Рет қаралды 3,912
நயினார் கோவில் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம் நயினார் கோவில் யாதவர் மகாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்வி.கு.வினிதா தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் (ICDS) திருமதி.வ.ஜெயந்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.R.கல்யாணி அனைவரையும் வரவேற்றார், P.கொடிக்குளம் - மருத்துவ அலுவலர், மருத்துவர்.வ.இராஜ்குமார் திட்டத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார பணிகள் குறித்து பேசினார்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு.V.கெளதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் விளக்கினார். அங்கன்வாடி பணியாளர்கள் & உதவியாளர்கள் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை சிறப்பாக அமைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் நயினார் கோவில் வட்டார ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், ICDS மேற்பார்வையாளர் நிலை 1 & 2 ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக வட்டார திட்ட உதிவியாளர் திரு.R.தினேஷ் நன்றியுரை வழங்கினார்.