Рет қаралды 17,333
தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலினை விளாசினார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் சொத்து வரி, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் மக்கள் தலையில் சுமத்தியது திமுக அரசு.
இப்போது விக்கிரவாண்டி தேர்தல் முடிவு வெளியான கையோடு மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 65 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்கி இருக்கிறது. இதை இப்போது மக்கள் தலையில் சுமத்துகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மின் உற்பத்தியை பெருக்காமல் விலைக்கு வாங்கினால் மின் கட்டண உயர்வுக்கு தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி வீடியோ போட்ட முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுக்கிறார்.#Annamalai #electricitybill #mkstalin #dinamalar