Рет қаралды 30,476
Bogar Siddhar, Korakkar Siddhar, Santhira Regai, Chandira Regai 200, கோரக்கர் சித்தர், போகர் சித்தர், சந்திரரேகை 200, Gorakka Siddhar, Kaliyugam in tamil
கலியுகத்தின் முடிவு எப்படி இருக்கும்? போகர் சித்தர் கோரக்கர் சித்தரிடம் கூறியது,
சந்திரரேகை பாடல் எண் 26
அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
கலிகாலம் முற்றி முடியும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும். அதற்கான சாட்சியங்களாக நடக்கப் போவதை வரிசையாக சொல்லுகின்றேன். ஆகாயத்தலே பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் ஒன்று தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி சிறிதும் குறைவின்றி வால் போன்று நீண்டு சந்திரனுக்கு மேலே நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி பல புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வார்கள்.
சந்திரரேகை பாடல் எண் 27
கதிரவனுங் கடும்பனியுங் காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
கடல்பொங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.
சூரியனிலிருந்து மிகக் கடுமையான வெப்பமும், இரவில் கொடும் பனியும் கொட்டி தீர்க்கும், மக்கள் யாவரும் கொடுந்துன்பங்களுக்கு ஆளாவார்கள். கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் ஆகாயத்தில் ஏற்படும். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தாழ்ந்து இருக்கும். யானையின் மண்டை போல மிகப்பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரனின் மேலே காட்சி தரும். காலநேரங்கள் யாவும் மாறி ஒருநாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும்(மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தினைக் குறிப்பதாகும்). வடக்கே உள்ள தேசங்களில் கடல் பொங்கி, ஆழிப்பேரலைகள் ஏற்பட்டு அழிவுகள் பல நிகழும், நெருப்பினால் பல அழிவுகள் பல நிகழும், மேலும் நெருப்பு ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
சந்திரரேகை பாடல் எண் 28
எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளைப் பாத கன்றான்
பக்தர்களைச் சிறை கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவியாய் சேவை செய்வார்கள். அவர்கள் மீது கோபங்கொண்டு அவமானப்பட்ட பாவியான வெள்ளைக்கார பாதகர்கள் இரக்கமின்றி பக்தர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இக்கெடுதல்களால் மனம் உடைந்து பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளய காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிந்து கிடப்பதைக் காணலாம். சந்தேகமின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களைக் காக்க அப்போது உடனே வருவேன் என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு மறைந்து போனார் போகர்.
#aalayamselveer #chandiraregai #bogar #korakkar