Рет қаралды 53,697
போர் மேகம் சூழ்ந்த உக்ரைன் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
அமைதிப் பேச்சுவார்த்தை மூலம், ரஷ்யா - உக்ரைன் இடையிலான பிரச்னைக்கு தீர்வு கண்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியை மோடி வலியுறுத்தினார்.
தொடர்ந்து இந்தியா - உக்ரைன் இடையே விவசாயம், மருத்துவம், கலாசாரம் மற்றும் மனிதநேய உதவி தொடர்பாக 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் உக்ரைன் வருகை குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அதன் பங்குக்கு சிறப்பாக செயலாற்றும் என நம்புகிறேன். இது வெறும் இரு நாடுகள் இடையிலான பிரச்னை அல்ல. இது போர் என இந்தியா அங்கீகரித்துள்ளது.
ஆம்... புடின் என்ற ஒற்றை மனிதர் உக்ரைன் என்ற தேசத்திற்கு எதிராக தொடுத்துள்ள போர் இது. இந்தியா மிகப் பெரிய நாடு. அது நினைத்தால் ரஷ்யாவின் பாெருளாதாரத்தை தடுத்து நிறுத்தி, புடினின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்தியா - உக்ரைன் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நாங்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க தயாராக உள்ளோம். அங்கே முதலீடு செய்யவும் தயாராக உள்ளோம். இந்திய நிறுவனங்கள் இங்கேயும், இந்தியாவில் உக்ரைன் நிறுவனங்களும் தொழில் துவங்க தயாராக உள்ளன.. இது தொடர்பாக, இந்திய அரசுடன் மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என, ஜெலன்ஸ்கி கூறினார்.# #Ukrainewar| # Modi #Ukraine| #Russia