நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@nagarajannagarajan79462 жыл бұрын
ஐயா 🙏கடல் போல பிரச்சனைகள் உள்ள இந்த சிவில் வழக்கு விஷயத்தை மிகவும் தெளிவாக கேள்வி பதில் நிகழ்ச்சிவாயிலாக எந்த ஒரு விபரம் தெரியாத மக்களுக்கு உங்களது சேவை இந்த காலகட்டத்தில் நாட்டிற்கு தேவை, கண்டிப்பாக உங்களது பதிவின்படி வளர்ச்சிக்கு உதவ முன் நிற்பது எனது கடமை ஆகும் நன்றி 🙏
@selvampalanisamy2 жыл бұрын
@@nagarajannagarajan7946 மகிழ்ச்சி
@nagarajannagarajan79462 жыл бұрын
@@selvampalanisamyஐயா 🙏நேற்று ரூ 200 நன்கொடை செய்த மெசேஜ் வரவில்லை, உங்கள் கணக்கில் வரவு வந்து உள்ளதா என்பதை தெரிவிகவும் நன்றி 🙏
@selvampalanisamy2 жыл бұрын
@@nagarajannagarajan7946 வரவில்லை
@nagarajannagarajan79462 жыл бұрын
ஐயா 🙏 உங்கள் thanks செயலி வழியாக நன்கொடை செலுத்த முயற்சிதும் முடியவில்லை, வேறு வழி சொல்லுக, அனுப்புகிறேன் நன்றி 🙏
@nagarajannagarajan79462 жыл бұрын
ஐயா நான் இது வரை பார்த்த கேட்ட பதிவுகளில் இதுபோல் ஒரு அருமையான பதிவுவாக பார்க்கிறேன், அருமை 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selvampalanisamy2 жыл бұрын
மகிழ்ச்சி
@rajasekaranrajendran2942 жыл бұрын
ஐயா, வணக்கம், தங்களது வீடியோகல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன. நன்றி
Sir unga channel very clarity....thanks for info sir
@selvampalanisamy2 жыл бұрын
மகிழ்ச்சி
@rajamoulimouli9333 Жыл бұрын
ஐயா இந்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எனக்கு நன்றாக புரிந்தது
@selvampalanisamy Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@nithi_nithilan3 ай бұрын
எங்கள் குடும்பத்தில், பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சினை, சொத்து எங்கள் தகப்பனாரல் எங்களுக்கு காண செட்டில்மன்டு செய்யப்பட்டது, எங்கள் அண்ணன் காலமாகிவிட்டார், அவரின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சினை இருப்பதால், அவர்கள் பாக் பிரிவினைக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை, இப்போது நாங்கள் எங்கள் பாகங்களை எப்படி பாகப்பிரிவினை செய்துகொள்ள முடியும்
@rameshneshan3810 Жыл бұрын
நீங்கள் சொல்லும் அத்தனை செயலும் எனக்கும் சேர்ந்துள்ளது எங்களுக்கும் நேர்ந்துள்ளது
@suriyanarayananb70782 жыл бұрын
Sir, my father's house document is missed by the collectorate and they gave a letter for missing, and we got a copy of the document from the register office. my father is no More now, legalizers of my father's can divide the assets, by the copy of the document or original document is must need for the registration. Please reply.
@Rajtamizhan10 ай бұрын
6:04 இது மாதிரி சட்டத்தில் சொல்லியிருந்தால் பிரிவுகள் அல்லது நீதிமன்ற தீர்புகள் குறிப்பிடவும். நீங்க சொன்ன மாதிரி பிரித்தால் முன் பக்கம் கடைசி வாரிசுக்கு போகும். முன் பாகத்தில் ஒரு வீடு இருக்கும் பின்னாடி ஒரு 100 அடி நீளத்துக்கு காலி இடம் இருந்தால். கடைசி வாரிசுக்கு மட்டும் வீடு மற்றும் பிரதான வழி கிடைக்கும் அதன் மதிப்பு அதிகம். மீதம் உள்ள மூத்த வாரிசுகள் சந்து வழியாக சென்று தான் தங்கள் பாகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதன் மதிப்பு குறைவு. இது எப்படி சரி சமமான பங்காக இருக்கும். ஆனால் மற்ற பதில்கள் அருமை. நன்றி
@selvampalanisamy10 ай бұрын
நான் சொன்னது சட்டப்படி அல்ல. அது போன்ற வழக்கம் இருந்துள்ளது.
@Rajtamizhan10 ай бұрын
@@selvampalanisamyஎங்களிடம் சொத்து அவணம், வாரிசு மற்றும் தந்தை இறப்பு சான்றிழ்கள் எதுவும் கிடையாது. இவை எல்லாம் 1 மகனிடம் உள்ளது.இவையெல்லாம் இல்லாமல் பாக பிரிவினை வழக்கு தொடர முடியுமா என் சொன்னால் கூட உதவியாக இருக்கும். எங்க அப்பா உயிருடன் இருக்கும் போதே தன் மறைவுக்கு பிறகு மகன்கள் சரி சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என settlement பத்திரம் செய்து விட்டார் ஊரிலும் இது போல தான் பிரிக்கும் வழக்கம் இருக்கு என்று சொல்றாங்க. ஆனால் இப்படி பிரித்தால் எங்க பாகம் கடைசியில் இருப்பதால் மிகவும் குறைவான பணம் தான் கிடைக்கும். அதனால் பாக பிரிவினைக் வழக்கு போடலாமா அல்லது வேறு வழிகளில் சுமுகமாக பிரித்து கொள்ளும் முறைகள் என்ன என்பது குறித்து உங்களிடம் ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்தி ஆலோசனை பெரும் வசதி ஏதேனும் உள்ளதா சார். .
@uthrajose78982 жыл бұрын
Sir naanga 2021 la land vaangunom..but 2009 la register pannavanga varisu certificate ellama register pannirukaanga.. Idhanala problem varuma?
@angelantony1299 Жыл бұрын
Sir thanks for your message even I got confused. My father married my mom after death first wife 1stwife has 1son 1doughter 2nd wife has 2son 4doughter How to divide the property sir. Could you advise me.
