அண்ணாவின் அருமைத் தம்பி ********************************* கலைஞர் நூறு என்கிற மாமழையில் சிறு துளி இது. பெரியார் எனும் பேரறிஞர் எனும் திராவிடக் கடலில் முழுகி முத்தெடுத்த கலைஞர் எனும் முத்தமிழ் வித்தகர் பெரியார் எனும் மார்க்சும் அண்ணா எனும் எங்கல்சும் வகுத்தும் தொகுத்தும் தந்த திராவிட மாடல் கொண்டு சீர்மிகு தமிழ்நாட்டை சிகரத்தில் ஏற்றி வைத்து ஆட்சி நீட்சிக்கு ஒரு ஸ்டாலினையும் விட்டுச் சென்ற தமிழ்நாட்டு லெனின் அண்ணா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பிய பன்முகப் பேராற்றல் பெரியார் போல் வீசும் கடும் புயலாய் அண்ணா போல் வருடும் இன்பத் தென்றலாய் புத்தரின் போதனைகளை சித்தரின் சிந்தனைகளை சீர்திருத்த சிலையாய் செதுக்கி வைத்தவர் பெரியார் போட்ட கோடெல்லாம் ரோடு போட்டவர் அண்ணாவின் அழகுத் தமிழை செம்மொழியாய் வளர்த்துத் தந்தவர் பெரியார் பாசறையின் பகுத்தறிவுப் போர் முறையை சமத்துவமென்றும் சமூகநீதியென்றும் அறிவு ஆயுதமாக்கி சனாதனக் கோட்டையைத் தகர்த்தவர் வில்லாய் வளைந்து கிடந்த தமிழ் சமூகத்தை செங்கோலாய் நிமிர்த்திய பேனாவின் பிதாமகன் சாதிக்கொரு சங்கம் வைத்தோரை தமிழ் சாதியாக்கி தலை நிமிர்த்தியவர் தாழக் கிடந்தோரை தோழ் கொடுத்து தூக்கி விட்ட பாச மலர் நாற்றமெடுத்துக் கிடந்த சமுதாய சாக்கடையை நறுமணம் கமழ வைத்த வாச மலர் ஒழிந்து ஒழிந்து ஒளியும் ஒலியும் மாற்றான் வீட்டில் கறுப்பு வைள்ளையில் பார்த்து நின்றவரை சொந்த வீட்டில் நிமிர்ந்து அமர்ந்து வண்ணத்தில் பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்தவர் ஒன்றே முக்காலடியில் உலகளந்த உத்தம சித்தர் வான் புகழ் வள்ளுவருக்கு முக்கடல் சங்கமத்தில் வானுயர் சிலை வைத்தவர் பள்ளியின் வாசல் திறந்து வைத்தவர் கல்வித் தந்தை பெருந்தலைவர் வாசல்வரை கொண்டு இறக்கி விட்டவர் கலைஞர் எனும் கல்வி வள்ளல் (இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ்) சுட்டெரிக்கும் நெருப்புச் சாலையில் நடந்த வெறுங்கால்களை செருப்பணிந்து சிரிக்க வைத்தார் சீருடை தந்து மனம் சிலிர்க்க வைத்தார் விலையில்லா புத்தகம் தந்து மலையளவு மகிழ்ச்சி தந்தார் சத்துணவில் முட்டை போட்டு முட்டையிட்ட பெட்டைக் கோழியை பிறவிப்பயன் பெற வைத்தார். வசனமென்னும் வாள் வீச்சால் கலையுலகில் கலகமூட்டி மதம் எனும் மதயானையை மயக்கி வியக்க வைத்தார் மூளை வீங்கிகளையும் மூக்கில் வியர்க்க வைத்தார் பார் போற்றும் பேரறிவாளரை துர் வார்த்தைகளை துப்பி ஊர் சுற்றித் திரியும் பொய் வாய்கள் உண்மை உணர வேண்டும் ஆல் போல் அறிவுடனும் பால் போல் மனதுடனும் அவர் போல் மானிடர் யாருளர்?!!!!!. படைப்பும் பகிர்வும் இரா.கோபாலன்.
