Рет қаралды 90,748
திருவாரூர் மாவட்டம். குடவாசல் அருகில் மருதுவாஞ்சேரியை சேர்ந்த விவசாயி மாரிமுத்து, 30 ஆண்டுகளாக மரப்பயிர் விவசாயம் செய்து வருகிறார். தற்சமயம்10 ஏக்கரில் 3,000 டிம்பர் மரங்களை வளர்த்துள்ளார்.
தேக்கு, வேங்கை, மகாகனி,சந்தனம் மற்றும் மாஞ்சியம் போன்ற மரங்கள் உள்ளன. அவை சிறப்பாக வளர்ந்துள்ளது. மரங்களில் ஊடுபயிராக மிளகாய், கீரைகள், மிளகு, வாழை சாகுபடி செய்து தொடர் வருமானமும் எடுத்து வருகிறார்.
தேக்கு,வேங்கை மரங்களை விற்பனை செய்துள்ளார்.
அதில் முக்கியமாக 8 அடி சுற்றளவுள்ள 30 வருட வேங்கை மரத்தை 1.25 லட்சத்திற்கு விற்று வருமானம் ஈட்டியுள்ளார். அந்த பணம் மகன் கல்வி செலவிற்கு கைகொடுத்துள்ளது. வீடுகட்ட அவரது நிலத்தில் வளர்ந்த வேங்கை மற்றும் மாஞ்சியம் மரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
இவரது ஆலோசனையில் அருகில் உள்ள விவசாயிகள் 5,000க்கும் மேற்பட்ட டிம்பர் மரங்களை நடவு செய்துள்ளர். காவேரி கூக்குரலுக்கு மாரிமுத்து அளித்த பேட்டி.
#Timber #Tree #Wood #Teak #Kino #Mangium #Redsanders #Income #TreeFarming #CC #Cauverycalling #TBF #Intercrop #treebasedagriculture