Рет қаралды 678
#hosur #மனவளக்கலை #ஓசூர் #hosurnews #கிருஷ்ணகிரிமாவட்டம் #skyyogaonline
மனைவி நல வேட்பு நாள் ஓசூர் அறிவு திருக்கோவில் சார்பாக
உலக சமுதாய சேவா சங்கம் ஓசூர் மண்டலம், ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் இணைந்து நேற்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை மனைவி நல வேட்பு நாள் மீரா மஹால் திருமண மண்டபத்தில் விழா நடந்தது.
இந்த விழாவானது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவியார் அன்னை லோகாம்பாள் அவர்களின் 110வது பிறந்த தினமான அதை, மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்படுகிறது
இதில், 300 தம்பதியர் கலந்து கொண்டனர். இவர்கள் முன்னதாக தம்பதிகள் ஒருவருக்கொருவர் அருட்காப்பு கூறிக கொண்டனர். பின்னர் மலர் மற்றும் கனிந்த பழம் ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதையடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு கணவன், மனைவி இருவரும் ஒரு வருக்கொருவர் கைகளை பற்றி கொண்டு, தங்களது திருமணம் முடிந்ததில் இருந்து, 'இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைத்து மகிழ்ந்தனர்.
தம்பதியர் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கைகளை சேர்த்து வைத்துக் கொண்டால், காந்த பரிமாற்றம் நடக்கும். திருமணம் நடந்த நாள் முதல், கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் செய்தவற்றை நினைத்து பார்ப்பதன் மூலம், அவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்பதும், இந்த விழாவின் சிறப்பம்சம். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் திரு. R.ராஜேஷ், I.R.S., Asst. Commissioner, GST & Central Excise, Hosur மற்றும் சிறப்பு தம்பதியர்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளவும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐 🙏