Рет қаралды 31,676
#MullipadiZamin #KadavurPrincipality
பாளையங்களின் நீட்சியாக ஜமீன்தாரி முறை ஆங்கிலேய அரசால் ஏற்படுத்ததப்பட்டது.
இந்தியாவில் ஜமீன்தாரி முறை முற்றிலும் நீக்கப்பட்டபிறகு, பல ஜமீன்தார்களின் பொருளாதார நிலை அவ்வளவாக சரியில்லாமால் போனாலும், சில ஜமீன்தார்கள் தங்களின் வாழ்வாதார நிலையினை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்து மக்களின் அன்பையும் பெற்று வணக்கத்துக்குரியவர்களாக உள்ளனர் என்பதற்கு, கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் சமஸ்தானம் என்றழைக்கப்படும் முள்ளிப்பாடி ஜமீன்தார்களை சொல்லலாம்.
விஜயநகரப் பேரரசின் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் தளவாய் அரியநாதரால் உருவாக்கப்பட்ட பாளையப்பட்டு முறையில் உருவானது முள்ளிப்பாடி பாளையம். இப்பாளையம் தற்போது கடவூர் ஜமீன் என்றும், கடவூர் சமஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சமஸ்தானத்தில் 41 வது பட்டமேற்றுள்ள வணக்கத்துக்குரிய திரு க. கருணை இராகவ முத்தையா (இராஜா மோகன் முத்தையா) மற்றும் தாய் என்று மக்களால் அழைக்கப்படும் திருமதி சுமதி கருணை இராகவ முத்தையா ஆகியோர்களுடனான நேர்காணலைத்தான் இந்த வலையொலியில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
Location Map: goo.gl/maps/Ui...