@muthukrishnant6577 Жыл бұрын
ஐயா, எங்களுடையா நிலத்திற்கு பட்டா உள்ளது ஆனால் pathirathil settlement kiraiyam panna villai (pakapirivinai seiyya villai) ippoluthu naan antha land use பண்ண முடியும ethir manuthaarar பிரச்சனை பண்ணுகிறார் enna pannuvathu
@rajadurairajakumar37322 жыл бұрын
தெற்கு நோக்கிய மனை. இதில் அகலம் சுமார் 50அடி நீளம் 200அடி. இதில் முன்று நபருக்கு பங்கு எப்படி பிரிப்பது. இதில் அனைவருக்கும் மனை தேவை
@selvampalanisamy2 жыл бұрын
நீதிமன்றம் முடிவு செய்யும்
@senthilsubramanian2802 Жыл бұрын
Sir enoda family la 3 children's. Father drinker na la family partition 2childrens porantha apaye divide panitanga. But partition panni 4 years apram porantha child ku property la rights iruka?
@srinivasanib344811 ай бұрын
Amount of share of the property to other legalheirs- Market value or guideline value?
@NaanUngalSilambarasan2 жыл бұрын
Hi anna, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலத்தை என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் என் சித்தப்பா😢😢? அவர்கள் காவல் ஆய்வாளர்க்கு காசு குடுத்து போலீஸ் காரர்களும் அவர் அனுபவம் என்கிறார்கள் 2 ஆண்டு முன்பு என் நிலத்தை பயன்படுத்தி விட்டால் அவர்கள் அனுபவமா இப்போ என்ன செய்வது. ?
@selvampalanisamy2 жыл бұрын
பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். சரிவரவில்லை என்றால் கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும்
@muruganessaki18732 жыл бұрын
SIR PARTION DOCUMENT LA PIRATHI KU PAYMENT KATTIYACHU ANA PIRATHIKALIN ENNIKAI SELECT PANNAL SO TN REGINET OPTION LA VERA ETHAVATHU OPTIONS IRUKA
@NAVEENSELVAMA2 ай бұрын
Partition deed pani registration lam mudincha piragu... Antha bhaaga pirivinai equal ahh pirikalanu case poda mudiyuma
@rohe84132 жыл бұрын
Sir pls reply. Still soththu pathiram 50 cent nilam Grandpaa name la irukku but patta illa. Grandpaa passed. 4 legal heirs all r Gents. All r partitioned the land and built house when Grandpaa was alive without Baagapirivinai.After Grandpaa death ivanga serndhu ivanga 4 members name la koottu patta pottaachu. Ippo indha 4 members melayum paththiram register pannalaam nu solraanga. Ippo idha Baagaprivinai paththiram panna mudiumaa bcz Grandpaa passed or Dhana settlement paththiram panna mudiumaa
@selvampalanisamy2 жыл бұрын
தமிழில் கேளுங்கள்
@sastigalechumi81 Жыл бұрын
ஐயா, எங்க வீட்லா இரண்டு ஆண்பிள்ளைகள்... நான் மூத்தவன். கிராமத்துல என்னுடய சம்பாத்தியத்தில் ஒரு வீடு போட்டு இருக்கேன்.. சென்னை ல என் அப்பா என்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு ஒரு சிறு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இருக்கு... என்னால சம்பாதித்தில் தான் என் குடும்ப வளர்த்துச்சு... ஆனா இப்போ.. நான் உடம்பு முடியாம இருக்கேன்.. அம்மா, அப்பா, தம்பி எல்லாம் என்னை ஏமாற்றுராங்க..... நான் சம்பாதித்து போட்ட property எனக்கே கிடையாது னு சொல்லுராங்க...
@selvampalanisamy Жыл бұрын
ஆதாரம் இருந்தால், அவர்களால் அப்படி சொல்ல முடியாது
@maragathavalli-kv6bj Жыл бұрын
ஐயா, நாங்கள் 6 சகோதரர்கள் ஒரு சகோதரர் ஊனமுற்றவர், திருமணம் ஆகவில்லை. அவரும் இறந்துவிட்டார், எங்களுக்கு தனிப்பட்ட பட்டா உள்ளது, ஆனால் சில பட்டா வெவ்வேறு அளவீடுகள். எப்படி சரிசெய்வது. ஒரு சகோதரர் வீட்டு சர்வேயை ஏற்கவில்லை, 3 சகோதரர்கள் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்வதை எதிர்க்கின்றனர். அடுத்து என்ன செய்வது.
@selvampalanisamy Жыл бұрын
நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்
@chithranca47782 жыл бұрын
Sir idhu ennoda grandfather property andha property ya en peyarukku mattum ezuthivachitaru idhanala ennoda sister edhavathu problem panna rights irukka
@muhammedhussain6844 Жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤️👍👌❤️👍👌🤝💐🎉🎊
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@x_xeshx_x3 ай бұрын
எங்கள் வீடு கட்டபோகிறோம் என் அப்பாவிற்கு முதல் உரிமையா இல்ல என் அப்பாவின் அக்காவிற்கு முதல் உரிமையா?
@pashanmuk2 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களது பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தற்பொழுது எனக்கு உள்ள பிரச்னை என்ன வென்றால், ஆண் வாரிசு மூன்று பேர் பெண் வாரிசு மூன்று பேர் ஆகமொத்தம் ஆறு நபர்கள், ஆண் வாரிசுகள் முறையே ஆளுக்கு 94சென்ட் என வாரிசு தாரரர்களின் தகப்பனார் வாய்வழியாக பிரித்து கொடுத்தார் ஆண்டு 1994, அந்த ஆண்டே தகப்பனார் இறந்தும் விட்டார், முதல் இரண்டு வாரிசு இருவரும் வேற சர்வே நம்பர் கொண்ட சொத்தை விற்று விட்டனர்., மூன்றாம் ஆண் வாரிக்கு தனி சர்வே நம்பர், அதற்க்கு கையப்பமிட அழைத்தால் இருக்கும் சொத்தில் பாகப்பிரிவினையாக பங்கு கேட்டு வருகின்றனர், நான்தான் கடைக்குட்டி வாரிசு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை,.தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன் தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என நம்புகிறேன்,...
@selvampalanisamy2 жыл бұрын
வழக்கறிஞரை அணுகி பலன் பெறுங்கள்
@raviiravii8906 Жыл бұрын
4 per Baga pirivil oruvaruku sothum matra 3 per kum amount aa kudukura mari pathivu panna mudiuma?
@vijis80872 жыл бұрын
Pagaprivinai case eviction suit ku matha முடியுமா
@karthielavarasan47477 ай бұрын
Sir property adamanathula iruku..... Varisu tharargal oruthar kitta thara virupam illa..... Adamanam vangiya person antha varisu tharagal kulla iruka orutharku adamana medovar vanga mudiyuma sir
@NaalaiNamNaadu2 ай бұрын
பாகப்பிரிவினை இரண்டு பத்திரமாக பதிவு செய்ய முடியுமா?
