Рет қаралды 34,845
மொத்தம் உள்ள தனது 9 ஏக்கர் நிலத்தில், 6.5 ஏக்கரில் 30 அடிக்கு ஒன்று என்ற அடிப்படையில் 470 தென்னை மரங்கள் நடவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில் 4 தென்னைக்கு நடுவே 1200 தேக்கு மரம், மற்றும் 10 தோதகத்தி என நடவு செய்யப் பட்டுள்ள மரங்களைப் பராமரித்து வருகிறார்...
திரு. ரமேஷ் ராஜா,
சுந்தர ராஜபுரம் கிராமம்,
இராஜபாளையம் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
சமீபத்தில் 7 #தேக்கு மரங்களை அறுவடை செய்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம்(1.4L) ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். மேலும் 3 #தோதகத்தி மரங்களை அறுவடை செய்த இவர், 2 மரங்களை தமது வீட்டு உபயோகத்திற்கும், 1 மரத்தினை(47 அடி) மூன்று லட்சத்திற்கும் விற்பனை செய்துள்ளார்.
#டிம்பர் மரங்களின் பயன்களை அறிந்த இவர் அதிகமாக தோதகத்தி, #செம்மரம் போன்ற டிம்பர் மரங்களை அதிகமாக நடவு செய்து வருகிறார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர், #ஈஷாவில் பெற்ற #கரிமுண்டா ரக மிளகு நாற்றுகளை நடவு செய்து, இதுவரை 17 கிலோ மிளகினை அறுவடை செய்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்னர், 2016 இல் தனது பேரன் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, ஈஷாவில் நாட்டு #நாவல் மரத்தினை பெற்று நடவு செய்துள்ளார். ஆரோக்கியமான நாட்டு நாவல் பழங்களை கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தகவல்களை இக்காணொளியில் காண்க...
#Rosewood - #Dalbergia_Latifolia
#Teak - #Tectona_Grandis
#Rosewood - #Syzygium_Cumini
#Pepper - #Karimunda
Click here to subscribe for latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom