Рет қаралды 138,965
#பட்டு #பட்டுப்புழு #இயற்கைவிவசாயம்
பட்டு வளர்ப்பில் முன்னோடி மாவட்டமாக உருவெடுத்து வருகிறது தேனி. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சிமலையையொட்டி நிலவும் சீரான சீதோஷ்ண நிலை, பட்டு வளர்ப்புக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதுதான். இப்போது பட்டு உற்பத்தியில் மாநில அளவில் தேனி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு முதல் மாவட்டத்தில் உள்ள பல விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநில அளவில் தேனி மாவட்டம் முதலிடத்தை அடைய வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கூழையனூரைச் சேர்ந்த பட்டு விவசாயி சின்னன், அண்மையில் மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயி விருதை முதல்வரிடம் பெற்றுள்ளார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
--------------------------------------------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....