@mssheshathri19774 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@selvampalanisamy4 ай бұрын
மகிழ்ச்சி
@cajayachander2 жыл бұрын
ஐயா,மாமுல் பொது வழித்தட பாத்தியம் என்று ஆவணங்களில் இருந்தாள் அந்த மாமுல் போது வழித்தடத்தை எப்படி கண்டறிவது? பிற்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வராமல் இருக்க அந்த தடத்தை மட்டும் கண்டறிந்து ஒரு ஆவணத்தை உருவாக்க முடியுமா? அந்த தடத்திற்கு அனைத்து பங்குதாரர்கள் ஒப்புகை வேண்டுமா?
@selvampalanisamy2 жыл бұрын
நில அளவைத்துறை அலுவலத்தில் உள்ள பழைய ஆவணங்களில் இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள்.
@annamalaidharmapuri8665 Жыл бұрын
Enadhu appa irandhu vittar, 7 members varisu, adhil en oru annan mattum pagapirivinai seiya vara marukkirar karanam avar konjam nilathai en matroru annanukku 2011 appo vitruvittar anal adhai en annan pathiram seiyavillai, adhanal ippoludhu en annan andha nilam venum endru Adam pidikkirar, panam kettal thara marukkirar avarai vittutu avar vitradhu poga meedhi nilathai vittutu matravar pathiram seidhal selluma, please reply pannunga sir please
ஐயா பத்திரம் எனது பெயரிலும், சகோதரர்(மூத்தவர்)பெயரிலும் உள்ளது.18*18 மனையின் அளவு.Ground floor & first floor building உள்ளது.Partition deed பண்ணிணால் எப்படி பிரிப்பார்கள்.Main street east west direction. 3 அடி சந்து South north direction. எந் த Direction l Partition deed ண்ணுவாங்க....9*18,9*18 East west a or south north direction la partition deeDபண்ணுவாங்களா
@selvampalanisamy Жыл бұрын
பொதுவாக இது போன்ற சொத்துக்களை பிரிக்கும்போது சில சிக்கல்கள் வரலாம். உங்கள் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போனால் நல்லது.
@ganeshkumararumugam7773 Жыл бұрын
I m ready to deal anyone ( me or him) settled as per market rate. He told doesnt has money . He doesn't want to settle me also thats y i m asking ur opinion i have idea to go legally so court how is divide this land(building)main street(east to west) or sandhu (north south).
@ganeshkumararumugam7773 Жыл бұрын
What kind of issue will come can u tell me pls
@Rajtamizhan10 ай бұрын
@@ganeshkumararumugam7773 எங்களுக்கும் இதே மாதிரி பிரட்சனை தான். பேசாமல் வீட்டை 3 நபரிடம் விற்று வரும் பணத்தில் 1/2 போட்ட கொள்ளலாம் இல்லை என்றால் வழக்கு.
@hajimohamed78902 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@selvampalanisamy2 жыл бұрын
மகிழ்ச்சி
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
@@selvampalanisamy sir fmly l lamd property pro doubt clear panuvinkala sir
@selvampalanisamy Жыл бұрын
@@geethahariniboomigeetha4904 சொல்கிறேன். தமிழில் கேளுங்கள்
@francisxavier650910 ай бұрын
சார் வணக்கம் என்னுடைய தந்தை 2018 இறந்து விட்டார் .சொத்துக்கள் கூட்டு பட்டா வில் உள்ளது .நானும் என்னுடைய அம்மா , அக்கா,வாரிசு தாரர்.சித்தப்பாவும் உள்ளார், பத்திரம் எழுத சென்றால் பகாபிரிவினை பண்ண முடியாது .கிரையபதிரம் தன் எழுத முடியும் சொல்றார் ரெஜிஸ்டர் .
@selvampalanisamy10 ай бұрын
தவறாக சொல்கிறார்
@swamynathan9365 ай бұрын
ஐயா,வணக்கம். தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது தந்தையின் சொத்தில் பாகப்பிரிவினை செய்து அதில் உள்ள வரிவிதிப்பு எண்ணில் தென்புறம் பாகம் ஒருவருக்கும் அதே வரிவிதிப்பு எண்ணில் வடபுறம் பாகம் மற்றொரு குடும்ப உறுப்பினரருக்கும் இருந்தால் சொத்துவரி விதிப்பில் யார் பெயரில் சட்டப் படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
@selvampalanisamy5 ай бұрын
இருவரும் இணைந்து விண்ணப்பியுங்கள்
@velusamy19004 ай бұрын
Velu. DUBAI. Very super. Video. Sar. And. PERAMBALUR. D.k
@mishalmobile67082 жыл бұрын
ஐயா வணக்கம் 1)பாகப்பிரிவினை செய்யும்போது அனைத்து வாரிசுதாரர்களும் கையெழுத்திட வேண்டுமா 2) பாகப்பிரிவினையின் போது ஒரு மட்டும் சம்மதிக்கவில்லை என்றால் எப்படி பிரச்சனை இல்லாமல் பாகப்பிரிவினை செய்வது
@selvampalanisamy2 жыл бұрын
நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை
@garudacollections416 Жыл бұрын
வணக்கம் அய்யா. எனது அப்பாவிற்கு நீதிமன்ற உத்தரவு படி 2005 ஆம் ஆண்டு பாகப்பிரிவினை நடந்தது. எங்கள் வீட்டு பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது. எனது அப்பா எனது பெயரில் செட்டில்மென்ட் செய்துள்ளார்கள். நீதிமன்ற உத்தரவை இதுவரை ரிஜிஸ்டர் செய்யவில்லை. இதனால் ஏதாவது பிரட்சைனை வருமா.
@selvampalanisamy Жыл бұрын
செய்தால் நல்லது. இப்போதுகூட செய்யலாம்.
@Vinothkumar-lo7xb Жыл бұрын
ஐயா, 1961 ஆம் அண்டு என்னுடைய தாத்தா மற்றும் தாத்தாவின் சகோத்தார் இருவரும் சேர்ந்து பாகப்ரிவினை செய்கிறனார். அதில் 3.56 சென்ட் விஸ்திரம் கொண்ட பூமியில் இதில் சரிபாதி தென்புறம் 1.78 சென்ட் பூமி என்னுடைய தாத்தாவிற்கும், இதில் சரிபாதி வடபுரம் 1.78 சென்ட் பூமி தாத்தா வின் சகோதற்கும் பாகப்ரிவினை செய்கிறனார். இதில் என்னுடைய தாத்தாவிற்கு பாத்தியா பட்டா 1.78 சென்ட் பூமியில் இதில் 0.03 சென்ட் பூமியை தாத்தாவின் சகோத்தார் தென்னை மரம் நட்டு சாகுபடி செய்துள்ளார். இந்த 0.03 சென்ட் பூமி எங்குளுக்கு பாத்திய பட்டா பூமி என்று தெரிய வந்துள்ளது. 2021 ஆண்டு தாத்தாவின் சகோத்தார் வாரிசுகள் இந்த 0.03 சென்ட் பூமியை என்னுடைய கையெழுத்து இல்லாமல் கிரியம் செய்துள்ளனர். கேட்ட நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்று சொல்லறாங்கள்...இது செல்லுமா, இல்லா மோசடி ஆவணம் ரத்து செய்யமுடியுமா.
