Рет қаралды 2,121
#Partnership ”சரியான முடிவு எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவெடுத்த பின்னர் அவற்றை சரியாக செய்கிறேன்” என்ற பொன்மொழியை கூறியவர் ரத்தன் டாடா. இந்த வாக்கியத்தன் படி அவர் வாழ்ந்தும் காட்டினார்.
இந்திய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய இந்த தொழிலதிபரின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 3,800 கோடி ரூபாய். பணக்காரர்... ஆனாலும் நடுத்தர மக்களின் பல கனவுகளை நனவாக்கியவரும் இவர்தான்.
உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால், அதை வைத்து இரு கட்டடத்தை எழுப்புங்கள் என்பது ரத்தன் டாடாவின் வார்த்தைகள் மட்டுமல்ல. வாழ்க்கையின் பல்வேறு சவால்களை எதிர்க்கொள்ளும் வித்தையை மிக எளிதாக சொல்லிவிட்டார். இந்த வார்த்தைகளே அவரது வாழ்க்கையையும் சொல்லிவிடும்.
1937 டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தவர். (born in silver spoon) பார்ன் இன் சில்வர் ஸ்பூன். அமெரிக்காவின் கார்னல் பல்கலைகழகத்தில் ஆர்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரக்சுரல் (architecture and structural engineering) இன்ஜினியரிங் படித்தவர்.
1955 - 1962 வரை அமெரிக்காவில் தங்கிருந்த போது தொழில்துறை வளர்ச்சியை பற்றி கற்றுக்கொண்டார்.
அங்கேயே செட்டில் ஆகிடலாம் என்ற முடிவுக்கும் வந்தார். அப்போது தான் இந்தியாவில் இருந்து ஒரு சோகச்செய்தி அவருக்கு வந்தது.
பாட்டி நவ்ஜ்பாய் டாடாவின் மறைவு. அம்மா அப்பாவாக இருந்து தன்னை வளர்த்தவரின் பிரிவு ரத்தன் டாடாவை உலுக்கியது.
டாடா 10 வயது இருக்கும் போதே, பெற்றோர் விவாகரத்துக்கு பெற்றனர். பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார். அவர் மறைவுக்கு பிறகு இந்தியா திரும்பினார். அதன் பின் தான் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் காத்திருந்தது.
அந்த நேரத்தில் அவருக்கு ஐபிஎம் நிறுவனத்தில் இருந்து வேலை ஆபரும் வந்தது.#RatanTata #lastwords #Dinamalar