Рет қаралды 695
கந்தரலங்காரம்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
திருப்புகழ்
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
தெனவுரமு மான ...... மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத ...... மருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு ...... மதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் ...... வருவோனே
தவமலரு நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு ...... பெருமாளே.