென் நகரினிலும்
அற்புத விதமாய்க் காட்சியே தந்தவரே
வாழ்வில் எதிர்வரும் நிந்தனைகளையே ஏற்றிட பலன் தருவாய்
பகைவரை மன்னித்து உம்முடன் வாழ்ந்திடும் முழுமனம் தந்திடுவாய்
3). ஜெபத்திலும் தவமதிலும் ஆன்மாவின் ஈர்ப்பிலும் ஆவல் கொண்டவரே
தூய போதனையால் எண்ணற்ற மனிதரை திசைமாற்றம் செய்தவரே
பாவவழி மறந்து தேவவழி நடக்க
திருவருள் புரிந்திடுவாய்
வாழ்நாள் முழுதும் இறைவனின் சொந்தமாய்
எம்மையே மாற்றிடுவாய்
4).வாழ்நாள் முழுவதுமே ஆன்மாக்கள் ஈடேற அயராது உழைத்தவரே அந்திம வேளையிலே
இயேசுவின் பலியை தரிசித்து
இறந்தவரே
திருநூலை ஆவலாய் வாசித்து அறிந்து
வல்லமை புரியச் செய்வாய்
உயிர்விடும் வேளையிலும்
யேசுமரி துணையைக்
கைவிடா மனம் தருவாய்.
5).உலக மாயைகளை விலக்கி வாழ செல்வங்கள் துறந்தவரே
தூய அகுஸ்துனாரின் சபையில் சேர்ந்து பக்தியில் வளர்ந்தவரே
உலக செல்வங்கள் ஆசை நாட்டங்கள்
பற்றினை அகற்றிடுவாய்
உடலின் இச்சைகள் தீய எண்ணங்கள்
அகன்றிட துணை தருவாய்
6). தூய பிரான்சிஸ்கு சபையில் சேர்ந்த
புனித அந்தோணியாரே
இயேசு கிருஸ்துவுக்காய் தமது இரத்தத்தை
சிந்திட முனைந்தவரே
ஜெபதவங்கள் வாழ்வில் கொள்ள
நீரே உடனிருப்பீர்
மாய உலகிலே தூய வழியிலே
நடந்திட துணை வருவீர்
7). தாழ்ச்சி முயற்சியாலே உலகிலே தன்னை
மறைக்க முயன்டவரே
இறைவனின் தேர்வாலே உந்தன் திறமையை
உலகமே அறிந்ததையா
தாழ்ச்சி பொறுமையை எந்தன் வாழ்விலும் தயவாய் தந்திடுவீர்
மறைந்தே கிடக்கும் எந்தன் திறமை புவியில் உணர்த்திடுவீர்
8). வேதத்தைப் பரப்பிடவே தேவனால் தேர்ந்த
புனித அந்தோணியாரே
அருங்குறி புரிந்திடவே அயல்மொழி பேச இறைவரம் பெற்றவரே இறைவனின் வாக்கை முழுமனதோடு
கேட்டிட செய்திடுவீர்
இறைவாக்கினையே நிறைவாழ்வாக்கிட
துணையாய் இருந்திடுவீர்
9). இறையன்பு மிகுதியினால் குழந்தை இயேசுவைக்
கரங்களில் ஏந்தினீரே
யேசுவைத் தாங்குகின்ற
மிகப்பெரும் பேறினை
அடைந்திடப் பெற்றவரே
திவ்ய உணவதை இதயம் தாங்கும்
தூய்மையைத் தந்திடுவாய்
முழுமனதோடு ஆயத்தத்தோடு
அருந்திட வகைபுரிவாய்
10). திவ்ய நற்கருணையை மிருகங்கள் கூட
வணங்கிடச் செய்தவரே
இயேசுவே நற்கருணையில் உயிராய் இருப்பதை
நிரூபித்துக் காட்டினீரே
நற்கருணையதில் உறைந்தே உள்ள இயேசுவை விசுவசிப்போம்
எல்லாக் காலமும் ஆராதனையுடன்
வணங்கிட முன் வருவோம்
11). பதிதரும் பாவியரும் உம் உரை கேளாது
திசைமாறிப் போனதாலே
ஆழ்கடல் மீன்களுமே உம் அழைப்பினை ஏற்று
உரை கேட்கச் செய்தவரே
இறைவார்த்தை தனையே நிஜமதில் ஏற்கும் ஆவலைத் தந்திடுவாய்
இறைவனின் வாக்கிற்குக் கீழ்ப்படிந்திடும்
மக்களாய் மாற்றிடுவாய்
12). உம்மீது பக்தி கொண்ட பக்தரின் காவலே
புனித அந்தோணியாரே
ஆபத்து அவதிகள் மரணம் முதலாய் காத்திடும்
புனித அந்தோணியாரே
உடல் உள்ளம் ஆன்மா அனைத்தும் காத்து
நிறைவரம் தந்திடுவாய்
தீமைகள் ஒழித்து சோதனை அழித்து புவிதனில் காத்திடுவாய்
13). திக்கற்ற பெண்களின் துயரினைத் துடைத்து
நற்கதி தந்தவரே
மாசில்லா மாந்தரின் காவலாய் இருந்திடும்
பதுவை அந்தோணியாரே
உலகிலே எமது துன்பங்கள் துடைத்து
மகிழ்வினைத் தந்திடுவாய்
பாவமில்லாது ஆன்மா வளர்ந்திட
காவலாய் இருந்திடுவாய்.
Music : Saravanaganesh
@Derick Studios
Madurai.
Best video in Christian Media
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Contact
9994445570
Pls Subscribe, Like and Share