எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் (2) 1.இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா 2.அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே (2) - ஐயா 3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா 4.என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானய்யா (2) - ஐயா 5.வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா