Рет қаралды 83
பெற்றோரைப் பிறந்தகத்தைப்
பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில்
கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக்
குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில்
எனைப் பதியாய்க் கொண்டென்
நற்றவத்தால் என் வாழ்க்கைத்
துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை
இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும்
மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கிறேன்.
வாழ்த்தி மகிழ்கின்றேன்.
-அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வளமுடன்!
மனைவி நல வேட்பு வேதாத்திரி மகரிஷி அவர்கள்
மனைவி நல வேட்பு
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
“பெண் வயிற்றில் உருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்.
- அருட்தந்தை
வாழ்க்கையானது ஆண், பெண் என்ற இருவரும் இணைந்து தான் நடைபெறுகின்றது.
ஒரு குழந்தை அறிவுடையவனாக, திறமையுடையவனாக, நல்ல மகனாக/மகளாக வரவேண்டுமென்றால், ஆணும் பெண்ணும், தாயும் தந்தையும் சரிநிகர் சமானமாக சுதந்திரத்தோடு, அறிவு சுதந்திரத்தோடு இருத்தல் வேண்டும்.
நம் நாட்டின் பண்பாட்டின்படி பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் ஆவார்கள். ஏனெனில், கணவன் வீட்டிற்கு வரும்போதே தன் பெற்றோர், பிறந்த வீட்டு சூழ்நிலை அனைத்தையும் துறந்துவிட்டு தான் வருகிறாள்.
திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு துறந்த பிறகு, புகுந்த இடத்தில் அன்பு நாடி வந்த பெண்ணிற்கு ஆதரவு தர வேண்டியது அவசியம். மனைவி என்னும் மதிப்பில் மட்டுமல்லாது, பெண்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் தரக்கூடிய மதிப்பை வந்த பெண்ணிற்கு தர வேண்டும்.
கணவன், மனைவி உறவிலே இருக்கக்கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதை சரியாக உணர்ந்து நடப்போமேயானால் அதைவிட பெரிய இன்பம் இந்த உலகில் இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.
பொருள்கள் மேல் ஆசை படுவது போல், மறுபால் இனத்திடம் ஆசைப்படுவது பால் கவர்ச்சியாகும். இது கற்பொழுக்க கேட்டைச் சேர்ந்தது. கற்பு நெறி என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும். ஆயினும், சமுதாயத்தின் இயற்கையாய் அமைந்த உடலமைப்பின் காரணமாக பெண்களுக்கே பாதிப்பு அதிகமாக கூறப்படுகிறது.
" அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்.
தொல்லை தரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்.
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை, தியாகம், தகைமை காட்ட வேண்டும்.
தன் புகழ் விளங்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
பெண்களுடைய முன்னேற்றம்தான் குழந்தைகளினுடைய முன்னேற்றம்.
பெண்களுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.
பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.
“உலகம் முழுவதும் நான் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தேன். எல்லா நாடுகளிலும் தந்தை நாள் (fathers day), அன்னை நாள் (Mother's Day), கணவன் நாள் (Husband's Day), குழந்தைகள் நாள் ( Children's Day) எல்லாம் உள்ளன. ஆனால் மனைவி நாள் என்று இல்லை. அந்தக் குறையைப் போக்கவும், எல்லாம் வல்ல திருவுருவாம் பெண்ணினத்தைப் போற்றும் வகையில் அன்னை லோகாம்பாள் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ஆம் நாள் " மனைவி நல வேட்பு நாளாக கொண்டாடி மன நிறைவு பெறுவோம்."
- அருட்தந்தை
" பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன பெருமை
இதைவிட எடுத்து பேசுதற்கு”
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
மாக்கோலம
மனைவி நல வேட்பு நடத்தும் முறை
மனைவி நல வேட்பு நடத்தும் முறை
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அருளியபடி ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு நாள் விழா ஆகஸ்ட் 30- ல் மன்றங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தி வருகிறோம். அனைத்து மன்றங்களிலும் ஆசிரியர்கள் ஒரே மாதிரி நடத்துவதற்காக இந்த வழிகாட்டி குறிப்புகள் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நடத்தும் முறை
மெய்ப்பொருள் வணக்கம் : 05 நிமிடம்
2. தவம் - துரியம் : 10 நிமிடம்
3. வரவேற்புரை ( சிறப்பு விருந்தினரை கௌரவித்தல் ) : 10 நிமிடம்
4. அறிமுக உரை
( மனைவி நல வேட்பு விழா நோக்கம் - அருட்காப்பு விளக்கம், காந்த பரிமாற்ற தவவிளக்கம். : 20 நிமிடம்)
5. அருட்காப்பு
1. மனைவி - கணவனுக்கு
2. கணவன் - மனைவிக்கு ( அருட்காப்பு சொல்லிக்கொண்டே) - 02 நிமிடம்
6. காந்த பரிமாற்ற தவம் ( Trans Current Meditation) : 15 நிமிடம்
1) காந்தத்தை செயல்முறையில் உணரச் செய்தல் - பாவனை முறை
2) தம்பதியர் இருவரும் எதிரெதிர் திசையில் அமர்ந்து ஒருவரது வலது உள்ளங்கையோடு மற்றவரது இடது உள்ளங்கை வந்து சேருமாறு வைத்துக் கொண்டு தவம் இயற்ற வேண்டும்.
3) கண்களை நோக்குதல் - வாழ்த்துதல் 01 நிமிடம்
7) கணவன் மனைவிக்கு மலர் கொடுத்தல்
“ மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்ததற்கு நான் பாக்கியம் செய்தவன். உன்னை என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன்” என மலர் கொடுத்தல்.
8) மனைவி கணவருக்கு கனி கொடுத்தல்
“ இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக்குடும்பத்தில் என்னை ஏற்று மலரச்செய்து கனி போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளித்ததற்கு நன்றி கூறி இக்கனியை அளிக்கிறேன்.
9) கணவர் “பெற்றோரை பிறந்தகத்தை...." கவி சொல்லி வாழ்த்துதல் 05 நிமிடம்.
10) மீண்டும் கண்களை மூடி தம்பதியர்கள் உருவை நினைத்து வாழ்த்துதல் : 01 நிமிடம்
11) சிறப்பு தம்பதியினர் வாழ்த்துரை : 10 நிமிடம்
12) சிறப்பு அழைப்பாளர் சொற்பொழிவு : 40 நிமிடம்
13) நன்றியுரை
14) உலக நல வாழ்த்து