Рет қаралды 133,398
#SRK_Teller #folk_dances
Part-1 • Karnan Sandai Part-1 |...
Part-2 • Karnan Sandai Part-2 |...
Part-3 • Karnan Sandai Part-3 |...
Part-4 • Karnan Sandai Part-4 |...
Part-5 • Karnan Sandai Part-5 |...
Part-6 • Karnan Sandai Part-6 |...
Part-7 • Karnan Sandai Part-7 |...
| folk dance | folk dances folk dance, folk dances
மாவீரன் கர்ணன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். கர்ணனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரு வீரர் அகிலத்தில் எவரும் இல்லை என்று கிருஷ்ணன் உரைத்தார், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
அவர் சூரியன் (சூரியக் கடவுள்) மற்றும் குந்தி தேவி ஆகியோரின் மகனாவார். அவர் குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணம் நடைபெறும் முன்னரே, குந்திதேவிக்கு மகனாக பிறந்தார். துரியோதனனின் மிக நெருங்கிய நண்பரான கர்ணன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களை (தனது சகோதரர்களை) எதிர்த்து போரிட்டார். குருச்சேத்திரப் போரில் இரண்டு நாள் கௌரவர் அணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் புரிந்து கடோற்கஜனை இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கொன்றார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மேலும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் தனது வாக்கைக் காப்பாற்றினார். அவரது வீரம் மற்றும் கொடைக் குணத்துக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.