@selvampalanisamy Жыл бұрын
மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்யுங்கள்
@selvarasur2131 Жыл бұрын
தாத்தாவின் உயில் மூலம் பெற்ற கிராமநத்தம் மனையை தாத்தா பெயரில் இருந்த பட்டாவையும் முறைப்படி தாசில்தார் மூலம் மூன்று சகோதரர்கள் பெயருக்கும் பட்டா மாற்றம் செய்து கொண்டோம் .அதன் பின்னர் சர்வே எண் சப்டிவிஷன் செய்து மூன்று பேரும் தனித்தனி பட்டா வாங்க மூன்று பேரில் ஒருவர் ஒத்துழைப்பு இல்லை என்ன செய்யலாம் .
@selvampalanisamy Жыл бұрын
அவரது ஒத்துழைப்பு தேவை இல்லை.
@user-wr9ei9bd7m5 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதில்கள் என்னை சிலிர்க்க வைக்கிறது ஐயா எனது குடும்பத்தில் சொத்து பாகப்பிரிவினை வழக்கில் உள்ளது இதில் ஆறு பேர் வழக்கு உள்ளது இதில் எனக்கு எனது அக்காள் இருவரின் சொத்தை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அவர்களும் பங்கை பெறுவது எப்படி
@selvampalanisamy5 ай бұрын
வழக்கு முடிய வேண்டும்
@blacklub4602Ай бұрын
அண்ணன் தம்பிக்கு இடையில் பாகப்பிரிவினை பிரச்சனை வந்து கேஸ் கொடுத்தால் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை எத்தனை மாதங்கள் முதல் எத்தனை வருடங்கள் வரை அந்த கேஸ் எடுத்துக் கொள்ளும்
@vengateshwaran99882 жыл бұрын
Sir kootu patta ulla veedu thanipatta vaga oruvar othukka matrar eppadi thani patta peruvathu?
@selvampalanisamy2 жыл бұрын
தனிப்பட்டா வேண்டி விண்ணப்பிக்கும் போது வருவாய்த்துறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு அனுப்பி விசாரனை செய்வார்கள். அதற்கு அவர்கள் வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டியாக முடிவு செய்து தனிப்பட்டா வழங்குவார்கள்.
@940suresh4 Жыл бұрын
pagapirivanai seitha pothu Petra maganaiym manaiviyaum paga pirivinail maraithu piritha pagam selu padi aguma
@diamondcreationvlogs Жыл бұрын
👍
@lingavaal81692 жыл бұрын
பட்டாவிற்கு முன்பு சாலையோர புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி ஒரு காணொளி விண்ணப்பத்தை பதிவிடுங்கள் ஐயா
@selvampalanisamy2 жыл бұрын
ஓகே
@palaniraja4054 Жыл бұрын
ஐயா 2010ல எனது தம்பியும் நானும் குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்து கொண்டோம் அந்த சொத்தில் எனது தம்பி பெயரில் எங்க அம்மா எழுதி வச்ச சொத்தை ஒரு ஏக்கரை அவர் பாகத்தில் காட்டாமல் ஏமாற்றிவிட்டார் அது தற்பொழுது தான் எங்களுக்கு தெரியும் பாராட்டணியில் கட்டுப்படாமல் சில சொத்து நின்று போய்விட்டால் அந்த பாக அட்டவனை செல்லுமா செல்லாதா எனக்கு ரிப்ளை கொடுக்கவும் ஐயா
@selvampalanisamy Жыл бұрын
பாகப்பிரிவினை செய்யும் போது, அதில், தனிப்பட்ட முறையில் அம்மா தனக்கு எழுதி வைத்த சொத்தை உங்கள் தம்பி காட்டாதது தவறு இல்லை.
@manjuladevi8372 Жыл бұрын
En ammavin appa udaiya poorviga sothai en ammavin than gai mattum eluthi vaangittar. Idu selluma
@DEVAdeva-ix5oy2 жыл бұрын
ஐயா, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 11(f)ன்படி மூன்றாம் நபரின் தகவல் வழங்க இயலாது என்று பொது தகவல் கூறுகிறார். நான் கேட்ட தகவல். விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் மீது மாநகராட்சியின் நடவடிக்கை என்ன என்ற தகவலை கேட்டிருந்தேன்.
@selvampalanisamy11 ай бұрын
அவர் தகவல் வழங்க மறுத்தது தவறு. மேல்முறையீடு செய்யுங்கள்.