@ganeshsankar8410 Жыл бұрын
மிக சிறந்த பதிவு நண்பரே. வாழ்க வளமுடன்.🎉🎉
@chenkumark4862 Жыл бұрын
அய்யா கவிதைபித்தன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி . அருமையான பதிவு சமகால கவிதாசரண் வாழ்க வாழ்கவே
@ganesanperiyasamy1350 Жыл бұрын
கவிச்சுடர் கவிதைபித்தன் அவர்கள் கோடியில் ஒருவர்! தமிழ் வாழும் வரை இவரின் கொள்கைத் தமிழ் வாழ்ந்து கொண்டே இருக்கும்! - பெ.கணேசன் மும்பை
@isaianu3332 Жыл бұрын
நன்றி 🙏🏻
@aarceeravichandran9898 Жыл бұрын
நிச்சயம் நீங்கள் கலைஞர் விருது பெற தகுதியானவர் தான் நீங்கள் என்பதை ஒப்புக்குக் கொள்ளும் தகுதி நற்றமிழ் அறிந்தவர்களுக்கு நிச்சயம இருக்கும் ! ஏனென்றால் கவிதைப்பித்தன் என்ற கவிஞரை ஓரளவு என் போன்றவர்கள் சில கவிதைத் சிதறல்களை சில பத்திரிக்கைகளில் படித்ததுண்டு ! ஆனால் உங்கள் உயரம் தகுதி எல்லாம் இப்போது தான் நீங்கள் பேசும் போது தான் தெரிகிறது ! உண்மையிலே மெய் சிலிர்த்துக் கேட்டேன் ! அருமை, அற்புதம் ! நீங்கள் செருக்கோடவே சொல்லிக்கொள்ளலாம் , நான்(நீங்கள்) கலைஞர் விருது பெற தகுதியானவன் என்று ! மிகவும் நாகரீகமாக செ.கு.தமிழரசன் விவாகரத்துடன் நீங்கள் தொடர்பு படுத்தி கலைஞர் அவர்கள் பேசியதை நயமாக நீங்கள் சொல்லி, தாங்கள் ஒரு வண்ணம் மட்டும் கொண்டவன் அல்ல என்பதை நிரூபித்து விட்டது உங்கள் பேச்சு!🎉வாழ்க நீங்கள் இறுதி வரை நோய் இல்லாத உடலோடு !
@logabalan4414 Жыл бұрын
கவிதைப்பித்தன் அவர்களே வாழ்க உங்களின் கவிதைப்பணி
@palanichamy3030 Жыл бұрын
அய்யா கவிதை பித்தன் அவர்களுக்கு வணக்கம் 🙏 தலைவர் கலைஞர் அவர்களுடனான தங்களின் அனுபவத்தையும் தங்களின் கவிதைகள் சிலவற்றையும் பேசிய விதம் தங்களின் அன்பு நேர்மை உறுதி கொள்கை கொண்ட நெஞ்சுரம் கண்டு வியப்பதோடு மட்டும் அல்லாமல் திராவிட இயக்கங்கள் மீது மேலும் தளர்ந்திடாத பிடிப்பை எனக்கு அளிக்கிறது . மேலும் தங்களின் கவிதைகளை படிக்க ஆவலுறுகிறேன் . நன்றி 🙏 வணக்கம் 🙏
@nanmaran.p5023 Жыл бұрын
ஐயாவிற்கு வாழ்த்துக்கள் 💐🙏🏻 கவிதை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் தொண்டு தொடரட்டும்.
@shanmugasundarammayilsamy6391 Жыл бұрын
அருமை அருமை, அய்யா, கலைஞரைப் பற்றிய வரிகள் வைர வரிகள். கலைஞரின் இறுதி நிகழ்வை கேட்கும் போது என் கண்கள் பணித்தன, மனது மிகவும் துன்பப்பட்டது. அய்யா தொடரட்டும் உங்கள் பணி.
@subramaniansangili4593 Жыл бұрын
ஐயா கவிதை கொழுக்கிறது. உங்கள் உடல் இளைத்திருக்கிறது ஐயா! கவல்கிறேன். கவனம் ஐயா! கவிதைக்கு வழிகாட்டி நீங்களும் உங்களைப் போன்றவரகளும். வாழ்த்துக்கள்!
@chidambarams237 Жыл бұрын
திராவிடப் பள்ளி பணி சிறக்க வாழ்த்துகள் நிறைய🙏💕
@aransugircreations Жыл бұрын
சிறப்பான பேச்சு ஐயா திரு கவிச்சுடர் கவிதை பித்தன் அவர்களுக்கு நன்றி
@thamilarasu4400 Жыл бұрын
நெஞ்சம் கனக்கும் நெகிழ்ச்சியான ஏற்புரை
@sureshkumarkalimuthu2010 Жыл бұрын
கவிதைப் பித்தன் ஐயா அவர்களின் பேச்சை இன்றுதான் கேட்கிறேன் நெகிழ்வான மலரும் நினைவுகளுடன் அருமையான பதிவு
கவிதையாரின் நினைவலைகள் அற்புதம். பொதுவாக புதுக்கோட்டை தி மு க தளகர்த்தகர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக அறிந்தவர் புரிந்தவர். மாநிலத்தளகர்தர்களையும் அறிந்தவர். அவருக்கான இடம் அரசியலில் சரியாக கிடைக்கவில்லை என்பது மனதை வருடிக்கொண்டே இருக்கிறது
@selvamanimeganathan3423 Жыл бұрын
கலைஞரின் பித்தன் கவிதை பித்தன் நூற்றாண்டை கடந்து வாழ்க. இன முழக்கம் தருக.
@muthucms Жыл бұрын
மெய்சிலிர்த்தது
@vivekanandanvenugopal3968 Жыл бұрын
உணர்ச்சி கள் மிகுந்த உரை.. தங்கள் கவிதை மழையில் உள்ளம் மகிழ்ந்தன.... கலைஞர் கவிதை கண்கள் கசிந்தன..
