Рет қаралды 28,766
சிவகுமார் தற்போதைய தமிழ்த் திரைப்படத்தின் பல்துறை நடிகர்களில் ஒருவர். நான்கு தலைமுறைகளாக நீடிக்கும் முன்னணியிலும், ஆதரவாகவும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் காக்கும் கரங்கள் (1965) திரைப்படத்தில் அறிமுகமானார். தொழிலில் நுழைந்ததால் பழனிச்சாமி சிவகுமார் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த படம் 19 ஜூன் 1965 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் மூலம் திறமையான நடிகருக்கான கதவுகள் திறந்தது. இவர் அனைத்து வகைகளிலும் எந்த பாத்திரத்தையும் நேர்த்தியுடன் கொண்டு செல்ல முடியும்.
சிவகுமார் நடிப்பின் திறன்களை மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. நடிப்பிற்கான இவரது அர்ப்பணிப்பு இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களான சரஸ்வதி சபதம்(1966), கந்தன் கருணை (1967), திருமால் பெருமை (1968) மற்றும் உயர்ந்த மனிதன் (1968) போன்றவற்றிலிருந்து நன்கு அறியப்பட்டதாகும். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் வெற்றி பெற்ற ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) மற்றும் மிகவும் பிரபலமான கே பாலசந்தரின் சிந்து பைரவி (1985) திரைப்படங்களில் நடித்துள்ளார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), வண்டிச்சக்கரம் (1980) ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (தெற்கு) வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது -(2007)ஆம் ஆண்டில் பெற்றார். இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்அவன் அவள் அது (1980) மற்றும் அக்னி சாட்சி (1982) ஆகிய திரைப்படங்களுக்குப் பெற்றார்.
இவர் மூன்று தலைமுறைகளில், எம்ஜி ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரசினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத் குமார், பிரபு கணேசன், கார்த்திக், மோகன், அர்ஜுன் சர்ஜா, அஜித் குமார், விஜய், விக்ரம் மற்றும் சூர்யா உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ராதிகாவுடன்இணைந்து சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
2012 ஆம் ஆண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெயா தொலைக்காட்சி வாழ்நாள் சாதனையாளர் விருதை சிவகுமாருக்கு வழங்கி கௌரவித்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகிற்கு இவர் செய்த பாராட்டத்தக்க பங்களிப்புக்காக இவரை கௌரவிப்பதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டது.
சமீபத்திய காலங்களில், இந்து இறையியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தனது கருத்தைத் தெரிவித்த இவர் பொதுப் பேச்சில் இறங்கினார். இவருடைய சரளமான பேச்சுகளுக்காக பாராட்டப்பட்டார்
#trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shortvideo #shots #shortsyoutube #Shorts