@dinakarandina20142 жыл бұрын
Bag am prika advocate fees yovalau agam
@prasadnatchiappan27332 жыл бұрын
ஐயா ஒரு பட்டாவில் பல சர்வே எண்கள் உள்ளன அதில் சில எண்கள் உள்ள சொத்தை மட்டும் பாகம் பிரிக்க வேண்டும், மற்ற சர்வே எண் சொத்தை அவரவர் தனித்தனியே எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த நிலையில் அந்த பாகம் பிரிக்க வேண்டிய சொத்தை மட்டும் பாகப்பிரிவினை பத்திரம் மூலமாகவும் மற்ற சொத்தினை பாக விடுதலை பத்திரம் மூலமாகவும் தனித்தனியே பதிந்து கொள் முடியுமா, உங்கள் ஆலோசனை எதிர்பார்த்து காத்திருக்கிரேன்🙏
@PushparajSA13 күн бұрын
அய்யா எனது தாத்தா வுக்கு மூன்று ஆண்கள் 2 வது 3 வது நபர்கள் அவங்க அவங்க பாகத்தை பதிவு செய்து விட்டனர்,1 வது நபர் 2,3, வது நபர்கள் சொத்தை சேர்த்து பதிவு செய்து விட்டார் இதை ரத்து செய்ய வேண்டும் எங்கே செல்வது, இதற்கு என்ன ஆவணங்கள் தேவை உள்ளது என்று தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@chinnathambi8906 Жыл бұрын
ஐயா ,எனது தந்தையும்,அவருடைய அண்ணனும்,1982ல் 2.75 ஏக்கர் நிலத்தை கூட்டு பத்திரம் மூலமாக வாங்கி அனுபவித்து வரும்பொழுது 1991 ல் எனது பெரியப்பா மட்டும் பாகபிரிவினை செய்யாமல் ரோட்டிற்கு அருகாமையிலே 1.28 ஏக்கர் நான்கு புறம் எல்லை போட்டு விற்றுவிட்டார் எங்களுக்கு பாதை ஏதும் விடாமல் தற்பொழுது என்ன செய்வது உடனடியாக கூறவும்
@selvampalanisamy Жыл бұрын
பாகப்பிரிவினை செய்யாமல் விற்பனை செய்தது செல்லாது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்
@karambakudi Жыл бұрын
ஐயா. எங்கள் தந்தை 2007ல் இறந்து விட்டார். என் கூட பிறந்தவர்கள் 3பேர் 2மூத்த சகோதரி 1மூத்த சகோதர். 2008ல் நானும் என் சகோதரும் பாக பிரிவினை செய்து கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்துள்ளது அவர் அதில் அதிக மதிப்பு கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் அவர் பாகத்தில் எழுதி கொண்டார் என்று தெரியவந்துள்ளது இப்போது நான் என் பங்குகளை பெற நீதிமன்றம் செல்லாம இதில் என் சகோதரிகள் கையெழுத்து இடவில்லை
@senthilkumaaran8951 Жыл бұрын
சகோதரிகள் கையெழுத்து இல்லாததால் இந்த பாகப்பிரிவினை செல்லாது
@karambakudi Жыл бұрын
Nantri..
@venkataramang8608Ай бұрын
வணக்கம் ஐயா. திருமணம் ஆன ஒருவர் அகால மரணம் அடைந்துவிட்டார்.மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இறந்தவர் பேரில் உள்ள சொத்துkku அவரின் அப்பா அம்மா இருவருக்கும் vaarisu உரிமை உள்ளதா? ஆம் என்றால் எவ்வளவு சதவீதம்?
@c.lakshmili9026 Жыл бұрын
சட்டம் பணம் உள்ளவர்களுக்கு, frame சட்டம் ஏழைகளுக்கு.
@Jayavenkat Жыл бұрын
Sir, Online consultation irrukka ? Phone no please
@sathisharumugam9304 Жыл бұрын
சார், என் அப்பா இறந்துவிட்டார், என் தாத்தா மற்றும் பாட்டியும் இறந்துவிட்டனர். என் தாத்தாவிற்கு மொத்தம் 5 மகன்கள். எனக்கு சேரவேண்டிய பங்கை பிரித்துத்தர சம்மதிக்க மாட்டுகிறர்கள். நீதிமன்றம் சென்றால், கோர்ட் பீஸ் என்னால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் எனது பங்கை பேர என்ன செய்யவேண்டும்?
@selvampalanisamy Жыл бұрын
முதலில் அவர்களிடம் நேரடியாக அல்லது நண்பர்கள் , உறவினர்கள் மூலமாக பேசி பாருங்கள்
@yuvaraj1372 жыл бұрын
ஐயா, எனது தாத்தாவிற்கு 5 மகன்கள், 3 மகள்கள். அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு 5 மகன்களுக்கு பாகப்பிரிவினை கூர் சீட்டு மூலம் நிலத்தை பாகம் பிரித்து கொடுத்தார். ஆனால் அதை அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இப்பொழுது அதை முறையாக பாகப்பிரிவினை மற்றும் பட்டா வாங்க நினைக்கிறோம். ஆனால் கூர் சீட்டில் ஒருவருக்கு 26 சென்ட் நிலம் அதிகமாக எழுதி உள்ளதால் மற்ற நான்கு பேரும் அதையும் 5 ஆக பிரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர் கூர் சீட்டில் அது எனக்கு எழுதி உள்ளதால் அது எனக்கு மட்டும் சொந்தம் என்கிறார். இப்பொழுது என்ன செய்வது, கூர் சீட்டில் உள்ளது போல தான் பிரிக்க முடியுமா அல்லது முதலில் இருந்து சம பங்காக பிரிக்களாமா ? சட்டபடி சென்றால் தீர்ப்பு எப்படி வரும் ?
@praveenela47252 жыл бұрын
Hi sir Enaku konja dovut iruku enga appa ku 2 wife irukanga enoda amma first wife so suthu pirichu kodunga keta thara matranga so enna panalam… appa ipo second wife kodathan support panie pesitu irukanga
@selvampalanisamy2 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட சொத்து உங்கள் அப்பா பெயரில் இருந்தால் அதை அவர் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை
@pksunilkumarsavitha369Ай бұрын
காலமான என் தாத்தாவின் சொத்தில் உரிமையாளர்கள் ஐந்து பிலைகல .. இதை விற்கும் பட்சத்தில் ஒருவர் மட்டும் சம்மதிக்கவில்லை.. பக்ஷத்தில் எப்படி விற்பனை... செயவதூ
@vaikundarajraj57202 жыл бұрын
வணக்கம் ஐயா.. எங்கள் ஊரில் ஐந்து சகோதரர்களுக்கு பாகப்பிரிவினை மூலமாக சமமான நிலம் கிடைத்தது. அதில் ஒருவர் (Raj), தனது சகோதரரின் மனைவிக்கு (Rani) 1993 வருடம் விற்றுவிட்டார். தற்போது நிலத்தை வாங்கிய(Rani) என்பவர் நிலத்திற்கு DTCP உரிமை பெற்று பிளாட் செய்து விற்று வருகிறார். ஆனால் 1993ஆம் வருடம் நிலத்தை விற்றவரின்(Raj) மகன் மற்றும் மகள் எங்களுக்கு தாத்தா சொத்தில் உரிமை உண்டு என வழக்கு செய்து நிலுவையில் உள்ளது. நிலத்தை விற்றவர் தற்போது உயிரோடு உள்ளார். இப்போது இந்த வழக்கில் யார் வெற்றி பெறுவார்? அந்த நிலம் பிளாட்டை வாங்கலாமா? தயவு செய்து விடை அளிக்கவும்.