@muthukv7017 Жыл бұрын
ஐயா கவிதை பித்தனின் உரையை இன்றுதான் கேட்கிறேன்.மனம் இளகிவிட்டது.அருமை.இயக்கத்தில் இவரை போன்ற லட்ச்சியவாதிகளை இன்றைய சூழலில் உன்னதமாக பயன்படுத்தி கொள்வது மிக அவசியம்.
@nagarajans.v1492 Жыл бұрын
பிரம்மன் தலையில் பிறந்ததாக சொல்லப்படுகின்ற இனத்தில் பிறந்த நான் கடந்த நாற்பது வருடங்களாக இயக்கதில் ஈடுபாடு காட்டி வருகின்றேன் கவிதைப்பித்தன் என்ற கவிஞரின் கவிதைகளையும் அந்தக் கவிஞரையும் இந்த காணோளியில் தான் கண்டேன் முதன்முறையாக நன்றி திராவிடம் 100 மற்றும் திராவிடப்பள்ளி.
@valanaadankavi937 Жыл бұрын
கவிதை மழை பொழிந்து ஓய்ந்துள்ளது. அண்ணன் கவிதைப் பித்தனுக்கும், சுப.வீ அவர்களுக்கும். வட சென்னை தமிழ்ச் சங்கத்திற்கும் என் வாழ்த்துகள்.
@chidambarams237 Жыл бұрын
பேராசிரியர் சுப வீ தொடர் பணி..
@poongodikubendiran7854 Жыл бұрын
திராவிடம்,சமூகநீதி,இனஉணர்வு,மொழிப்பற்று,பகுத்தறிவு,கவியரங்கம் ,பட்டிமன்றம் இந்த வார்த்தைகளை திராவிடர் கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம்தவிர வேறெந்த இயக்கங்களிலும் நான் கண்டதில்லை கேட்டதில்லை. ❤❤இப்படிப்பட்ட இயக்கங்கள் இல்லையென்றால் நாம் தமிழகர்கள் என்ற உணர்வே இல்லாமல் போயிருக்கும்.
@kalairanimathematics Жыл бұрын
ஐயா கவிதை பித்தன் உள்ளதை உள்ளபடி மிகவும் எளிமையான முறையில் எதற்த்தமஆக அருமையாக பேசி இருக்கிறார். ஐயாவிற்கு நன்றி.
@venkeiramki9558 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான, நிறைவான உரை.. நன்றி அய்யா கவிதைப்பித்தன் மற்றும் அய்யா சுப. வீ அவர்களுக்கு..
இவ்வளவு நாள் தங்களின் கவிதைகளை வாசிக்க தவறிவிட்டேனே இனி விடமாட்டேன் தேடி ஓடி படிப்பேன்
@kesavankesavan1521 Жыл бұрын
நல்ல கவிதை
@sidhanpermual7109 Жыл бұрын
Excelent super
@senthilkumardhandapani4211 Жыл бұрын
Congratulations Sir. You are already in the lime light now. Heart touching words..
@asoknagarajan6325 Жыл бұрын
கவிதை பித்தன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது பாரட்டுக்குறிய செயல். சேத்பட் அ.நாகராசன் மேனாள் மாவட்ட செயலாளர்.திராவிடர்கழகம்.
@DP-qp8wr Жыл бұрын
அய்யா, கவிதைப் பித்தன் அவர்களின் தமிழ், கேட்க கேட்க திகட்டாது. அற்புத கவிஞர். வாழ்க பல்லாண்டு.
@pitchaivel.v.s9175 Жыл бұрын
கவிதைப் பித்தன் அண்ணணின் பேச்சு வழக்கம் போல் அருமை. கேட்க கேட்க தெவிட்டாதது.
@selvaradjek3473 Жыл бұрын
உங்களை போன்ற உணர்வாளர்கள். திறனாளர் கள் தமிழின் பாக்கியம்.
@dinakaran486311 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jayakumar816011 ай бұрын
🎉🎉🎉
@pugalenthi0077 Жыл бұрын
அருமை
@mathivananp606 Жыл бұрын
Iyya valthukkal valga Pallandu valaga
@ameeralishifana Жыл бұрын
Super
@sakazad4096 Жыл бұрын
Award for the best Dravidian from Dravidian family. Congratulations. Also my humble request to honour pillars/guardians of social justice who are working tirelessly..
@sukumaranm6745 Жыл бұрын
👍👍👍
@chelladurai4298 Жыл бұрын
🌻🌻🌻🌻🌻
@arjunpc3346 Жыл бұрын
💙🖤❤
@venthanbala15 Жыл бұрын
Kalan tamil thorki thulkan kolikaran karunanithi
@ganeshsankar8410 Жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா. வாழ்க வளமுடன்.❤
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
வாழ்க !!
@sivasankar4028 Жыл бұрын
Very Super explain Sir Valthukal... Dr.Kalaingar is great Samuganeethi Kavalar, writer , Politician, Excellent KALAINGAR and etc.,