@selvampalanisamy2 жыл бұрын
இந்த விசயத்தை பொறுத்த அளவில், தாத்தா சொத்தில் உரிமை இருக்கிறது என்று பேரன் பேத்திகள் கேஸ் போட்டால் அது செல்லாது. அந்த பிளாட்டை தாராளமாக வாங்கலாம்
@prakash8910 Жыл бұрын
அதுவே பாகபிரிவினை மூலமாக வந்த சொத்தாக இருந்தால்
@vasavicomputers5267 Жыл бұрын
பாகப்பிரிவினை செய்யும் போழுது பொது வழி பாதை எப்படி பிரிக்க வேண்டும். அடுத்த கேள்வி அப்படி பிரித்த பொது வழி பாத்தியை கிழே பொதுவாக விட்டுட்டு விட்டு மேல அவர் அவர் பாகத்துக்கு வழியை மறைத்து கட்டிக்கொள்ளலாம் ? அல்லது கிழே பொதுவாக விட்டது போல் மேலேயும் விடவேடுமா?
@selvampalanisamy Жыл бұрын
யாருக்கும் பாதிப்பு வராதபடி நியாயமாக இருக்கும்படி பிரித்துக் கொள்ளுங்கள்
@narayaraj55902 жыл бұрын
Anna pagapirovinai 7 family members athil oruvar shine panavilai yendral athu selluma?
@selvampalanisamy2 жыл бұрын
அது எந்த சூழ்நிலையில் என்பதை பார்க்கவேண்டும்.
@narayaraj55902 жыл бұрын
Anna puriyala detail la sollunga pls
@selvampalanisamy2 жыл бұрын
@@narayaraj5590 ஒருவர் ஏன் கையெழுத்து போடவில்லை?
@user-hr3uk8io9b2 күн бұрын
அண்ணன் தம்பி இருவர் இருக்கும் போது தம்பிக்கு எல்லா இடங்களிலும் முதலில் பங்கு கொடுப்பது சட்டத்தில் இருக்கிறதா அல்லது
@prem_rmk Жыл бұрын
ஐயா வணக்கம். 1975 இல் பதிவு செய்யப்பட்டுள்ள பாகபிரிவினை பத்திரத்தில் புல எண் 1249 என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1994இல் அதே இடத்திற்கு வழங்கப்பட்ட மனைவாரி தோராய பட்டாவில் புல எண் 1245/2D என குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பதிவு செய்யப்பட்ட பட்டாவில் உள்ள நபர்கள் யாரும் உயிருடன் இல்லை. அந்த இடத்தில் பெருமாள், ராமையா என அண்ணன் தம்பி இருவருக்கும் கூட்டாக நிலம் உள்ளது. இருவரின் வாரிசுகள் பெயர்கள் பட்டாவில் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உட்பரிவு செய்ய survey அலுவலகத்தை அனுகிய போது அவர்கள் புல எண் வெவ்வேறாக உள்ளது என கூறுகின்றனர். தற்பொழுது அந்த இடத்தை எவ்வாறு இருவருக்கும் தனி தனியாக உட்பிரிவு செய்வது என்று கூறுங்கள்.
@selvampalanisamy Жыл бұрын
பட்டாவில் ஏற்பட்டுள்ள தவறை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யுங்கள்
எங்களுடைய சொத்து கேஸ் கடந்த 2012 முதல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கேஸ் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது ஆனால் பாகம் பிரிக்கவில்லை. வக்கீல் ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். கமிஷனர் பேப்பர் தொலைந்து விட்டதாகவும் அதற்கு ஜட்ஜிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார். விரைவில் கேஸ் முடிக்க என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்.
@selvampalanisamy Жыл бұрын
உங்கள் வழக்கறிஞரை கேளுங்கள்.
@a2zkumaran2 жыл бұрын
வணக்கம் ஐயா, பாகப்பிரிவினை பத்திரத்தில் 1 பாகம் பிழைதிருத்தம் செய்ய அனைத்து பாகங்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
@selvampalanisamy2 жыл бұрын
ஆம்
@s.gpandian.3193 Жыл бұрын
ஐய்ய வணக்கம் எனக்கு ஒருதகவல் வேண்டும் தந்தைக்கு 3 மகன்கள் ஒருமகனுக்குதெரியாமல் மற்றமகன்கள் தனித்தனி நாட்களில் அவர்களே ஒருபாகத்தை ஒதுக்கிவிட்டு பாகப்பிரிவினை செய்தால் அது செல்லுமா மற்றவர்அந்த பாகப்பிரிவினையை மருக்கமுடியுமா
@selvampalanisamy Жыл бұрын
மறுக்க முடியும். அது செல்லாது.
@kumarn65902 жыл бұрын
Sir nanga pagapirivinai muduchitom yengakitta nagal pirathi tha irruku yengaluku asal pirathi yentha idathil thevai clear sollunga please
@selvampalanisamy2 жыл бұрын
பொதுவா பாகப்பிரிவினை செய்றவங்க எல்லாருக்குமே இந்த சிக்கல் இருக்கும். அந்த பாகப்பிரிவினை பத்திரத்திலேயே ஒரிஜினல் பத்திரம் யார்கிட்ட இருக்குங்கிறதயும் எழுதி இருப்பாங்க. நீங்க எப்படி எழுதி இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. தேவைன்னா அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு திரும்ப அவங்ககிட்டயே கொடுக்கணும். உங்க வசதிய பாத்துக்கோங்க. எல்லாருக்கும் ஒரிஜினல் பத்திரம் கொடுக்க முடியாது!
@GaneshKumar-qk3tm Жыл бұрын
எங்கள் வீட்டில் 6 பாகங்கள் உள்ளன அதில் 4 பெண்கள் 2 ஆண்கள் உள்ளன 4 நபர்கள் இந்த குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் விற்க முயற்சி செய்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒரு ஆளாகிய நான் அதை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறேன் என்னால் வேறு ஒருவர் வாங்குவதை நிறுத்த முடியுமா?
@selvampalanisamy Жыл бұрын
அடுத்தவர் கொடுக்கும் தொகையினை நீங்கள் கொடுத்தால் முடியும்
@iyappan..s81792 жыл бұрын
Sir, எங்களுடைய பட்டா நகள் இருக்கு, பாக பிரிவினை செய்தார்களா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை, ஒரு வேளை செய்திருந்தால் அதை எப்படி தெரிந்துகொள்வது. அதனுடைய நகலை எப்படி online la எடுப்பது. பாக பிரிவினை செய்தார்களா? அல்லது செய்யவில்லையா என்பதை ஆன்லைனில் பார்ப்பது எப்படி.
@selvampalanisamy2 жыл бұрын
வில்லங்கம் பாருங்கள். தெரிந்துவிடும்
@anbud8612 Жыл бұрын
1993 ல் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டது , அதை வைத்து என் பெரியப்பா மட்டும் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றிக்கொண்டார் இப்போது original partition deed தொலைந்து விட்டது Xerox மட்டும் தான் இருக்கிறது Original partition deed பெறுவது எப்படி எவ்வளவு நாட்கள் ஆகும்
@selvampalanisamy Жыл бұрын
காணவில்லை என்று நாளிதழில் விளம்பரம் செய்து மற்றும் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்து அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சார்பதிவாளரிடத்தில் கொடுத்து புதிய அசல் பெறவேண்டும்.
@stcourier810 ай бұрын
Sir appa illa ennaku appa name la ulla property Nan en amma en 2sister Naga 4 members appa property sale panni en sister ennaku share tharama last sister boy friend ku money problem nu solli sale pannina amount kuduthutaga share venum nu ketathuku sister Ava boy friend vachu enna adikera .. ennaku husband illa 10years la son irrukan epo Nan en appa ulla innoru property la en jewellerya bank la vachu home katti Nan en amma sister nu valthutu irrukom epo enna home la vettu vilya poga solraga enna panrathune thireyala sir relative support pannina avagala thappa pesuraga en share antha homeku Nan kudutha money yellam vaga enna panrathu sir pls help me
@rameshneshan3810 Жыл бұрын
ஐயா எங்கள் பாகப்பிரிவினை இயர் லிஸ்ட் மட்டும் தான் உள்ளது நாங்கள் என்ன செய்வது அது பூர்வீக சொத்து. எங்கள் பங்காளி அவருடைய சொத்து என்று உயிர் எழுதி வைத்துள்ளார் அதை வைத்து அவர்கள் விட்டுக் கொண்டு வருகிறார் என்ன செய்வது
@selvampalanisamy Жыл бұрын
அந்த சொத்து குறித்த பழைய ஆவணங்களை திரட்டுங்கள். புகார் அளியுங்கள். மீட்கலாம்!
@akilakrishnamoorthy454410 ай бұрын
வணக்கம் ஜயா, பாகபிரிவு பத்திரத்தில் செக்பந்தி தெற்கு வடக்கு தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிழை திருத்தம் செய்வது எப்படி? கூறுங்கள்
@selvampalanisamy10 ай бұрын
பத்திர எழுத்தரை அணுகுங்கள்.
@shanmugarajd93216 ай бұрын
ஒரு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யும் போது guidelines value நகல் தாக்கல் செய்ய வேண்டுமா? Guidelines value நகல் வைக்கவில்லை என்று பிராதை return போட முடியுமா?
@selvampalanisamy5 ай бұрын
போடலாம்
@kandasamy-88902 ай бұрын
ஐயா, ஆறு பேர் வாரிசு கொண்ட ஒரு நிலத்தை மூன்றாவது நபர் மட்டும் வேறு ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் அதும் அவருடைய தந்தை பெயரில் உள்ள நிலத்தை சட்டப்படி இந்த பதிவு செல்லுமா?
@rithickroshen4241 Жыл бұрын
ஐயா வணக்கம் அண்ணா தம்பி இருவர் தம்பிக்கு தேரியமல் அம்மா அண்ணக்கு தான செட்டில்மெண்ட் அவருடைய பங்கை எழுதி வைத்தார் தம்பிக்கு எழுதி தர முடியாது என்று கூறுகிறார் இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
@selvampalanisamy Жыл бұрын
ஒன்றும் செய்ய முடியாது
@krvelu550623 күн бұрын
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் பாக பிரிவினை செய்யும் போது வழி விடாமல் பிரித்து விட்டனர். இப்போது வழி வாங்க முடியுமா
@harittf66946 ай бұрын
ஐயா குடும்ப உறுப்பினர் அல்லாத ஐந்து சென்டு இடம் நான்கு பெயரில்கூட்டுபட்டாவாக உள்ளது அதில் பாக பிரிவினை செய்யாமல் உள்ளது அதில் ஒருவர் மட்டும் அவருடைய பங்கிளை விற்க முடியுமா அவருடைய பங்கை வாங்கினால் ஏதேனும் பிரச்சனை வருமா
@selvampalanisamy4 ай бұрын
அவருக்கு எந்த பக்கமுள்ள பங்கு வரும் என்று இப்போது கூற முடியாது. வருகின்ற பங்கை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் வாங்கலாம்.
@keruthigababy7848Ай бұрын
ஐயா என் அப்பா வர வேண்டிய பாகத்தை எங்க பெரியப்பா எடுத்துட்டு அவர் பாகத்தை எங்க அப்பா பதிவு பண்ணிட்டு இடம் விற்க முயற்சி பண்ண வாங்க வருபவர் முன் இடம் வேணும் சொல்லுறாங்க இப்ப நாங்க வழக்கு போட்டு முதல் பாகம் கேட்டு ஜெயிக்க முடியுமா எனக்கு உதவி பண்ணுங்க ஐயா எனக்கு அவசரம்
@RajaaliRajaali-em1wx3 ай бұрын
ஐயா எங்கள் பூர்வீக சொத்து இதில் இரண்டு நபர்கள் வாரிசுகள் உள்ளோம் அதில் பாகப்பிரிவினை செய்யும் முன்பே ஒரு நபர் இறந்து விட்டார் இப்போது நான் அதில் எனது பாகத்தை மட்டும் எப்படி
@ganesanganesh39979 ай бұрын
வணக்கம் அய்யா, என் தந்தை வழி தாத்தா சொத்து, அதில் என் தந்தையின் சித்தப்பாக்கள் 3 பேருக்கும் பங்கு உண்டு, என் தந்தை இறந்துவிட்டார் 20 ஆண்டுகள் மேலாகி விட்டது, என்னிடம் எந்த ஆவணமும் இல்லை, அவர்கள் என் பாகத்தை தர மறுக்கிறார்கள் இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் உங்கள் ஆலோசனை தாருங்கள் அய்யா, நன்றி வணக்கம்.
@selvampalanisamy9 ай бұрын
வழக்கு தொடுங்கள்
@bows897518 күн бұрын
ஐயா வணக்கம் எங்களுடைய தாத்தா சொத்து நத்தம் புறம்போக்காக இருக்கும் சொத்தை எங்கள் சகோதரர்கள் நான்கு பேர் உள்ளோம் இதைப் பிரித்துக் கொள்வது சிக்கல் உண்டு ஒருவர் மட்டும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு பண்ணிக்கிறார் அதில் எங்களுக்கு பாகம் உண்டா இதற்கு நாங்கள் வழக்கு தொடலாமா
@devadass82392 жыл бұрын
வணக்கம் ஐயா அவர்களே என் தாய் இறந்துவிட்டார் பிறகு தந்தைக்கு இரண்டாவது மனைவியும் இறந்து விட்டார் தந்தை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார் முதல் மனைவி க்கு இரண்டு பேர்களும் மூன்றாம் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள் சொத்தை எப்படி பாகப்பிரிவினை செய்வது எப்படி ஐயா
@selvampalanisamy2 жыл бұрын
உங்கள் தந்தை சொத்து சம்பந்தமாக எந்த ஏற்பாடும் செய்து வைக்காமல் இறந்தால்தான் நீங்கள் பாகப்பிரிவினை செய்ய முடியும்.
@hussainbangkok Жыл бұрын
தந்தை உயிரோட இருக்கும் போது இரண்டு மகள்களில் ஒரு மகளுக்கு மட்டும் சொத்தை எழுதி வைத்து விட்டார்.இன்னொரு மகளுக்கு அதில் பங்கு பெறுவது எப்புடி?
@selvampalanisamy Жыл бұрын
அது அவரது விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு வேளை வேறு யாராவது ஒருவருக்கு அவர் தனது சொத்தை எழுதி வைத்திருந்தாலும் இதுதான் முடிவு.
@ariuvthuraik759511 ай бұрын
என்ன சொல்ரிங்க.அவரின் சுய சம்பாத்தியம்ன சரி. இதுவே பூர்வீக சொத்தாக இருந்தால் அவர் விருப்பம் போல் முழுசொத்தையும் யாருக்குவேண்டுமானாலூம் கொடுத்து விட முடியுமா. 2 . 3கோடி நிலத்தை 6 வாரிசுகள் நீதிமன்றம் மூலமாக பாகபிரிவினை செய்ய கோர்ட்பீஸ் எவ்வளவு ? .பாகபிரவினை வழக்குக்கு கட்டண சீலிங் உண்டா ? .
@elangov43152 жыл бұрын
ஐயா ஒரு ச எண்னில் ஒரு பாதைக்கு பரப்பு நீளம் அகலம் குறிப்பிடாமல் a பாகஸ்தரும் v பாகஸ்தரும் போக வர பாத்தியம் உண்டு என்ற வார்த்தை மட்டும் பத்திரத்தில் உள்ளது. அதை உட்பிரிவு செய்வது எப்படி.
@selvampalanisamy2 жыл бұрын
பாதையின் அளவு குறிப்பிடாவிட்டால் நடை பாதை என்று அர்த்தம் கொள்ளப்படும்
@elangov43152 жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா.
@selvampalanisamy2 жыл бұрын
@@elangov4315 மகிழ்ச்சி
@sureshmathav98572 жыл бұрын
குடும்ப உறுப்பினர் அல்லாத நபருடன் வாங்கிய சம பாக சொத்தை பாகம் பிரிக்காமல் தன் பாக சொத்தை மற்றொருவருக்கு கிரையம் பத்திர பதிவு துறையின் மூலம் செய்யலாமா?
@uzhavartvchannel14492 жыл бұрын
ஐயா வணக்கம் பூர்வீக சொத்தை தானமாக எழுதிக் கொடுத்ததை எழுதி வாங்கியவர் அவருடைய வாரிசுகளுக்கு ஒருவருக்கு மட்டும் தானமாக எழுதிக் கொடுத்தாள் அது செல்லுமா
@selvampalanisamy2 жыл бұрын
செல்லும்
@anbumurugan12 Жыл бұрын
1) சொத்தில் ஆண் பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு அதில் பெண் தன்னுடைய சொத்தை ஆண் வாரிசுகளை பகிர்த்து கொள்ளட்டும் என்று கூறினால் ஆண் வாரிசுகள் மட்டும் பாகப் பிரிவினை செய்யலாமா? 2) பாகப் பிரிவினையின் போது 4 ஆண் வாரிசுகள் உள்ளனர். அதில் இறுதி ஆண் வாரிசு இறந்து விட்டார் அவருக்கு குழந்தைகளும் இல்லை ஆனால் மனைவி உயிருடன் உள்ளார் அவர் நிலத்திற்கு பதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று கொள்ள தயாராக உள்ளார் அப்படி ஆனால் மற்ற 3 ஆண் வாரிசுகள் நிலத்தை பாக பிரிவினை செய்யலாமா?
@Skrajuadmk2 жыл бұрын
முதல் மனைவி இறந்தபிறகு உம் திருமணம் முதல் மனைவி 3 மகன் 2ம் மனைவி | ஆண் பூர்விகம் செந்து பங்கு சமமாக வா அல்லது எப்படி
@selvampalanisamy2 жыл бұрын
எத்தனை திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு சமபங்கு உண்டு. அந்த குழந்தைகளின் தந்தை உயிரோடு இல்லாவிட்டால்தான் இப்படி குழந்தைகளுக்கு பங்கு கிடைக்கும்.
@ayyemperumalsattaiyappan28182 жыл бұрын
விதவை பெண்க்கு வாரிசு இல்லா நிலையில், அவரது தந்தையின் செத்தை அந்த கவிதையின் உடன் பிறந்தவர்கள் எப்படி பங்கு செய்ய வேண்டும்.
@selvampalanisamy2 жыл бұрын
சமமாக
@abdulkadhar738111 ай бұрын
வணக்கம் ஐயா, பாகப்பிரிவினை அசல் பத்திரம் ஒருவருக்கும் நகல் ஒருவருக்கும் கொடுக்கப்படும்?
@selvampalanisamy11 ай бұрын
ஆமாம்.
@mohamedyunis65122 жыл бұрын
1980 வாய்மொழி பாகப்பிரிவினை மற்றும் 1980 white paper ல் பதிவு செய்யாத பாகப்பிரிவினை சொல்லுமா???
@selvampalanisamy2 жыл бұрын
செல்லாது
@prasannappt2 жыл бұрын
ஐயா, என் தாத்தா தன் பூர்வீக சொத்தின் ஒரு பாகத்தை தன் மற்றொரு பேரன் பெயரில் எழுதிவிட்டார். இது செல்லுமா ... மற்ற பேரன்கள் வழக்கு போடலாமா? இப்போது என் தாத்தா இல்லை.
@selvampalanisamy2 жыл бұрын
அவர் எழுதியது செல்லும்.
@thenmozhiramanathan2934 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் எனது சந்தேகம், பாகப்பிரிவினை ஆவணத்திலே தங்களுக்குரிய பாகத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்து எழுதித்தரலாமா, விடுதலை ஆவணம் போடாமலேயே இது சட்டப்படி செல்லுமா. தங்களின் விளக்கத்தை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.